6 அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த கட்சிகளில் உள்ளகத்தில் காணப்படுகின்ற பிரச்சினை காரணமாக, கட்சிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளமையினால் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றார்.
இந்த கட்சிகளின் நிர்வாகத்திற்காக சில தரப்பினர் முன்வந்துள்ளமையினால், சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த கட்சிகளின் தொடர்பில் நீதிமன்ற வழக்குகள் நிறைவு பெறும் வரை அல்லது சரியான தீர்மானமொன்று எட்டப்படும் வரை கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
சட்ட நடவடிக்கைகள் நிறைவு பெறும் வரை, குறித்த கட்சிகள் தேர்தலுக்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியாது எனவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றார்.