
Monday, February 9, 2026

நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல.. - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

யோஷித ராஜபக்ஷ, டெய்சி ஆச்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
![]() |
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் இன்று விசாரணைக்கு வந்தது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஆக்ஸ்வால்ட் பெரேரா, பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் விசாரணையைத் தாங்கும் அளவுக்கு மனரீதியாகத் தகுதியானவரா என்பது குறித்து கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி மூலம் கோரப்பட்ட நிபுணர் மருத்துவ அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, தொடர்புடைய விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை வழக்கை விசாரிக்க வேறு திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தை கோரினார்.
முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.

சாட்சியங்கள் நுணுக்கமான முறையில் அழிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

அனுராதபுரம் – தம்புத்தேகம கூட்டுறவுச் சங்க தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றி
இங்கு இடம்பெற்ற 17 உறுப்பினர்களுக்கான தேர்தலில் NPP (தேசிய மக்கள் சக்தி) சார்பிலேயே 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சஜித்தின் சமகி ஜன பலவேகய , பொதுஜன பெரமுன , ஐக்கிய தேசிய கட்சி , திலித் ஜெயவீரவின் பதக்கம் உள்ளீட்ட எதிர்கட்சியினர் ஒரு ஆசனம் கூட வெல்லவில்லை.
அதற்கமைய, தம்புத்தேகம கூட்டுறவுச் சங்க தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றி பெற்றுள்ளனர்.

அனர்த்தத்தால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு!
டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம், செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய கால்நடை அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், மாடுகள், பன்றிகள், ஆடுகள், பிரொய்லர் கோழிகள் அழிக்கப்பட்ட பண்ணைகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த இழப்பீட்டுத் தொகைகளுக்கு மேலதிகமாக, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், உலக வங்கி உதவியின் கீழ் இதற்காக ரூ.2.5 பில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விலங்குகளை நோய்களில் இருந்து பாதுகாப்பதே இந்த தடுப்பூசி செயல்முறையின் நோக்கம் என்றும், இது சுமார் 2 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
மேலும் அனர்த்தங்களால் அழிக்கப்பட்ட பண்ணைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான ஆதரவும் வழங்கப்படும் என்றும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதிகரிக்கப்படும் தபால் கட்டணங்கள்

ஆசிரியர் நியமன வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு

இலங்கையின் மனிதாபிமான திட்டத்திற்கு 22.4 மில்லியன் டொலர் உதவி
இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்திற்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த டிசம்பர் மாதம் முதல் 2026 ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் டித்வா' புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதிர்பார்க்கும் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபைக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நாடுகளிடமிருந்து நிதியுதவி கிடைத்துள்ளது.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் அண்மைய தரவுகளின்படி, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இதுவரை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 216,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் கல்வி, உணவு, போசணை, பாதுகாப்பு, சுகாதாரம், தங்குமிடம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் மற்றும் மண்சரிவு சேதங்கள் 'டித்வா' புயலினால் ஏற்பட்டதோடு, இது நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள சுமார் 2.2 மில்லியன் மக்களைப் பாதித்தது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்படி, 2025 டிசம்பர் 29 ஆம் திகதியாகும் போது புயல் காரணமாக 646 பேர் உயிரிழந்துள்ளதுடன், 173 பேர் காணாமல் போயுள்ளனர்.
புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான பங்காளிகள், சர்வதேச மற்றும் தேசிய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனியார் துறையினதும், இருதரப்பு மற்றும் பலதரப்பு உதவிகளின் ஆதரவும் கிடைக்கிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு தேவையான திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை அனர்த்த முகாமைத்துவ நிலையம், அமைச்சுக்கள், மாவட்ட மற்றும் பிரதேச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன

மோசமான வானிலை காரணமாக மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்பு
அமைச்சரின் கூற்றுப்படி, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
அத்துடன், மாகாண சபைத் தேர்தல்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து கட்டம் கட்டமாக நடத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தயார்நிலையிலும் இல்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளும் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பின் கீழ் தேர்தலை நடத்துவதாயின், தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை அங்கீகரிக்கப்படுவது கட்டாயமானது என ‘பெபரல்’ (PAFFREL) அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
50% தொகுதி அடிப்படையிலும், 50% மேலதிகப் பட்டியலிலிருந்தும் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் புதிய முறையை நடைமுறைப்படுத்துவதாயின், எல்லை நிர்ணய பணிகள் நிறைவடைய வேண்டும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செயன்முறைகள் காரணமாக தேர்தல் ஜூன் அல்லது ஜூலை மாதம் வரை ஒத்திவைக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள அனைத்து மாகாண சபைகளினதும் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்து தற்போது பல வருடங்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்வித் துறையில் தற்போது நாளுக்கு நாள் நெருக்கடியான சூழ்நிலை உருவெடுத்து வருகின்றன
கல்வித் துறையில் மனிதவள முகாமைத்துவம் தொடர்பாக கடந்த காலங்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கல்வித் துறையில் மனிதவளத்தை ஏமாற்றமடையச் செய்யும் கொள்கை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் விவகாரத்தில் அரசாங்கம் நடந்து கொண்ட விதம் போலவே இந்த விவகாரத்திலும் அரசாங்கம் நடந்து வருகின்றது.
அதிபர் சேவையின் 3 ஆம் தரத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை 2019 இல் நடைபெற்றது. முதல் சுற்றில் 1858 பேரும், இரண்டாவது சுற்றில் 4800 பேரும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இருப்பினும், மேலும் 1216 பேர் தங்கள் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதிபர் சேவையில் சேரத் தயாராக உள்ளனர். ஆனால் தற்போதைய அரசாங்கம் இவர்களை நியமிக்காமல் புதிய போட்டிப் பரீட்சையை நடத்தி அவர்களை ஆட்சேர்ப்பு செய்யவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
3 ஆம் தர அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து இன்னும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படாத தரப்பினரை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசாங்கத்திடம் திறமையான மற்றும் முறையான திட்டமொன்று இல்லாததன் காரணமாக, கல்வித் துறையில் பாரிய சரிவு ஏற்பட்டுக் கொண்டு வருகின்றன.
கல்வி அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை கல்வியை ஆபாசமயப்படுத்தியதால் கல்விச் சீர்திருத்தங்கள் நாசமடைந்து போயுள்ளன. பிரதமர் ஒன்றைச் சொல்கிறார், ஜனாதிபதி வேறொன்றைச் சொல்கிறார். இவ்வாறு இருவரும் முரணான கருத்துக்களைச் சொல்லி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்துக்களால், கல்வித் துறையில் பிள்ளைகளும் மனித வளங்களுமே பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.
கல்வித் துறைக்கு ஏற்கனவே ஏற்பட்டுள்ள பாதிப்பு கடுமையானது என்பதால், மேலும் இங்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது, அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் ஏலவே சித்தி பெற்றவர்களை இணைத்துக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
Sunday, February 8, 2026

நாடு முழுவதிலும் 4000 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நீதிமன்றில்!
1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டத்திற்கு அமைய இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 வழக்குகள் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அவற்றில் 1,683 வழக்குகள் ஜனவரி மாதத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்ததாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
சிறுவர்கள் தொடர்பான ஆபாச வெளியீடுகள், பாலியல் உறவுக்காகச் சிறுவர்களை வாடகைக்குப் பெறுதல் அல்லது பணியில் அமர்த்தல், கொடுமைக்கு உட்படுத்தல், பாலியல் வன்புணர்வு மற்றும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றங்கள் தொடர்பில் சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
