Our Feeds



Tuesday, March 10, 2026

Zameera

நீர்கொழும்பு, கட்டான பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு


நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல் 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 


இதன்படி, நீர்கொழும்பு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகள், கட்டான பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் எத்தியாவல, ஜன்குரவெல, களுவரிப்புவ, மிரிஸ்வத்த, கோன்கொடமுல்ல, ஹல்பே, எண்டிமுல்ல, அம்பலாயாய, தோப்புவ, வைக்கால் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 


பம்புகுலிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 


ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள சபை, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

SHAHNI RAMEES

போர் பதற்றம் - பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பள்ளிகளுக்கு விடுமுறை!

 


மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும்,

SHAHNI RAMEES

30 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல், டீசல் இருப்பு இருந்தபோதிலும், விலை கூடுவதற்கான காரணம்!

 


நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான

SHAHNI RAMEES

மூன்று மாதங்களுக்குள் இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க திட்டம்!

 

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை

SHAHNI RAMEES

யாழில் பள்ளிவாசலுக்குள் வாளுடன் சென்ற இளைஞன்! பொலிஸார் தீவிர விசாரணை

 


யாழில் நேற்று திங்கட்கிழமை (9) இரவு பள்ளிவாசல்

Zameera

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேகநபர் கைது!


 கொழும்பு - ஜிந்துப்பிட்டி பகுதியில், கடந்த ஜனவரி 16ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது, ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய, கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று திங்கட்கிழமை (09)  சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் உடவளவை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு துப்பாக்கிதாரி கடந்த 03ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். 

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது சந்தேகநபர் தொடர்பில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.  


Zameera

லெபனானில் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு


 தற்போதைய போர் மோதல்கள் காரணமாக லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


அரசாங்கத்தினால் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக 560 தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக லெபனானின் சமூக விவகார அமைச்சர் ஹனின் சையத் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஈரானின் முன்னாள் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல், லெபனான் மீது பதில் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHAHNI RAMEES

டீசல் விலை உயர்ந்த போதிலும் பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை

 

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து
Zameera

மஹபொல கொடுப்பனவு ரூ.10,000 ஆக உயர்வு


பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு 2026 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

2026 ஜனவரி மாதத்திற்குரிய 10,000 ரூபாய் புலமைப்பரிசில் கொடுப்பனவு, நாளை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

மஹபொல நம்பிக்கை நிதியம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக திறைசேரியினால் கூட்டாக மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவனவிற்கு நிதியளிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள ஏற்பாடுகளின்படி, 48 வீதம் மஹபொல நம்பிக்கை நிதியத்தாலும், 52 வீதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக அரசாங்கத்தாலும் வழங்கப்படுகிறது.
Zameera

ஈரான் கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர்களை அவர்களின் தாய்நாட்டுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - ரோஹித்த அபேகுணவர்த்தன


 (எம்.ஆர்.எம்.வசீம்)


ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை அரசாங்கம் யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், சர்வதேச சட்டத்துக்கமைய அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.


ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாத்து உயிர்களை பாதுகாப்பதற்கு எடுத்த நடவடிக்கைக்கு அரசாங்கத்துக்கு எமது கெளரவத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அரசாங்கம் செய்யும் நல்ல விடயங்களை நல்லது  என தெரிவிப்பதற்கு  நாங்கள் ஒருபோதும் கஞ்சப்பட போவதில்லை. கப்பலை பாதுகாக்க எடுத்த உறுதியான தீர்மானம், இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வே எடுத்திருக்கிறார். அவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கு முதுகெலும்பு இருக்கும் தலைவர் இருக்க வேண்டும்.


அதேநேரம் ஈரான் கப்பலில் இருந்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததுபாேன்று, யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபனியாது சர்வதேச சட்டங்களுக்கு அமைய அவர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகும் நாங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போம். 


ஏனெனில் இந்த யுத்தத்தில் நாங்கள் யாருடைய பக்கத்தையும் எடுத்துக்கொள்ளாமல் நாங்கள் சுயாதீன நாடு என்பதை உலகுக்கு காட்ட வேண்டும். வல்லரச நாடுகளின் தலைவர்களுக்கு எப்போதும் பொறுமையும் செயற்படும் ஆற்றல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தான் நினைத்ததை செய்யும் போக்கு இருக்க முடியாது. கடலில் இருந்த ஈரான் கப்பலை தாக்காமல் அமெரிக்காவுக்கு அதனை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, கைப்பற்றி இருக்கலாம். அதுதான் வல்லரசு நாடுகளின் தலைவர்களின் நடவடிக்கையாக இருந்திருக்க வேண்டும்.


ஆனால் இன்று எங்களுக்கு மனித உரிமை தொடர்பில் கற்றுத்தரும் இவர்கள்தான் அப்பாவி உயிர்களை போக்கி இருக்கிறார்கள். எமது நாட்டில் 2009ல் யுத்தம் முடிவடைந்து தற்போது 2026 ஆகியும் மனித உரிமை மீறியதாக  எமது ராணுவ வீரர்களை தூக்கில் போடுவதற்கு முயற்சித்து வருகிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ்வை தேடுகிறார்கள். ஆனால் இன்று இவர்கள் காலை முதல் மாலை வரை அப்பாவி உயிர்களை கொன்று வருகிறார்கள். இதன்போது மனித உரிமை என ஒன்றும் பார்ப்பதில்லை. 


அதனால் அரசாங்கம் இந்த யுத்தத்தின்போது யாருடைய பக்கமும் இருக்காமல் சர்வதேச சட்டத்திற்கமை செயற்பட்டு தைரியமாக தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

Zameera

பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்


 பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குணதாச சமரசிங்க, இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும்போது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

Zameera

தேசிய நிறுவனங்களை பாதுகாப்பதாக கூறிய தற்போதைய அரசாங்கம் இன்று மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது - சஜித் பிரேமதாச


 நமது நாட்டின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன்பு மக்கள் விடுதலை முன்னனியின் நிலைப்பாடாக அமைந்து காணப்பட்டன. இன்று அரசாங்கம் இலங்கை மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவிப்புச் செய்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திங்கட்கிழமை (09) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவித்தார்.


முன்பு மின்சார சபையின் 23,000 தொழிலாளர்களை வீதிகளுக்கு இறக்கி மின்சார சபையில் கைவைக்க விட மாட்டோம் என்று மக்களை ஏமாற்றி, இன்று அரச அதிகாரத்தை கைப்பற்றி மின்சார சபையை பல நிறுவனங்களாக பிரித்து வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதில் சீர்திருத்தமும் மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும் இந்நிறுவனத்தை இல்லாதொழிக்க மக்கள் இடமளிக்கவில்லை. தேசிய நிறுவனங்களை பாதுகாக்கவே மக்கள் இடமளித்தனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 



நாட்டின் மின்சக்தித் துறை தேசிய பாதுகாப்பை நேரடியாக பாதிக்கிறது என்பதால், இதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை இதை விட அதிக சிந்தனையுடனும் பொறுப்புணர்வுடனும் மற்றும் வகைகூறலுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும். இன்று 23,000 தொழிலாளர்கள் அனாதையாக்கப்பட்டுள்ளனர். இந்த தொழிலாளர்களை பலிகடாக்கி ஜனாதிபதி பதவி உள்ளிட்ட அதிகாரத்தை பெற்று அதிகார ஆடம்பர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு தற்போதைய ஆளும் தரப்பினர் மின்சார சபையையும் தொழிலாளர்களையும் அனாதையாக்கியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இவ்வாறு பொய் சொன்னது ஏன் என்று கேள்வி எழுப்புகிறோம். இந்த மறுசீரமைப்புகளுக்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பிருந்தே எதிர்த்த தற்போதைய அரசாங்கம், இன்று மக்கள் ஆணையை காட்டிக்கொடுத்துள்ளது. இந்த மறுசீரமைப்புகளை தொழிலாளர்களுடன் கலந்தாலோசித்து அவர்களினது வேலைவாய்ப்பைப் பாதுகாத்துக்கொண்டு  முன்னெடுத்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முடிவுகளை எடுக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


ஏற்கனவே நுரச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை அழித்த இந்த அரசாங்கம் இப்போது மின்சார சபையையும் நாசமாக்கியுள்ளது. நமது நாட்டின் ஆற்றல் துறையை ஆபத்தில் தள்ளி, மின்சார சபையின் 23,000 பேரின் எதிர்காலத்தை இந்த அரசாங்கம் இருளுக்கு இட்டுச் சென்றுள்ளது. இனியாவது இவர்களால் ஏமாற வேண்டாம். இது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Monday, March 9, 2026

SHAHNI RAMEES

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து!

 

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள