Our Feeds



Saturday, May 16, 2026

Zameera

தோட்ட மக்களின் காணி உரிமை உறுதி செய்ய வேண்டும் - கணபதி கனகராஜ்




 தோட்ட குடியிருப்பு பிரதேசங்களின் உரிமை தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதை தோட்ட நிர்வாகங்களில் கட்டுப்பாட்டில் இருந்து முற்றாக விடுவிக்க வேண்டும் அவ்வாறு நடந்தால் மட்டுமே தோட்ட குடியிருப்பாளரின் காணி உரிமைக்கு அர்த்த புஷ்டியான ஆரம்பத்தை ஏற்படுத்த முடியும். என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.




மலையக பெருந்தோட்டங்களில் காணப்படுகின்ற காணிகளை பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அதேபோல தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் வாழுகின்ற குடியிருப்பாளர்கள் பல்வேறு வகையில் அடையாளப்படுத்தப்படுகின்றனர். அதாவது தோட்டக்காணிகளில் ஒரு பகுதி பெருந்தோட்ட பயிர்கள் பயிரிடப்பட்டதாகவும் மற்றைய காணிகள் தரிசு நிலங்களாகவும், ஒரு சிறு பகுதி தோட்ட குடியிருப்பாளர்களின் விவசாய மற்றும் கால்நடைகளுக்கான புத்தரைகளாகவும் காணப்படுகின்றன. இதே போல தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் தோட்ட கம்பனிகளின் கீழ் வேலை செய்கின்ற நிரந்தர மற்றும் கம்பனிகளினால் பல்வேறு வகையாக வகைப்படுத்தப்பட்டு டிருக்கின்ற தொழிலாளர்களின் குடியிருப்புகள், தோட்ட கம்பனிகளின் கீழ் வேலை செய்யாதவர்களின் குடியிருப்புகள். என்ற வகையில் காணப்படுகின்றன. இவற்றுள் தோட்டத்தில் வேலை செய்கின்றவர்களைத் தவிர ஏனைய குடியிருப்பாளர்கள் தோட்ட கம்பனிகளினால் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடாத்தப்படுவதுடன் இவர்களின் எவ்வித அடிப்படைத் தேவைகளுக்கும் கம்பனிகள் இடங் கொடுப்பதில்லை. இதைத் தவிர தற்காலிக குடில்களில் வசிப்பவர்கள் என்ற இன்னொரு வகை குடியிருப்பார்களும் தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் குடியிருப்பு பிரதேசங்களில் காணப்படுகின்ற வழிபாட்டுத் தலங்கள் மைதானங்கள் சன சமூக நிலையங்கள் போன்ற பொது நிறுவனங்களின் முழுமையான கட்டுப்பாடும் தோட்ட கம்பனிகளின் பிடியில் இருக்கின்றன.




தற்போது மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பாக பலமான கோஷங்கள் வெளிப்பட்டு வருகின்றன. இது காணி உரிமை தொடர்பான மிக ஆரோக்கியமான விடயமாக காணப்படுகிறது. எனினும் நாம் பெருந்தோட்ட கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற எந்த காணிக்கான உரிமையை கேட்கின்றோம்? எவ்வளவு காணிகளை கேட்கின்றோம்? தோட்டக் குடியிருப்பு பிரதேசங்களில் வாழ்கின்ற சகல குடியிருப்பாளர்களையும் எவ்வாறு உள்ளடக்க போகிறோம் என்பனவற்றில் தெளிவில்லாத ஒரு குழப்ப நிலை காணப்படுகிறது. அரசாங்கமும் தோட்ட கம்பனிகளும் தோட்டங்களில் வேலை செய்கின்ற நிரந்தர தொழிலாளர்கள் மட்டுமே தோட்ட குடியிருப்பாளர்கள் என்று வரையறுக்க முற்படுகின்றன. இந்நிலையில் நாம் அதிகார தரப்பிடம் எவ்வாறான நிலைப்பாட்டை முன் வைப்பது என்பது தொடர்பான ஒரு பொதுவான ஒருமைப்பாட்டுக்கு வர வேண்டியது நமது முதலாவது பணியாக இருக்க வேண்டும். 




தற்போதைய ஜனாதிபதி தேர்தல் காலங்களில் 200 வருடங்களாக இந்த நாட்டின் பொருளாதாரத்துக்காக உழைத்த மக்களுக்கு ஒரு துண்டு காணியை கொடுக்கக் கூடாதா? என கேள்வி எழுப்பினார். ஆனால் அவர் பதவிக்கு வந்த பின் நடந்த நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தோட்ட குடியிருப்பாளர்களின் காணி தொடர்பான கேள்விக்கு ஒன்பது லட்சம் பேச் காணி எவ்வாறு வழங்க முடியும்? என ஜனாதிபதியே கேள்வி கேட்கிறார். இது இந்த நாட்டின் எல்லாத் தலைவர்களின் பொதுவான நிலைப்பாடு இதற்கு தற்போதைய ஜனாதிபதி விதிவிலக்கானவர் அல்ல என்பதை நாம் உணர வேண்டும். 




எனவே நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடியதாகவும் அதே நேரத்தில் அதிகாரத் தரப்பினரை அதை ஏற்றுக்கொள்ள செய்வதாகவும் அமைய வேண்டும். தற்போது பெருந்தோட்டங்களில் தோட்ட முகாமைக்கும், மக்களுக்கும் ஏற்படுகின்ற பெரும்பாலான பிரச்சனைகள், அசம்பாவிதங்கள், மோதல்கள் ,கருத்து வேறுபாடுகள் போன்றவை தோட்ட குடியிருப்பை மையமாக வைத்தே ஏற்படுகின்றன. இதற்கு அப்பாவி மக்களின் பிரச்சனைகளை சரியாக விளங்கிக் கொள்ளாத தோட்ட முகாமையாளர்களின் அடாவடித்தனமும் அடக்கு முறையும் மேலோங்கி இருப்பதே காரணமாகும். பெருந்தோட்ட கம்பனிகள் உற்பத்தி, விற்பனை, லாபமிட்டல் போன்ற விடயங்களில் ஈடுபடுவது முக்கியமானதாகும். அதை விடுத்து வீடுகளை உடைப்பது, தோட்டங்களில் வேலை செய்யாத குடியிருப்பாளர்களை அச்சுறுத்துவது, குடியிருப்பாளர்களை தோட்டங்களில் இருந்து வெளியேற்றுவது போன்ற அனாவசிய நடவடிக்கைகள் அவர்களுக்கு தேவையற்றது. நம்மால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. பெருந்தோட்ட முகாமையாளர்களின் இந்த நடவடிக்கையை முடிவுருத்த ஒரே வழி அவர்களின் குத்தகை கால ஒப்பந்த முடியும் வரை அவர்களின் நடவடிக்கைகளை தோட்டங்களில் பெருந்தோட்ட பயிர்கள் பயிரிடப்பட்ட பிரதேசங்களுடன் மட்டும் மட்டுப்படுத்தி வைக்க வேண்டும். தோட்ட குடியிருப்பாளர்கள் பயன்படுத்துகின்ற குடியிருப்புகள், மரக்கறி பயிர் செய்யப்படுகின்ற காணிகள், கால்நடை வளர்ப்பிற்கான புத்தரைகள், தோட்டக் குடியிருப்பு பிரதேசங்கள் இருக்கின்ற பொதுப் பயன்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தோட்ட கம்பனிகளுக்கு இருக்கின்ற ஆதிக்கத்தை ரத்து செய்து விடுவித்துக் கொள்ள வேண்டும். இதுவே மலையக மக்களின் காணி உரிமைக்கான ஆரம்ப புள்ளியாகவும், அதிகாரத் தரப்பு ஏற்றுக்கொள்ளும் தீர்வாகவும் அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Friday, May 15, 2026

Zameera

லக்ஷ்மன் யாப்பா தாக்கல் செய்த மனு பரிசீலனைக்கு


 இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு வழக்கினை தள்ளுபடி செய்யுமாறு கோரி, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி அழைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Zameera

ஆசிரியர் சேவையை இந்நாட்டின் அதிக சம்பளம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு


 ஆசிரியர் சேவையை இந்நாட்டின் அதிக சம்பளம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். 


வனாதவில்லுவ, நாகமடுவ மகா வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 


அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, உலகை உருவாக்கும் ஆசிரியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக படிப்படியாக சம்பளத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டினார். 


நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2021 ஆம் ஆண்டு முதல் தாமதமடைந்திருந்த ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இவ்வருடம் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 


அதன்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


எதிர்வரும் நாட்களில் அதற்கான போட்டிப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதுடன், எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைகளின் அடிப்படையில் வெளிப்படையான முறையில் இந்த ஆட்சேர்ப்புகள் இடம்பெறவுள்ளன. 


தற்போதுள்ள பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வியினால் பிள்ளைகளுக்குப் புறப்பாடச் செயற்பாடுகள் தவறிப்போயுள்ளதாக பேராசிரியர் சந்தன அபேரத்ன இதன்போது சுட்டிக்காட்டினார். 


கடந்த சித்திரைப் புத்தாண்டு காலத்தில் நீரில் மூழ்கி இடம்பெற்ற மரணங்களைக் கவனத்திற் கொள்ளும்போது, பிள்ளைகளுக்கு நீச்சல் போன்ற உயிர்பாதுகாப்புத் திறன்களை வழங்குவதன் முக்கியத்துவம் தெளிவாகுவதாகவும் அமைச்சர் கூறினார். 


பாடத்திட்டங்களைத் திருத்தியமைத்து கல்வி முறையில் புதிய மாற்றமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் எதிர்காலத்தில் தரம் 09 இல் தேசிய மட்டத்திலான பரீட்சையொன்றை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வெளிப்படுத்தினார். 


இதன் மூலம் பிள்ளைகள் தமது விருப்பத்திற்கேற்ப கல்வி சார் துறைக்கோ அல்லது தொழிற்கல்வி துறைக்கோ செல்லும் வாய்ப்பு ஏற்படுவதுடன், அதற்காக சுமார் 50 தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மேலும் தெரிவித்தார்.

SHAHNI RAMEES

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி பகுதியில் ஸ்கேனிங் முறையை பயன்படுத்த அனுமதி!

 


குருக்கள்மடம் மனிதப்புதைகுழி என அடையாளம்

SHAHNI RAMEES

ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

 


பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம்

SHAHNI RAMEES

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு! - ஈரானுக்கு, சீனாவில் இருந்து ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை!

 


ஈரானுடன் நிலவும் போர்ச் சூழல் தொடர்பில் தனது

Zameera

அம்பாறையில் மீண்டும் எரிபொருள் வரிசை



மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.



குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் மாலை முதல் காலை வரை நீண்ட வாகன வரிசை காணப்படுகின்றது.



சில பகுதிகளில் நேற்று (14) இரவு மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.



தற்போது எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



எனினும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு மீள வாகன வரிசையை ஏற்படுத்தியுள்ளனர் என மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.



எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலர் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 



எனினும் சில எரிபொருள் நிலையங்களில் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையுமின்றி விநியோகிக்கப்படுகிறது.



இது தவிர எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்பதற்காக ஒரு சில எரிபொருள் நிலையங்களில் இவ்வாறு வரிசைகள் உருவாகியுள்ளதாக குறிப்பிடபப்டுகின்றது.



பாறுக் ஷிஹான்

 

Zameera

ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை




 ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 


சிலாபம் மேல் நீதிமன்றத்தினால் இன்று (15) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்தார். 


இதற்கு மேலதிகமாக, தாக்குதலுக்குள்ளான பிரதேச செயலாளருக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


அந்த 10 இலட்சம் ரூபாயைச் செலுத்தத் தவறினால், மேலும் 24 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் சிலாபம் மேல் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 


ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 


இருப்பினும், சனத் நிஷாந்த 2024 ஜனவரி 25 அன்று கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தமையால், இன்று நீதிமன்றத்தில் அவரது சகோதரர் ஜகத் சமந்த மாத்திரமே முன்னிலையாகியிருந்தார். 


குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாட்சியங்கள் மற்றும் விடயங்களை ஆராய்ந்த பின்னரே இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

SHAHNI RAMEES

இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயார்!

 


இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும்

SHAHNI RAMEES

சீரற்ற வானிலையால் இதுவரை 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்!

 

நாட்டின் சில மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை
Zameera

பாராளுமன்றம் மே 19 முதல் 22 வரை கூடுகிறது


 பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்தார்.


பிரதி சபாநாயகர்  ரிஸ்வி சாலி  தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்றம் கூடும் தினங்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.


அதன் பிரகாரம் பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், காலை 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 10.00 மணி முதல்  11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், 11.00 மணி முதல்  11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.


19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல்  5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மறுநாள் 20ஆம் திகதி புதன்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை குறித்த ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்


21ஆம் திகதி வியாழக்கிழமை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.


22ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை  5.00 மணி வரை காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, எஸ்.ஜீ.முதுகுமாரண, சந்திரதாஸ கலப்பதி, நந்தன குணதிலக, ஜனக் மஹேந்திர அதிகாரி மற்றும் கனகசபை தம்மன்பிள்ளை ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல்  5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Zameera

யாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி


 யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 


வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார். 


வயலில் தொழிலில் ஈடுபட்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


உயிரிழந்த இளைஞனின் சடலம் சங்கானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 


சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


-யாழ். நிருபர் பிரதீபன்-

Zameera

21 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு


 நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 21 பிரதான நீர்த்தேக்கங்களும், 19-க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்கின்றன. 


நீர்ப்பாசன பணிப்பாளர் நீர் முகாமைத்துவ பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் குறிப்பிடுகையில், இன்று (15) காலை 6.00 மணி நிலவரப்படி இந்த நிலைமை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். 


அநுராதபுரம் மாவட்டம்: ராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் யாண் ஓயா நீர்த்தேக்கம். 


பதுளை மாவட்டம்: அம்பேவெல நீர்த்தேக்கம். 


ஹம்பாந்தோட்டை மாவட்டம்: லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில யோத வாவி மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கம். 


குருநாகல் மாவட்டம்: அம்பகொல வாவி, உஸ்கல சியம்பலன்கமுவ, மெதியாய, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கம். 


கண்டி மாவட்டம்: நாலந்தா மற்றும் வாமடில்ல நீர்த்தேக்கங்கள். 


மொனராகலை மாவட்டம்: ஹதபானகல மற்றும் அலிகொடஆர நீர்த்தேக்கங்கள். 


புத்தளம் மாவட்டம்: இகிணிமிட்டிய மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்கள். 


மன்னார் மாவட்டம்: யோத வாவி. 


அதேநேரம் இன்று காலை 6.00 மணியளவில் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1,600 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படுகிறது. 


லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 4 அங்குலம் வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1,740 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. 


வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 3 அங்குலம் வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 700 கன அடி நீர் மாணிக்க கங்கைக்கு திறந்து விடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 


அலிகொடஆர நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 680 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்கு திறந்து விடப்படுகிறது. 


யாண் ஓயா நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு கதவு 6 அங்குலமாகவும், ஏனைய இரண்டு கதவுகள் தலா 4 அங்குலம் வீதமும் திறக்கப்பட்டுள்ளன 


தப்போவ நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.