Our Feeds



Monday, September 14, 2026

Zameera

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

 


நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் (14) 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 




வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




அதற்கமைய, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். 




அதேநேரம் ஏனைய பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது. 




அத்துடன் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் . 




இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


Sunday, September 13, 2026

Zameera

ஊழல் நிறைந்த அரசியலுக்கு இனி நாட்டில் மீண்டும் ஒருபோதும் இடம் கிடைக்காது

 

நாட்டில் பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 


கடந்த காலத்தில் காணப்பட்ட ஊழல் நிறைந்த அரசியலுக்கு இனி நாட்டில் மீண்டும் ஒருபோதும் இடம் கிடைக்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 


"எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்" என்ற கருப்பொருளின் கீழ் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் மக்கள் பேரணித் தொடரில், கஹட்டகஸ்திகிலிய நகரில் இன்று பிற்பகல் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். 


அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

SHAHNI RAMEES

ஞானசார தேரரை காணவில்லை!

 


போது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர்

SHAHNI RAMEES

இந்தோனேசியா: 240+ பயணிகளுடன் ஜாவா கடலில் காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு!

 


இந்தோனேசியாவுக்குச் சொந்தமான ஜாவா கடல் பகுதியில்

Zameera

நாடு முழுவதும் 730 சந்தேகநபர்கள் கைது

 


முழு நாடும் ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 730 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் போது 11 சந்தேகநபர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள், மொத்தம் 724 சுற்றிவளைப்புகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சுற்றிவளைப்புகளின் போது 423 கிராம் ஹெரோயினும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக 550 கிராம் ஐஸ் போதைப்பொருள், 405 கிராம் கஞ்சா மற்றும் 2,589 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Zameera

15 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை

 


இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைய, ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,567,007 ஆகும்.

அதேவேளை, செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 31,885 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை கடந்துசென்ற காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 395,377 ஆகும்.

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 152,625 பேரும், சீனாவிலிருந்து 102,473 பேரும், ஜெர்மனியிலிருந்து 91,763 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதன்படி இந்தியாவிலிருந்து 9,897 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.


Zameera

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற உணவகத்திற்கு ரூ. 5 இலட்சம் அபராதம்

 


500 மி.லீ. குடிநீர் போத்தலை ரூ. 100 க்கு விற்ற ஹோமாகமவில் உள்ள பிரபல உணவகத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்றமை தொடர்பில், ஹோமாகம, கலவிலவத்தை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு எதிராக  நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

 


2025.12.11 அன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அப்போது நடைமுறையில் இருந்த இலக்கம் 2430/15 விசேட வர்த்தமானி அறிவித்தலின் கட்டளை எண் 93 இன் பிரகாரம் 500 மில்லிமீற்றர் உள்நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் போத்தலுக்கான அதிகபட்ச சில்லறை விலை ரூ. 70 ஆக இருந்தபோதிலும், அந்த நீர் போத்தல் ரூ. 100 க்கு விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.

 


இந்த வழக்கு கடந்த (10) ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பிரதிவாதி நிறுவனத்திற்கு நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்தது.

 


இந்தச் சோதனை 2025 டிசம்பரில் நடைமுறையில் இருந்த அதிகபட்ச சில்லறை விலையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும்.

 

2026 ஜூன் 10 நாளிடப்பட்ட இலக்கம் 2492/29 விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை எண் 96 இன் பிரகாரம், தற்போது உள்நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான  நடைமுறையில் உள்ள அதிகபட்ச சில்லறை விலைகள்:

500 மி.லீ. – 999 மி.லீ. வரை, ரூ. 80.00

1லீற்றர் – 1.499 லீற்றர் வரை, ரூ. 120.00

1.5 லீற்றர் – 1.999 லீற்றர் வரை, ரூ. 150.00

2 லீற்றர் – 2.499 லீற்றர் வரை, ரூ. 180.00

5 லீற்றர் – 6.999 லீற்றர் வரை, ரூ. 400.00

இதற்கிடையில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடகூடிய விலைக்கு குடிநீர் போத்தல்கள் அல்லது பிற பொருட்களை விற்கும் வர்த்தக நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் இருந்தால், அலுவலக நேரங்களில் 1977 குறுகிய அழைப்பு எண் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SHAHNI RAMEES

யாழில் விரிவுரையாளரின் அநாகரிகப் பேச்சு: தற்கொலைக்கு முயன்ற மாணவி!

 


யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி பயிலும்

SHAHNI RAMEES

75 அடி பள்ளத்தில் பாய்ந்து வீடு மீது லொறி கவிழ்ந்து விபத்து : 04 பேர் படுகாயம்


பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில்,

SHAHNI RAMEES

பணிப்புறக்கணிப்புக்குத் தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

 


ரயில்வே திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப்

Saturday, September 12, 2026

Zameera

507 ரூபாவாக இருந்த டீசல் லீட்டரை 407 ரூபாவிற்கு வழங்கினோம் – ஜனாதிபதி

 

முந்தைய ஆட்சியாளர்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கும் போது இயங்கி வந்த அரசாங்கங்களே இருந்தன; ஆனால், தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டியிருந்தது, அபிவிருத்தி திட்டங்கள் மட்டுமின்றி முழுப் பொருளாதாரமும் முற்றிலும் ஸ்தம்பித்து சீர்குலைந்திருந்த ஒரு நாட்டையே ஆகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


பொலன்னறுவையில் இடம்பெற்ற விவசாயிகள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, வாகன இறக்குமதி முதல் கடவத்தை-மீரிகம அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி, வடமத்திய மகா கால்வாய், கீழ் மல்வத்து ஓயா திட்டம் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள பல வைத்தியசாலைக் கட்டிடங்களின் பணிகள் முந்தைய ஆட்சியின் போது பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.


கடன் செலுத்த முடியாது என அறிவித்து நாடு நன்மையிழந்து (வங்கித்துரோத்து நிலைக்கு) தள்ளப்பட்டதால், வெளிநாட்டு கடன்களும் உதவிகளும் கூட நாட்டிற்கு முற்றாக இல்லாது போயிருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.


இருப்பினும், 2024 டிசம்பரில் சர்வதேச கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடன்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதன்படி 2028 ஆம் ஆண்டு முதல் அக்கோரிக்கைக் கடன்களைத் திரும்பச் செலுத்தத் தொடங்குவதற்கான அவகாசக் காலம் பெறப்பட்டதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அதன் பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பித்து வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கான வழி திறக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.


நாட்டின் மக்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன், சீர்குலைந்திருந்த பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே அரசாங்கத்தின் முன்னிருந்த மிக முக்கிய சவாலாக இருந்தது எனச் சுட்டிக்காட்டிய அவர், இன்று எரிபொருள் வரிசைகள், எரிவாயு தட்டுப்பாடு அல்லது மின்வெட்டு குறித்த பயமில்லாத ஸ்திரமான நிலைக்கு நாடு கொண்டுவரப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.


மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை டொலரில் அதிகரித்த போதிலும், நாட்டில் எவ்வித எரிபொருள் வரிசைகளும் உருவாக இடமளிக்கவில்லை என்றும், 507 ரூபாவாக இருந்த டீசல் லீட்டருக்கு 100 ரூபா மானியம் வழங்கி, அதனை 407 ரூபா விலைக்கு வழங்கி மக்களுக்கு நிவாரணம் அளித்ததாகவும் அவர் கூறினார்.


‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய சேதங்கள் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மகா திறைசேரியிலிருந்து நிதியை ஒதுக்கி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நெருக்கடிகளையும் எதிர்கொள்ளக்கூடிய வலுவான பொருளாதாரம் இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மகா திறைசேரியின் அதிகபட்ச வருமானத்தைப் பதிவு செய்யத் தற்போதைய ஆட்சி சமர்த்தாகியுள்ளதாகவும் மேலும் வலியுறுத்தினார்.

Zameera

இரு குழந்தைகளின் உயிரைப் பறித்த கைக்குண்டுத் தாக்குதல் : ஐ.நா கவலை

 

தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்நாட்டின் வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரே குறிப்பிடுகையில், இரண்டு குழந்தைகளின் உயிரைப் பறித்த அந்தச் சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகத் தெரிவித்தார்.

இது போன்ற வன்செயல்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என அவர் தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளார்.

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (11) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், அவ்வீட்டில் இருந்த இரு குழந்தைகள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதலைத் நடத்துவதற்காகச் சந்தேக நபர்கள் வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி நேற்று பாதுக்கை, கீழ் போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட போதிலும், சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே, இந்தக் குண்டுத் தாக்குதல் இலக்கு மாறித் தாக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்காகித் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், உயிரிழந்த இரு குழந்தைகளின் தந்தையின் சகோதரரின் வீட்டை இலக்கு வைத்தே குறித்த குண்டுத் தாக்குதலை நடத்தக் குற்றவாளிகள் வந்துள்ளதாகவும், வீடு மாறியதன் காரணமாகவே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இரு குழந்தைகளின் உடல்கள் இன்று (12) பிற்பகலில் அவர்களின் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டதாக அதிகாலை அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Zameera

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

 


டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான  போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


 


சந்தேக நபர் இன்று கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 


இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


 


குறித்த சந்தேக நபர் நேற்று (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.


 


ஷிரான் பாஸிக் என்பவரினால் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்டதாகக் கூறப்படும் 3 கோடி ரூபா பணத்தைச் செலவிட்டு கம்பஹா பிரதேசத்தில் சொகுசு வீடு ஒன்றை தனது பெயரில் கொள்வனவு செய்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 


இச்சம்பவம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.