Our Feeds



Tuesday, August 25, 2026

Zameera

‘பஸ் லலித்’ CCIBக்கு அழைத்துச் செல்லப்பட்டார்


 டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச் செல்லப்பட்டார்.


 

Zameera

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறும் திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.


 


இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, எதிர்வரும் செப்டம்பர் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.


 


இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


 


இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.


 


கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட இந்து - லங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இந்த விஜயத்தின் போது மறுஆய்வு செய்யப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

Zameera

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்


 டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


 


இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.


 


கடந்த நாட்களில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்' என்பவர் மீது மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


 


களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 


நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


 


அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதுடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 


இதனிடையே, 2021.09.20 அன்று நெலுன்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தி பலத்த காயங்களை ஏற்படுத்த முயன்றமை தொடர்பிலும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 


2022.10.16 அன்று மூவரை வெட்டிப் பலத்த காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பிலும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் பஸ் லலித்திற்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zameera

இன்றைய வானிலை!


 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


 


அனுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


 


அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.



மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.



இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  

Monday, August 24, 2026

SHAHNI RAMEES

பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை மு.கா. உறுப்பினர் அஸீஸின் பிள்ளை கடத்தப்பட்டதா?

 


பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை மு.கா.

SHAHNI RAMEES

இனி ஓடவும் முடியாது! ஒளியவும் முடியாது! | Fort பேருந்து நிலையத்தில் தரமான சம்பவம்.

 


கொழும்பு புறக்கோட்டை (Fort) பேருந்து நிலையத்தில்

SHAHNI RAMEES

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் சாஜித் சிறையில் இருந்தே சட்டக் கல்லூரிக்குத் தேர்வு!


2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு

SHAHNI RAMEES

"ஊழல் செய்திருந்தாலும் மஹிந்த வேலைகளைச் செய்தார்..! தவறுகளால் தான் தோற்றார்.." - SJB MP பிரசாத் சிறிவர்தன

 


Zameera

கடந்த கால மின் கட்டண உயர்வுக்கு அனல் மின் உற்பத்தியே காரணம்

 

அனல் மின் உற்பத்தியைக் குறைப்பதற்குக் நடவடிக்கை எடுத்தால், மின்சாரக் கட்டண மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.


 


கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணம் மாற்றமடைந்தமைக்கு அனல் மின் உற்பத்திக்கு அதிக செலவானதே காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.


 


பல்வேறு சக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வது தொடர்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


 


சூரிய சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும் போது, இன்னும் அனல் மின்சாரத்தைப் பெறுவது பொருத்தமான நிலைமை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


 


இது தேவையற்ற முறையில் அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் காரணமாக அமைவதுடன், உலகச் சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்புடன் தீர்வை மதிப்புகளும் மாறுபடுவதால், அது மின்சாரக் கட்டண மாற்றத்திற்கும் வழிவகுக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

SHAHNI RAMEES

உள் முரண்பாடுகளுக்கு இடமில்லை; நோயாளிகளுக்கே முன்னுரிமை - இன்று Dr. சுகுணன் ஆற்றிய உரை

 


இன்று. டொக்டர் சுகுணன் ஆற்றிய உரை 

ShortNews

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்!


அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

'வினிவித' அமைப்பின் பொருளாளர் சுனில் ஜெயசுந்தர, கலாநிதி அஜந்தா பெரேரா, சட்டத்தரணி ஷிரால் லத்திலக, இளம் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த சட்ட மூலத்தை சவால் செய்து இதற்கு முன்னர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பேராசிரியர் ரஞ்சன் அபேரத்ன உள்ளிட்டோரும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக மக்களின் இறையாண்மை மற்றும் நீதிமன்றத்தின் சுதந்திரம் என்பன பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, அதனை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படின் குறித்த சட்ட மூலம் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்குமாறு மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

SHAHNI RAMEES

எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் சரி கடுமையான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயார்!

 


"எப்போதும் நிலக்கரி பற்றியும், கன்டெய்னர்கள் (Container) பற்றியும் பேசுகிறார்கள்... நமது அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்தால், அதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை, முடிவெடுக்க நாங்கள் தயார்." - பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க


போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை:


நாட்டில் போதைப்பொருளை முற்றிலும் ஒழிப்பதற்கான தேசிய இயக்கம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முந்தைய அரசியல்வாதிகள் மற்றும் சில அதிகாரிகளுக்குத் தொடர்பு இருந்தது.


தற்போதைய அரசில் உள்ள 160 மக்கள் பிரதிநிதிகளுக்கும் (ஜனாதிபதி உட்பட) போதைப்பொருள் வியாபாரிகளுடன் எந்தவித அரசியல் தொடர்பும் இல்லை.


நாட்டில் 25% ஆக இருக்கும் வறுமையை ஒழிப்பதற்கு "ப்ரஜா ஷக்தி" (Praja Shakthi) போன்ற திட்டங்கள் மூலம் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில்:


நிலக்கரி கொள்முதல், கன்டெய்னர் விவகாரம் அல்லது 2.5 மில்லியன் டொலர் மோசடி என எதுவாக இருந்தாலும், அதில் இந்த அரசாங்கத்தைச் சேர்ந்த எவருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.


அரசாங்கத்தில் உள்ள யாராவது ஊழல் அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தால், அதை மற்றவர்கள் சுட்டிக்காட்டும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம்.


அவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், கட்சி மற்றும் அரசியலில் இருந்து அவர்களை நீக்கி கடுமையான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

Zameera

காங்கோவில் வேகமாகப் பரவும் எபோலா – 2,642 பேர் உயிரிழப்பு


 


மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில், காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரித்துள்ளது.




அத்துடன், எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளது. , 




காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




இதையடுத்து எபோலா வைரசை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு காங்கோவுக்கு 16 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.