Our Feeds



Monday, April 20, 2026

Zameera

இந்த வருடம் ஆட்சியை பிடிப்பதற்கான பாரிய திட்டம் இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு


 இந்த வருடம் ஆட்சியை பிடிப்பதற்கான பாரிய திட்டம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, பொதுமக்களிடையே புத்தாண்டு தொடர்பான உற்சாகமோ அல்லது உண்மையான புத்தாண்டு உணர்வோ காணப்படவில்லை.

மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இம்முறை புத்தாண்டை கொண்டாடினர்.

இம்முறை மே தினம் பௌத்தர்களின் புனித நாளான வைகாசி பௌர்ணமி தினத்தில் வருவதால், அரசியல் ரீதியிலான மே தின ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்தப் போவதில்லை.

மே தினத்திற்குப் பதிலாக அன்றைய தினம் சமய வழிபாடுகள் மற்றும் 'பிங்கம் எனப்படும் பௌத்த புண்ணிய காரியங்கள்'உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.

புதிய ஆண்டில் அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவித்தார். 

அத்துடன், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஒரு பெரிய அளவிலான திட்டத்தை தமது கட்சி வைத்துள்ளது.

வரவிருக்கும் அரசியல் சவால்கள் மற்றும் மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்காக தமது கட்சி முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Zameera

8 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை


 இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 


இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 809,595 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 


அவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகளாவர். அந்த எண்ணிக்கை 167,095 ஆகும். 


அத்துடன் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 


இதேவேளை, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 68,961 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 


இருப்பினும், இந்தத் தரவுகளை அவதானிக்கும் போது கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளமை தெரியவருகிறது.

Zameera

முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவுக்கு பிணை


 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

2015ஆம் ஆண்டு சந்தேகநபர் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராகப் பணியாற்றியபோது, உரிய சட்ட நடைமுறைகளை மீறி காலி மாவட்டத்தைச் சேர்ந்த 134 பேரை தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தில் சிற்றூழியர்களாக நியமித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது. 

காலி மாவட்டத்தில் உள்ள தனது அரசியல் ஆதரவாளர்களுக்கே இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

ஒழுக்காற்று காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி பணிப்பாளர் என். யோகராஜாவின் இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு முன்னாள் அமைச்சர் அழுத்தம் கொடுத்துள்ளார். 

இதன் மூலம் அவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், முன்னாள் அமைச்சரை தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார். 

அத்துடன் சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது. 

சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கடுமையாக எச்சரிக்கப்பட்டது. 

இந்த வழக்கு மீண்டும் ஒஆகஸ்ட் 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டார்.

Zameera

இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம்


 இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். 

இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை நேரில் பார்வையிடுவதற்காக அவர் இந்த விஜயத்தை முன்னெடுத்துள்ளார். 

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி நேற்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். 

அத்துடன் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய அவர், இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கான நலத்திட்டங்களையும் அறிவித்தார். 

அத்துடன் இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூன்றாம் கட்டமும் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Zameera

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். 

அதேநேரம் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Zameera

அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறி செல்ல முற்பட்ட ஈரானிய சரக்கு கப்பலை சிறைபிடித்துள்ளோம் - ட்ரம்ப்


ஈரான் - அமெரிக்காவுக்கிடையிலான தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், இன்று பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 

இப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்கா குழு புறப்படும் என்று ட்ரம்ப் கூறியிருக்கும் நிலையில், ஈரான் இதில் பங்கேற்குமா என்பது உறுதியாகவில்லை.

இந்நிலையில் ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது.

இவ்வாறிருக்க, அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறி செல்ல முற்பட்ட ஈரானிய சரக்கு கப்பலை சிறைபிடித்துள்ளோம் என ட்ரம்ப் கூறியுள்ளார்.


Zameera

மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு


 சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 

அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 96.25 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

மேலும் WTI ரக மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 90.15 டொலராக பதிவாகியுள்ளது. 

Zameera

வான்வெளியை நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்க திட்டம் - ஈரான்


 கடந்த, 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த வான்வெளியை, நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கும் திட்டத்தை ஈரான் அறிவித்துள்ளது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போர் காரணமாக, விமானப் போக்குவரத்தை மேற்காசிய நாடான ஈரான் நிறுத்தி வைத்திருந்தது. மேலும், தன் வான்பரப்பை மற்ற நாடுகள் பயன்படுத்தவும் தடை விதித்திருந்தது. இதனால், கடந்த இரண்டு மாதங்களாக விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தற்போது அமெரிக்காவுடன் அமைதி பேச்சு நடந்து வரும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த தன் வான்வெளியை மீண்டும் திறக்க ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது.

இதை, நான்கு கட்டங்களாக செயல்படுத்தவும், முதற்கட்டமாக உள்நாட்டு சரக்கு விமானங்கள் மற்றும் அவசரகால சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வான்வெளியை திறப்பதற்கான திட்டத்தை அறிவித்த போதிலும், பயணியர் விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை இன்னும் தொடங்கவில்லை. முறையான பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் அமெரிக்காவுடனான அமைதி பேச்சின் முடிவை பொறுத்தே இது அமையும் என தெரிகின்றது.

இரண்டு மாதங்களாக வான்வெளி மூடப்பட்டிருப்பதால் ஈரான் விமான போக்குவரத்து துறை பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இதை ஈடு செய்யவே இந்த படிப்படியான திறப்பு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அமெரிக்காவுடனான அமைதி பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே, முழுமையான விமான போக்குவரத்து மற்றும் சர்வதேச சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Zameera

ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை


 அமெரிக்கா முன்வைத்துள்ள ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காவிட்டால், அந்நாட்டின் சிவில் உட்கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அவர் தனது ட்ரூத் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ஈரான் நேற்று ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச்சூடு நடத்த முடிவு செய்தது. இது எமது போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மீறும் செயலாகும். எனது பிரதிநிதிகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்குச் செல்கிறார்கள். பேச்சுவார்த்தைக்காக அவர்கள் நாளை மாலை அங்கு இருப்பார்கள்.

சமீபத்தில் ஈரான் அந்த நீரிணையை மூடுவதாக அறிவித்தது. மேலும் இந்த பாதை மூடப்படுவதால் அவர்கள்தான் ஒரு நாளைக்கு 500 மில்லியன் டொலர்களை இழக்கிறார்கள். அமெரிக்கா எதையும் இழக்கவில்லை. சொல்லப்போனால், பல கப்பல்கள் இப்போது அமெரிக்காவின் டெக்சாஸ், லூசியானா மற்றும் அலாஸ்காவை நோக்கி சரக்குகளை ஏற்ற சென்று கொண்டிருக்கின்றன. எப்போதும் "கெட்டிக்காரனாக" இருக்க விரும்பும் IRGC-க்கு எனது பாராட்டுகள்.

நாங்கள் மிகவும் நியாயமான மற்றும் சரியான ஒரு ஒப்பந்தத்தை வழங்குகின்றோம். அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என நான் நம்புகின்றேன். ஏனெனில் அவர்கள் அதை ஏற்காவிட்டால், ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் அமெரிக்கா தகர்த்துவிடும். இனி மென்மையான அணுகுமுறை கிடையாது. அவை மிக வேகமாகவும் எளிதாகவும் தகர்க்கப்படும். அவர்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், கடந்த 47 ஆண்டுகளாக ஏனைய ஜனாதிபதிகளால் ஈரானுக்குச் செய்திருக்க வேண்டியதைச் செய்வது எனக்குக் கௌரவமாக இருக்கும். ஈரானின் இந்த அழிவு முடிவுக்கு வர வேண்டிய நேரம் இது” என பதிவிட்டுள்ளார்.

Sunday, April 19, 2026

Zameera

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பம்


 தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள், நாளை (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 


ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கடந்த 17ஆம் திகதி முதல் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Zameera

அமெரிக்கா போர்நிறுத்த நிபந்தனைகளை மீறுகிறது - ஈரான்


 ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் முற்றுகையானது போர்நிறுத்த நிபந்தனைகளை மீறும் செயல் என ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.


முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டு வார கால நிபந்தனையுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.


அந்த காலப்பகுதியில் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.


தற்போது இந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையை ஈரான் மீண்டும் மூடியுள்ளதுடன், ஈரானிய கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை நீக்கப்படும் வரை அது மூடப்பட்டிருக்கும் என்றும் அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.


இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணை குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கைகள் செல்லுபடியாகாது என்று குறிப்பிட்டுள்ளது.

SHAHNI RAMEES

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் நிறைவு!


மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய

SHAHNI RAMEES

ஈரானை 'வெனிசுவேலா போன்ற நிலைக்கு தள்ளவும் முயன்றனர்!

 


ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது