Our Feeds



Tuesday, February 10, 2026

Zameera

விசேட தேவையுடையோருக்காக 10 புதிய சொகுசு பஸ்கள்


 கொழும்பு நகரில் விசேட தேவையுடையோர் இலகுவாகப் பயணிக்க ஏதுவாக, தாழ்வான மிதிபலகை வசதி கொண்ட 10 வாயுச் சீராக்கிகள் (A/C) கொண்ட பஸ்களை கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்த பஸ்கள் 2026 மார்ச் 15 ஆம் திகதிக்குள் நாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றும், இவை ‘லங்கா மெட்ரோ ட்ரான்சிஸ்ட்’ நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


2025 ஜூலை 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானத்திற்கமைய, இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கீழ் நிறுவப்பட்டுள்ள லங்கா மெட்ரோ ட்ரான்சிஸ்ட் (தனியார்) கம்பனிக்கு குறித்த 10 பஸ்களை ஒப்படைத்து, அவற்றின் நடவடிக்கைகளை இக்கம்பனியின் கீழ் மேற்கொள்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


குறித்த பஸ் சேவைகள் மற்றும் பராமரிப்புக்குத் தேவையான பௌதீக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு இயலுமை இன்மை கண்டறியப்பட்டுள்ளதால், குறித்த நிறுவனம் மூலம் அதனை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Zameera

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி வெகுவிரைவில் உருவாக்கப்படும் – சஞ்சீவ எதிரிமான்ன


 சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஒன்று வெகுவிரைவில் உருவாக்கப்படும்.



எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேசிய தேர்தல்களில் கூட்டணி ஊடாகவே போட்டியிடுவோம் என பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.


களுத்துறை பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் தற்போது பலமாக உள்ளோம். பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்ஷர்கள் மீது கடந்த காலங்களில் தவறான போலியான குற்றச்சாட்டுக்கள் பல முன்வைக்கப்பட்டன.


75 ஆண்டுகால அரசியலும் சாபம் என்று விமர்சித்து தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று 75 ஆண்டுகால அரசியல் செயலொழுங்கையே ஜனாதிபதி பின்பற்றிச் செல்கிறார்.


ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் நிரூபிப்பதற்கு அரசாங்கம் திணறுகிறது.


சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் விசாரணைகளை முன்னெடுப்பதில் தாமதம் காணப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிடுகிறார்.


அவ்வாறாயின் விசாரணைகளை அமைச்சரவையா முன்னெடுக்கிறது.


-இராஜதுரை ஹஷான்

Zameera

மீனவர்களின் போராட்டத்தால் சந்தையில் மீன் விலை அதிகரிப்பு


 உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்யாகிரகப் போராட்டம் காரணமாக, சந்தையில் மீன்களின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 


தற்போதைய நிலைமை குறித்து மீன் வியாபாரிகள் தெரிவிக்கையில், 


சந்தைக்கு வரும் மீன்களின் அளவு குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். 


இதன் விளைவாக மொத்த மற்றும் சில்லறை விலைகள் ஓரளவு உயர்ந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 


இதற்கமைய, இன்று (10) பேலியகொடை மீன் சந்தையில் தோரா மீன் 3,600 ரூபாவுக்கும் பாறை மீன் 3,000 ரூபாவுக்கும் கெலவல்லா மீன் 2,700 ரூபாவுக்கும் பலயா மீன் 2,000 ரூபாவுக்கும் மற்றும் லின்னா மீன் 900 ரூபாவுக்கும் மற்றும் சாளையா மீன் 700 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 


மீனவர்களின் இந்தப் போராட்டம் மேலும் நீடித்தால், வரும் நாட்களில் மீன்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHAHNI RAMEES

கூச்சலிடுவதை நிறுத்திவிட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் - நாமல் ராஜபக்ஷ!

 


எந்த நேரத்திலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத்

SHAHNI RAMEES

நாட்டை வந்தடைந்தது ஓமானின் கடற்படை கப்பல்!

 


ஓமானின் ரோயல் கடற்படைக்குச் சொந்தமான 'சாத்' 

Zameera

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி, தலைமையில் கூடியது


 ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.

 

இந்த நிர்வாக சபையானது ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் உட்பட 07 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

 

தற்போது நடைபெற்று வரும் இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரொஷான் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜயகொடி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் சந்திரசிறி மாயாதுன்ன மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

Zameera

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் "ஹிஸ்புல்லாஹ் நூலகம்" மற்றும் "KMS ஸ்மார்ட் வகுப்பறை" திறந்து வைப்பு.!

 

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியின் ஹிஸ்புல்லாஹ் நூலகம் மற்றும் KMS ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா, கல்லூரியின் பணிப்பாளர் அல்-ஆலிம் ஐ. அப்துர் றஹீம் நூரி அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (8) சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு, நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.


நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், அரபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியுடன் இணைந்து, தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழித் திறன் உள்ளிட்ட நவீன அறிவுத் துறைகளிலும் பயிற்சிகளை வழங்குவது காலத்தின் அவசியமாகும் எனக் குறிப்பிட்டார்.


மேலும், இங்கு திறந்து வைக்கப்பட்ட "ஹிஸ்புல்லாஹ் நூலகம்" பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தந்தையின் பெயரில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


-- ஊடகப்பிரிவு

Zameera

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி


 இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார். 


அதன்படி, டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 


இந்தத் தொடரின் இணை நடத்துனர் என்ற வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் (ICC) இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இலங்கை தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. 


அத்துடன், 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் போது இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை இலங்கை இன்னும் மறக்கவில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அரசு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு அறிவுறுத்தியிருந்தது. 


அட்டவணைப்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி இந்திய அணியுடன் நடைபெறவுள்ள போட்டியில் களமிறங்குமாறு தேசிய கிரிக்கெட் அணிக்கு அறிவுறுத்தியுள்ளதாகப் பாகிஸ்தான் அரசு தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளது. 


கிரிக்கெட் விளையாட்டின் உன்னதத்தைப் பாதுகாக்கவும், இந்த உலகளாவிய விளையாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் ஆதரவளிக்கும் நோக்குடனும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் அரசு சுட்டிக்காட்டியுள்ளது. 


பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இது குறித்துப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 


எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்தியாவுடன் நடைபெறவுள்ள போட்டியைப் புறக்கணிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசாங்கம் முன்னதாக அறிவுறுத்தியிருந்தது. 


இவ்வாறானதொரு பின்னணியில், இந்தியாவுடனான போட்டி குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இடையே நேற்று (09) மாலை விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது. 


இதன்போது, இந்தியாவுடன் நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைப் பங்கேற்கச் செய்யுமாறு ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். 


இலங்கை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு வருகை தந்து இந்நாட்டு கிரிக்கெட் விளையாட்டைப் பாதுகாக்க வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார். 


இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மற்றனைத்து விடயங்களையும் விட மேலானது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாகிஸ்தான் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். 


ஜனாதிபதியின் இந்தச் சுமூகமான கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், இலங்கையிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஆதரவுக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இதன்போது தெரிவித்துள்ளார்.

Zameera

ஆண் போன்று வேடமணிந்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 30 வயது பெண் கைது



ஆண் போன்று வேடமணிந்து “களுபாலம் டிலு” என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


கைதுசெய்யப்பட்டவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஆவார். சந்தேக நபரான பெண்ணிடமிருந்து சுமார் 150 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைதுசெய்யப்பட்ட பெண், தனது தலை முடியை வெட்டிக்கொண்டு ஆண் போன்று வேடமணிந்து “களுபாலம் டிலு” என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Zameera

நாளாந்தம் சுமார் 100 புற்றுநோயாளர்கள் பதிவு



தினமும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

புதிய புற்றுநோய் ஆரம்பகால கண்டறிதல் மையத்தின் திறப்பு அங்குரார்பன நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒவவொரு நாளும் சுமார் 40 நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நாட்டில் ஒவ்வொரு நாளும் 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்களில் மூன்று பேர் ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர்.

20 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் சுய மார்பகப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தால் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் வருடத்திற்கு ஒரு முறையும் மருத்துவ மார்பகப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Zameera

மாற்றம் நமக்குள் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் - பிரதமர்


 நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நமக்குள் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 


14 வது மகாத்மா காந்தி கல்விப்புலமைப்பரிசில் வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 


இதன்போது 2020/21 ஆம் கல்வி ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 300 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. 


அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்: 


"நாங்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் என்றால், அந்த மாற்றம் நமக்குள் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். நாம் மாறினால் மாத்திரமே நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை அடைய முடியும். 


அந்த மாற்றத்திற்கு நீங்கள் தலைமை தாங்குங்கள். அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், அதனை முதலில் உங்களிலிருந்து தொடங்க வேண்டும். நீங்கள் எத்தகையதொரு நாட்டை உருவாக்க நினைக்கிறீர்கள்? எத்தகைய சமூகத்தில் வாழ எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் உங்களிடம் இருக்கிறதா என்று நாம் முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 


அந்த மாற்றத்திற்காக முன்நிற்பதன் மூலமே எம்மால் சமூகம், நாடு மற்றும் உலகத்தை மாற்ற முடியும். தற்போதைய தருணம் எமது கல்வி முறை மற்றும் பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் ஒரு உருமாற்றத்தை நோக்கிய மாற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு காலப்பகுதியாகும்." என்றார்.

Monday, February 9, 2026

SHAHNI RAMEES

முன்னாள் சிஐடி பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) கைது!


முன்னாள் சிஐடி பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) கைது!

Zameera

நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல.. - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

 

எதிர்க்கட்சியினரின் நோக்கம் பொய்களைக் கூறி, அரசாங்கமும் தங்களைப் போலவே தவறு செய்யும் ஒரு குழுவினர் என்ற சமூகக் கருத்தை உருவாக்குவதே என அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.

“அவர்கள் தமது தவறுகளைத் திருத்திக்கொண்டு எங்களை விடச் சிறந்த மனிதர்களாக மாறுவதற்குப் பதிலாக, பொய்களைக் கூறி சத்தமிட்டு, நாங்களும் அவர்கள் செய்த தவறுகளைச் செய்தவர்கள் எனக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதற்காகவே அவர்கள் வருடம் முழுவதும் பாடுபடுகிறார்கள்.


எமது நாட்டு மக்களுக்கு விக்ரமசிங்கக்கள், பிரேமதாசாக்கள் மற்றும் ராஜபக்சக்களின் 40-50 வருட கால ஆட்சி முறையே தெரியும். எனவே, அரசியல்வாதிகள் என்பவர்கள் திருடர்கள், பொய்யர்கள் மற்றும் உறவினர்களுக்குச் சலுகை வழங்குபவர்கள் (nepotism) என மக்கள் நினைக்கிறார்கள். அதன் காரணமாக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திலும் அப்படிப்பட்டவர்களே இருக்கிறார்கள் என அவர்கள் கருதுகிறார்கள். எங்களிடம் அப்படிப்பட்டவர்கள் இல்லை. நாம் சுயகட்டுப்பாட்டுடன் எம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்சியாகும்.”


ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்