Our Feeds



Sunday, September 20, 2026

ShortNews

தனது குடிமகனுக்காக எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை எடுப்பதே இந்த தருணத்தில் முன்னுரிமையாக இருக்க வேண்டும் - பைஸர் முஸ்தபா!


சவூதி அரேபியாவில் கடுமையான சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இராஜதந்திர மட்டத்திலும் சட்டரீதியாகவும் அவசரமான மற்றும் வலுவான தலையீட்டை மேற்கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் இறையாண்மைக்கும் சட்டத்திற்கும் மதிப்பளிக்கும் அதே வேளையில், தனது குடிமகனுக்காக எடுக்கக்கூடிய அதிகபட்ச சட்ட மற்றும் மனிதநேய நடவடிக்கைகளை எடுப்பதே இந்த தருணத்தில் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் விவகாரம் தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் தீர்ப்பின் அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ பிரதி இதுவரை இலங்கைத் தூதரகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கிறது. தீர்ப்பின் சட்டப் பின்னணியை சரியாகப் புரிந்துகொள்வதற்கு அந்த எழுத்துப்பூர்வ ஆவணத்தை விரைவாகப் பெறுவது அத்தியாவசியமானது. சட்ட ஆலோசனைகளின்படி எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் சவூதி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யும் வாய்ப்பை தாமதமின்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த இளைஞன் சர்ச்சைக்குரிய பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து, சிறிது நேரத்தில் அது நீக்கப்பட்டு, அனோஜன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு, மனந்திரும்புதல், மன்னிப்பளித்தல் மற்றும் இரக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைவாக சவூதி அதிகாரிகளிடம் மனிதநேய நிவாரணம் அல்லது அரச கருணையை கோருவதற்கு வலுவான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்டகால இராஜதந்திர உறவுகள் மற்றும் நட்புறவைப் பயன்படுத்தி, உயர்மட்ட அரச மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்ற வாய்ப்பு காணப்படுகிறது.அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கட்சி வேறுபாடின்றி இதற்காக இணைந்து செயற்பட வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்ட ரிசானாவின் விடயம் நினைவுப்படுத்தப்பட வேண்டும். முறையான சட்ட ஆலோசனைகள், நம்பகமான பிரதிநிதித்துவம் மற்றும் சரியான மொழிபெயர்ப்பு இல்லாமையால் கடந்த காலத்தில் செலுத்த வேண்டியிருந்த விலை மிகவும் வேதனையானது. வெளிநாடு ஒன்றில் இவ்வாறான பாரதூரமான சட்டப் பிரச்சினையை எதிர்கொள்ளும் எந்தவொரு குடிமகனுக்கும் ஆரம்பத்திலிருந்தே முறையான சட்ட ஆலோசனையும் இராஜதந்திர பாதுகாப்பும் தொடர்ச்சியாக கிடைக்க வேண்டும் என்பதை அந்த அனுபவம் உறுதிப்படுத்துகிறது.

ShortNews

நுவரெலியாவில் கடும் மழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!


நுவரெலியா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

இதன் விளைவாக இன்று (20) காலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மழையுடன் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்தும் சிரமமான நிலையை எட்டியுள்ளது.

குறிப்பாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலகல, பிட்டவல, கினிகத்தேனை, தியகல, வட்டவளை மற்றும் ஹட்டன் பகுதிகளிலும், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம, கொட்டகலை, சென் கிளேர், தலவாக்கலை, ரதல்ல மற்றும் நானுஓயா பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், சாரதிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு, வேகக் கட்டுப்பாட்டுடன் பயணிக்குமாறும், வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப் பேணுமாறும், தேவையற்ற முந்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால், பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதனால், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அன்றாட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் சிரமத்துக்குள்ளாகியுள்ளது.

ShortNews

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் மழையிலும் ஆர்ப்பாட்டம்!


சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு மத்தியில், அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஹட்டனில் இன்று (20) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன், மல்லியப்பூ சந்தியில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த அமைதிவழிப் போராட்டம் இடம்பெற்றது.

இலங்கை இந்து இயக்க மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

சவுதி அரேபியாவில் தொழில் புரிந்து வந்த சிவராசா அனோஜன், சமூக ஊடகத்தில் இஸ்லாம் மார்க்கம் மற்றும் நபிகள் நாயகம் தொடர்பில் அவதூறானதாகக் கருதப்பட்ட கருத்தொன்றைப் பதிவிட்டதாகக் கூறப்படும் நிலையிலேயே கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவருக்கு ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், மேல்முறையீட்டிற்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது சட்டத்தரணி தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், மரண தண்டனை தொடர்பான உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வத் தீர்ப்பு தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் சவுதி அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்து இந்த விவகாரத்தைக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, சிவராசா அனோஜனை விடுதலை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹட்டனில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் அந்நாடுகளின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், சிவராசா அனோஜன் தனது கருத்துக்காக மன்னிப்புக்கோரியுள்ளதாகவும், அவரது குடும்பத்தினரும் மன்னிப்புக் கோரி வருவதாகவும் குறிப்பிட்ட அவர்கள், மனிதாபிமான அடிப்படையில் சவுதி அரசாங்கம் இந்த விடயத்தைப் பரிசீலித்து அவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து, சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்துச் சட்ட மற்றும் இராஜதந்திர வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்பதே இப்போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரதான கோரிக்கையாகும்.

ShortNews

விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான் - ரணில் விக்கிரமசிங்க!


ஜே.ஆர். ஜெயவர்த்தன உட்பட்ட அன்றைய அரசாங்கத்தை இலங்கை - இந்திய ஒப்பந்தம் முற்றாக முடக்கிப்போட்டது. நான் அந்த நிலையை மாற்றி, முடக்கத்தை உடைத்தெறிந்தேன். உண்மையைச் சொன்னால், ஜே.ஆர். இந்திய ஒப்பந்தத்திற்குள் முடக்கப்பட்டிருந்தார் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான். விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மானை பிரித்து, ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டு வந்தேன் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அநுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆற்றிய உரை தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன  இதன் போது ரணிலின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அதாவது குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தான் ஒரு 'விடுதலைப் புலி' என பகிரங்கமாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது, ரணில் விக்கிரமசிங்க நாட்டின் முந்தைய அரசியல் வரலாற்றுப் பின்னணியை சுட்டிக்காட்டி விளக்கமளித்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. முதன்முதலில் பயங்கரவாத அமைப்பில் இருந்த ஒருவரைத் தம் பக்கம் ஈர்த்தவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆவார். அவர்தான் டக்ளஸ் தேவானந்தாவை முதன் முதலில் இணைத்துக் கொண்டார்.

அதற்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தம் பக்கம் இணைத்தார். அதே வழியையே மஹிந்த ராஜபக்ஷவும் தொடர்ந்து பின்பற்றினார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன உட்பட்ட அன்றைய அரசாங்கத்தை இலங்கை - இந்திய ஒப்பந்தம் முற்றாக முடக்கிப்போட்டது. நான் அந்த நிலையை மாற்றி, முடக்கத்தை உடைத்தெறிந்தேன். உண்மையைச் சொன்னால், ஜே.ஆர். இந்திய ஒப்பந்தத்திற்குள் முடக்கப்பட்டிருந்தார்

விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான் தான். விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மானை பிரித்து, ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டு வந்தேன். ஆனால், கருணாவை தேசிய அரசியலில் நேரடியாக இணைத்துக் கொண்டது மஹிந்த ராஜபக்ஷ தான்.

எவ்வாறாயினும் பிரேமதாச பயங்கரவாத அமைப்பில் இருந்தவரைத் தம்மிடம் எடுத்தது போல், நான் தான் விடுதலைப் புலிகள் அமைப்பை இரண்டாகப் பிளவுபடுத்தினேன். மறுபுறம் சந்திரிக்கா, கருணாவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியதுடன், இவர்கள் அனைவரையும் பயன்படுத்தி இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பை மஹிந்த ராஜபக்ஷ அழித்தார்.

நாட்டில் கொடூர யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த வேளையில், ஜே.வி.பி அமைப்பானது விடுதலைப் புலிகளுக்கு நிகராக மகா சங்கத்தினரையும் இராணுவத்தினரையும் கொன்றுகுவித்தது. அந்தக் காலத்தில் தான் 'ஜே.ஆரைக் கொல்லுங்கள்' என்ற பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன என்றார்.

ShortNews

மகாவலி ஆற்றில் வெள்ள அபாயம் - எச்சரிக்கை விடுப்பு!


மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் 'சிவப்பு' எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடந்த சில மணிநேரங்களாக மகாவலி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக, பஸ்பாகே கோரலே (Pasbage Korale) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், இப்பகுதிகள் வழியாகச் செல்லும் வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இப்பகுதிகளில் மகாவலி ஆற்றின் அண்மையில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாகத் தொடர்புடைய அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்படுகிறார்கள்.

ShortNews

கேகாலையில் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!


கடந்த சில மணிநேரத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சியாக கேகாலை மாவட்டத்தின் மாலிபொட பகுதியில் 103.5 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், காலி மாவட்டத்தின் தெல்வல தேயிலைத் தோட்டப் பகுதியில் 93.5 மி.மீ. மழைவீழ்ச்சியும், குருதியபொத்த தேயிலைத் தோட்டப் பகுதியில் 87.5 மி.மீ. மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, களுத்துறை மாவட்டத்தின்  நேபொட பகுதியில் 83.0 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

பலத்த மழை மற்றும் இடி மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.

ShortNews

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!


தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது தவிர, காலி மாவட்டத்தின் நாகொட, களுத்துறை மாவட்டத்தின் பாலின்தநுவர, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) மாலை 7.00 மணி முதல் நாளை மாலை 7.00 மணி வரை அமலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHAHNI RAMEES

ஒரு வார்த்தைக்காக ஓர் உயிரைப் பறிக்காதீர்! - அனோஜனுக்குக் கருணை காட்டுமாறு சவூதியிடம் சஜித் உருக்கமான கோரிக்கை

 


ஒரு வார்த்தைக்காக ஓர் உயிரைப் பறிக்காதீர்!

SHAHNI RAMEES

தரமற்ற குழந்தை டயப்பர்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!

 


சந்தையில் விற்பனையாகும் சில குழந்தைகளுக்கான
SHAHNI RAMEES

தாயைக் கொ## செய்துவிட்டு மகனும் தற்##!


வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான

SHAHNI RAMEES

மகாவலி தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!

 



மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு

Saturday, September 19, 2026

SHAHNI RAMEES

10 நிமிடம் தான் டைம்! கதவு தானாக திறந்துவிடும்... நியூயார்க்கில் நிறுவப்பட்ட இலவச பொது கழிப்பறைகள்...

 வாஷிங்டன்,


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கழிப்பறைகள் திறந்திருக்கும். இந்த கழிப்பறைகள் இருக்கும் இடத்தை கண்டறிய பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இவ்வாறு பல வசதிகள் இருந்தாலும், இந்த கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஒரு முக்கியமான விதி உள்ளது. அதாவது, கழிவறைக்கு உள்ளே சென்றுவிட்டால் 10 நிமிடத்திற்குள் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும். கழிவறையை பயன்படுத்த தொடங்கியதில் இருந்து கவுண்ட் டவுன் ஓடத் தொடங்கிவிடும். 5 நிமிடங்கள் ஆனவுடன் ஒரு ஆடியோ எச்சரிக்கை வரும். தொடர்ந்து 8-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு எச்சரிக்கை வரும்.




இதைத் தொடர்ந்து 10-வது நிமிடத்தில் கடைசியாக ஒரு

Zameera

வாகனப் பதிவு, போக்குவரத்து முறைப்பாடுகளுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்


 (எம்.மனோசித்ரா)


மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் வீதிகளில் இயங்கும் வாகனங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் புகார்களைத் தெரிவிப்பதற்காகப் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.


மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இச்சேவையின் மூலம் பொதுமக்கள் தங்களது எழுத்துப்பூர்வமான முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை இனி 074 245 3300 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.


வாகனப் பதிவின் போது ஏற்படும் காலதாமதங்கள், சேவைச் சிக்கல்கள் மற்றும் வாகனங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கும் நோக்கிலேயே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.