Our Feeds



Tuesday, June 23, 2026

Zameera

GIT பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்


 அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


 


அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அத்திணைக்களம், இந்த விண்ணப்பங்களை நேற்று (22) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரை இணையவழி முறை மூலம் சமர்ப்பிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது.


 


இதற்கமைய, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது அதிபர் அல்லது பாடசாலைத் தலைவர்கள் ஊடாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதிபர்கள் அல்லது தனியார் பாடசாலைத் தலைவர்கள், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகியவற்றுள் ஒன்றிற்குள் பிரவேசித்து, உரிய அறிவுறுத்தல்களைத் தெளிவாகப் படித்துப் பார்த்து, துல்லியமாக ஆன்லைன் முறை ஊடாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.


 


அத்துடன், இப்பரீட்சைக்கு விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


 


இப்பரீட்சைக்காக, அரசு மற்றும் தனியார் பாடசாலை அதிபர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொற்களைப் (Password) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்பதுடன், அதன் அச்சிடப்பட்ட பிரதியொன்றை (Printout) எடுத்து, தேவையான போது சமர்ப்பிப்பதற்காகத் தங்களது பாதுகாப்பில் வைத்திருக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் தனது அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.


 


2026 ஆம் ஆண்டில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்று, 2027 ஆம் ஆண்டில் முதன்முறையாக உயர்தரப் (A/L) பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை மட்டுமே இப்பரீட்சைக்குச் சமர்ப்பிக்க முடியும். மேலும், தனியார் பாடசாலை மாணவர்களின் அனைத்து விபரங்களும் தரவு அமைப்பில் (Data system) உள்ளிடப்பட்ட பின்னரே அதற்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 


அத்துடன், கட்டணங்களைச் செலுத்திய பின்னர் மீண்டும் புதிய மாணவர்களை உள்ளடக்க முடியாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.


 


இது தொடர்பாக ஏதேனும் வினவல்களை மேற்கொள்ள வேண்டியிருப்பின், பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற உடனடித் தொலைபேசி இலக்கம் அல்லது 011 2784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


SHAHNI RAMEES

ஏதும் மாறப்போவதில்லை! - சிறைக்கு செல்லும்போது தேசப்பற்றாளர்கள்??? - சுனில் ஹந்துனெத்தி தடாலடி

 


அரச நிதியை மோசடி செய்தவர்கள் சிறைக்கு

Zameera

3 நாட்களுக்கு நாடு தழுவிய விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை


 தீவிரமாகப் பரவி வரும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்படும் தேசியத் திட்டத்திற்கு இணையாக, விசேட டெங்கு ஒழிப்பு கூட்டு நடவடிக்கை ஒன்றைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.



'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான ஊடகத் தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் இன்று (23) ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.



அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி செயலாளர், டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குப் பொதுமக்களின் விழிப்புணர்வும் பங்களிப்பும் இன்றியமையாதது எனக் குறிப்பிட்டார்.



தற்போது நிலவும் மழைக்கால நிலைமை காரணமாக, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு பரவல் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



இந்த நிலமையைக் கட்டுப்படுத்துவதற்காகக் குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளைக் கொண்ட வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி செயலாளர் மேலும் தெரிவித்தார்.



வீட்டு வளாகங்கள் மட்டுமன்றி, அரச நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களைச் சூழவும் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுவதால், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதில் அனைத்துத் தரப்பினரும் அவதானம் செலுத்த வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.



டெங்கு பரவல், அதன் அபாய நிலை மற்றும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இங்கு விளக்கமளித்தார்.



மக்களை விழிப்புணர்வூட்டுவதும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க அவர்களை ஊக்குவிப்பதுமே இந்த நேரத்தில் மிக முக்கியமான படியாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி செயலாளர், அதற்காக அனைத்து ஊடக நிறுவனங்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

SHAHNI RAMEES

இஸ்லாத்தை அவமதித்த ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனை உறுதி! - கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி

 


இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு,

SHAHNI RAMEES

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி!

 


அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச்

Zameera

தேர்தல்களில் அழியாத மை முறையை நீக்க அமைச்சரவை ஒப்புதல்


 (எம்.மனோசித்ரா)


தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக வாக்காளர்களின் விரல்களில் அழியாத பூச்சு (மை) இடும் சட்ட ரீதியான ஏற்பாடுகளை அனைத்து தேர்தல் சட்டங்களிலிருந்தும் முழுமையாக நீக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்துள்ள விசேட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இலங்கையில் தேர்தல்களுக்கான சட்ட ஏற்பாடுகளின் கீழ், கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்தப்பட்ட தேர்தல்களின் போது வாக்களிப்பதற்காக சமூகமளிக்கும் வாக்காளர்கள் செல்லுபடியான அடையாள அட்டை மூலம் தத்தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு வரும் அனைத்து வாக்காளர்களுக்கும் அழியாத பூச்சைப் பயன்படுத்தி பொருத்தமான விரலில் அடையாளமிடுவதும் கட்டாயமான நடைமுறையாக இருந்து வருகின்றது.South Asians & Diaspora


ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் விரலில் மையிடுதல் ஆகிய இந்த இரண்டு பணிகளின் மூலமும் எதிர்பார்க்கப்படுவது, வாக்காளர் ஒருவர் ஒரு தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாக்களிப்பதைத் தடுப்பதேயாகும்.


எனினும், ஒரே எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக ஒன்றுக்கொன்று வேறான இரண்டு வௌ;வேறான முறைமைகளை ஒரே நேரத்தில் கடைப்பிடிப்பதன் காரணமாக, வாக்கெடுப்பு நிலையங்களில் கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு தடையாக உள்ளமையும், அரசாங்கத்திற்கு இதனால் மேலதிக செலவு ஏற்படுகின்றமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.



இதன் காரணமாகவே, அழியாத பூச்சைப் பயன்படுத்தி வாக்காளர்களை அடையாளமிடுவது தொடர்பான சட்டரீதியான ஏற்பாடுகளை நாட்டின் அனைத்து தேர்தல் சட்டங்களிலிருந்தும் நீக்குவது பொருத்தமானது எனக் கண்டறியப்பட்டுள்ளது.


அதற்கமைய, 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவு, 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 38 ஆம் பிரிவு, 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவு, (262 ஆம் அத்தியாயமான) உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 53அ. பிரிவு, 1981 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க மக்கள் தீர்ப்பு சட்டத்தின் 21 ஆம் பிரிவு ஆகிய ஐந்து பிரதான தேர்தல் சட்ட ரீதியான ஏற்பாடுகளை நீக்குவதற்கான சட்டமூலங்களைத் தயாரிப்பதற்கும், அதற்கான மேல்நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 

SHAHNI RAMEES

பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை உறுப்பினர் ரிஷாட் ரபீக் இராஜினாமா!


 பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை உறுப்பினர்

Zameera

சுரேஷ் சலே தொடர்பாக குடும்பத்தினர் திருத்தந்தைக்கு கடிதம்


 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதநேயப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, அவரது குடும்ப உறவினர்கள் இன்று (23) திருத்தந்தை லியோ பாப்பரசருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதற்கமைய, இலங்கைக்கான திருத்தந்தையின் தூதுவரான அப்போஸ்தலிக்க நன்சியோவிடம் குறித்த கடிதத்தை கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று காலை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுரேஷ் சலே, அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்ததாகவும், பின்னர் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, சலே விவகாரம் தொடர்பாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சில பாதிரியார்கள் அண்மையில் கருத்துகளை வெளியிட்டிருந்த சூழ்நிலையிலேயே இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zameera

மாத்தளை மனிதப் புதைகுழி:விசாரணை கோரி தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் முறைப்பாடு


மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களினால் இன்றைய தினம் (23)  மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
 

Zameera

எதிர்கட்சி உறுப்பினர்கள் செங்கோலை கைப்பற்ற முயற்சி : நாடாளுமன்றத்தில் குழப்பம்


 எதிர்க்கட்சியைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று, சபாநாயகரிடம் அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரினர்.


இதற்கமைய, சபாநாயகர் இது குறித்து ஆளுங்கட்சியிடம் வினவியபோது, அதற்கு உடன்பட முடியாது எனவும், தேவைப்பட்டால் இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு உடன்படுவதாகவும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.


இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து கருத்துக்களை வெளியிடத் தொடங்கியதை அடுத்து, நாடாளுமன்றத்திற்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்ற நிலை உருவானது.


நீதிமன்றத் துறையில் எழுந்துள்ள கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குவதற்கு நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி, அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஒன்று இன்று (23) முற்பகல் நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.


இதன் பின்னர், நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, குறித்த விடயம் தொடர்பாக சபாநாயகரிடம் அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரினார்.



அதனையடுத்தே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 8 நீதிபதிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றமை மற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமை காரணமாகவே இந்த விவாதத்தைக் கோருவதாகக் குறிப்பிட்டார்.



இதனை அடுத்து நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செங்கோலை கைப்பற்ற முற்பட்டமையினால் நாடாளுமன்றத்தில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Admin

47,500ஐத் தாண்டிய டெங்கு நோயாளர்கள் - 29 பேர் உயிரிழப்பு!


இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 47,530 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நேற்று (22) நள்ளிரவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூன் மாதத்தில் மாத்திரம் 13,689 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, மொத்த டெங்கு நோயாளர்களில் 51.90 சதவீதமானோர் மேல் மாகாணத்திலும், 16.18 சதவீதமானோர் தென் மாகாணத்திலும் பதிவாகியுள்ளனர்.

டெங்கு பரவும் அதிக அவதானம் மிக்க 112 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்தில் 9,983 நோயாளர்களும், கம்பஹாவில் 8,809 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 3,446 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

Admin

ஞானசார தேரருக்கு சிறை - உறுதி செய்த கொழும்பு மேல் நீதிமன்றம்!




இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது.

குறித்த சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறு கோரி ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு கிருலப்பனைப் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டார் எனக் குற்றம் சுமத்தி, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸாரினால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணைகளின் பின்னர், இந்தக் குற்றச்சாட்டிற்கு அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Zameera

மெட்ரோ பேருந்துகள் வீதியில் இறங்கியதை அடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் பீதி


 மெட்ரோ பேருந்துகள் வீதியில் இறங்கியதை அடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் பீதி அடைந்தனர்.

அரசாங்கம் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) கீழ் புதிய மெட்ரோ பேருந்துகளை அறிமுகப்படுத்திய நடவடிக்கையை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன விமர்சித்துள்ளார்.

இந்த பேருந்துகள் சட்டவிரோதமான முறையில் இயக்கப்படுவதாகவும், இது பொதுமக்கள் மீது மேலதிக நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இப் பேருந்துகள் அதிக டீசலை நுகர்வதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றின் பொருளாதார நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பியதுடன், இந்தத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் பொதுமக்களை ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டினார்.