Our Feeds



Monday, July 13, 2026

SHAHNI RAMEES

இதில் இருப்பவர்களில் ஐவர் ஏற்கனவே இருந்த அரசாங்களில் அமைச்சு பொறுப்புகளில் இருந்தவர்கள்.

 


இதில் இருப்பவர்களில் ஐவர் ஏற்கனவே இருந்த

Admin

தமிழ் பேசும் 6 கட்சிகளின் ஒன்றிணைவு நீண்ட கால பிரச்சினைகளுகு்கு தீர்வுகாணும் வரலாற்று சந்தர்ப்பம்.




(எம்.என்.எம்.அப்ராஸ்)


தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள் பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட முன்வந்திருப்பது, இலங்கையின் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள அரசியல், சமூக மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும் என்று பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி முபிஸால் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,


இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒரே மேடையில் அமர்ந்து, பொதுவான கோரிக்கைகள் மற்றும் பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இணைந்து செயல்பட முன்வந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.இது எந்தவொரு சமூகத்திற்கும் எதிரான அரசியல் முயற்சியாக அல்லாது, ஜனநாயக அடிப்படையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வுமிக்க அணுகுமுறையாகப் பார்க்கப்பட வேண்டும்.


கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் பேச்சுவார்த்தைகளும் இணக்கப்பாட்டு முயற்சிகளும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அவற்றில் பல இடைநடுவில் கைவிடப்பட்டதன் காரணமாக சிறுபான்மை மக்களிடையே நம்பிக்கையின்மை உருவாகியுள்ளது. இந்நிலையில், தற்போதைய இந்த ஒன்றிணைவு மற்றும் தொடர்ச்சியான சந்திப்புகள், தமிழ் பேசும் மக்களிடையே புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளன. இந்த அரசியல் உரையாடல் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.


மேலும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான நிலையான தீர்வுகள் ஜனநாயக உரையாடல், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் அரசியல் ஒத்துழைப்பின் மூலமே சாத்தியமாகும் என்றும், எனவே இவ்வாறான கூட்டு அரசியல் முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஆக்கபூர்வமான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.


தமிழ் பேசும் மக்களின் அரசியல் ஒற்றுமை, அவர்களது ஜனநாயக உரிமைகள், சமத்துவம் மற்றும் நீதியை வென்றெடுப்பதற்கான முக்கிய அடித்தளமாக அமைய வேண்டும் அது நாட்டின் தேசிய ஒற்றுமையையும் ஜனநாயகப் பண்பாட்டையும் வலுப்படுத்தும் ஒரு நேர்மறையான அரசியல் முன்னேற்றமாக அமையும் என்றும் கலாநிதி முபிஸால் அபூபக்கர் அபூபக்கர் குறிப்பிட்டார்.

SHAHNI RAMEES

ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களுக்கு 20 சதவீத கட்டணம் அறவிட டிரம்ப் திட்டம்!

 


ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த

Zameera

HIV தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு


 நாட்டில் HIV வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் தொடர்பான சமூக விசேட வைத்திய நிபுணர் சத்யா ஹேரத் தெரிவித்துள்ளார். 


சுகாதார அமைச்சில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர், இவர்களில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்தே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். 


கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவர்களில் பெண்களை விட ஆண்களிடையே இத்தொற்று அதிகமாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதே HIV தொற்று ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகக் கருதப்படலாம் எனக் கூறிய வைத்திய நிபுணர், இது தவிர பாதுகாப்பற்ற பாலியல் நடத்தைகள் மற்றும் போதைப்பொருள் ஊசி ஏற்றும் முறைகளின் போது ஊசிகள், சிரிஞ்சுகள் மற்றும் பிற உபகரணங்களை ஒத்ததாகப் பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவையும் இதற்குப் பங்களிப்பதாகக் கூறினார். 


HIV வைரஸ் தொற்றிய பின்னர் அதனை 100% குணப்படுத்த முடியாது என்றும், ஒருவருக்கு HIV தொற்று ஏற்பட்டால் அவர் நீண்டகால மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான சிகிச்சை முறைகளைத் தொடர்ந்து பெற வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார். 


அதேபோல், சிறு வயதிலேயே ஒருவருக்கு HIV தொற்று ஏற்பட்டால், அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிகிச்சை மற்றும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வைத்தியர் இங்கு சுட்டிக்காட்டினார். 


HIV/STI மற்றும் ஹெபடைடிஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியாக பரவும் நோய்களைக் கண்டறிவதற்கும் அவற்றின் பரவலைக் குறைப்பதற்கும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு சிறப்பு நடமாடும் மருத்துவ முகாம் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 


சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம், ஒரு சிறப்பு முன்னோடித் திட்டமாக இந்த வருடத்தின் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் தொகை மற்றும் ஆபத்தான நிலைமைகளைக் கருத்திற்கொண்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு இது முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். 


இதன்போது, பொதுமக்களிடையே சென்று அவர்களின் விருப்பம் மற்றும் தனியுரிமைக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கும் வகையில் இலவச சேவைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 


அங்கு பரிசோதனை அறிக்கைகளின் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் அதேவேளை, ஏதேனும் ஒரு நோய் அல்லது தொற்று கண்டறியப்பட்டால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை இலவசமாக வழங்குவதற்கும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார். 


இது குறித்து சமூக விசேட வைத்திய நிபுணர் சத்யா ஹேரத் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 


"சில நாடுகளில் HIV அதிகரிக்கிறது, சில நாடுகளில் குறைகிறது. இலங்கையில் HIV பதிவுகள் குறைந்த போக்கைக் கொண்டிருந்தாலும், பதிவுகள் தொடர்ந்து காணப்படுகின்றன. நாங்கள் அறிக்கைகளைப் பார்க்கும்போது, ஒவ்வொரு வருடமும் புதிதாக இணையும் நோயாளர்களின் எண்ணிக்கை பொதுவாக அதிகரித்துக்கொண்டே செல்வதைக் காண முடிகிறது. அதாவது 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளைப் பார்க்கும்போது சற்று அதிகமாக இணைகிறார்கள். அந்த அறிக்கைகளின்படி, பெண்களை விட ஆண்களிடையே இது சற்று அதிகமாகக் காணப்படுகிறது. ஆண், பெண் விகிதாசாரப்படி பார்த்தால் இரண்டுமே சமமாக இருக்க வேண்டும். ஆனால் இது ஆண்களிடையே அதிகமாக உள்ளது. சில நேரங்களில் பாதுகாப்பற்ற உடலுறவும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த வருடத்தை விட இந்த வருடம் புதிதாக இணைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் அதிக மக்கள் வாழும் பகுதிகளாக இருப்பதால், ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் இங்கிருந்தே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகிறார்கள்." என்றார்.

SHAHNI RAMEES

கூட்டு தமிழ் பேசும் எதிர்க்கட்சி - ஒரு வெங்காயம்.


கூட்டு தமிழ் பேசும் எதிர்க்கட்சி - ஒரு வெங்காயம்.

SHAHNI RAMEES

அநுர ஆட்சியில் அநீதியா? - திருகோணமலையில் ரோட்டுக்கு இறங்கிய பெண்கள்...

 


நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை

SHAHNI RAMEES

பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்...

 

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை
SHAHNI RAMEES

ஹமீதியன்ஸ் கிரிக்கெட் திருவிழா – சீசன் 7 ஜெர்சி வெளியீடு மற்றும் ஊடக சந்திப்பு!

 



ஹமீதியன்ஸ் கிரிக்கெட் திருவிழா – சீசன் 7 ஜெர்சி வெளியீடு

Zameera

முன்பள்ளி குழந்தைகளை நுளம்பு கடியிலிருந்து பாதுகாக்க அமைச்சரின் கோரிக்கை


 நுளம்பு கடியியில் இருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்காக முன்பள்ளிச் சிறுவர்களுக்கும் கைகால்களை மூடும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிவித்து அவர்களை முன்பள்ளிகளுக்கு அனுப்புமாறு பெற்றோர்களிடம் கோருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். 


இன்று (13) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஆரம்பப் பிள்ளைப் பருவ தேசிய வாரக் கொண்டாட்டம் குறித்த விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 


பாடசாலை மாணவர்கள் நுளம்பு கடியியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கைகால்களை மூடும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு அனுமதி வழங்க கல்வி அமைச்சு ஏற்கனவே தீர்மானித்திருந்தது. 


பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவுவதைக் குறைக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டதுடன், அதற்கமைய கைகால்களை மூடும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கான வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது. 


அதற்கமைய, முன்பள்ளி சிறுவர் சிறுமிகளையும் நுளம்பு கடியியில் இருந்து பாதுகாப்பதற்காக கைகால்கள் மூடும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிவித்து முன்பள்ளிகளுக்கு அனுப்புமாறு அமைச்சர் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார். 


இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், 


இது குறிப்பாக முன்பள்ளி குழந்தைகளுக்குப் பொருந்தும். ஏனெனில், முன்பள்ளி குழந்தைகளுக்கும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தக்கூடிய நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள். நுளம்பு கடியியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு தான் நான் அனைத்து பெற்றோரிடமும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடி பாடசாலைகளுக்குள்ளும் காணப்படுகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களும் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

Zameera

தெற்காசியாவில் சிவில் பதிவு மற்றும் முக்கிய புள்ளிவிபரங்களை வலுப்படுத்த கொழும்பில் மாநாடு

தெற்காசியாவில் சிவில் பதிவு மற்றும் முக்கிய புள்ளிவிபரங்களை  வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'தெற்காசிய சிவில் பதிவு நிபுணர்களின் (CR8)' மாநாடு இன்று (13) திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பமானது. இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இலங்கையின் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மூன்று நாள் மாநாடு, ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (UNESCAP), யுனிசெப்  மற்றும் வைட்டல் ஸ்டிரேட்டஜிஸ் ஆகிய சர்வதேச அமைப்புகளின் பங்களிப்புடன் நடத்தப்படுகிறது.

இம்மாநாட்டின் போது, டிஜிட்டல் மயமாக்கல், தரவு ஆளுமை, தகவல் பரிமாற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் எவரையும் விடுபடச் செய்யாத உள்ளடக்கிய சிவில் பதிவு முறைகளை உருவாக்குதல் போன்ற முக்கிய முன்னுரிமைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. மேலும், பங்குபெறும் நாடுகள் தங்களின் அனுபவங்கள் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு சிறந்த தளமாக இம்மாநாடு அமைந்துள்ளது.

 

SHAHNI RAMEES

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைவு!

 


பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான

Zameera

ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான விமல் வீரவங்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!


 கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Geographic Reference


இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் இன்று (13) திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது, வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்றையதினம்  நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.


அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் அறிவித்ததுடன், அது தொடர்பான மருத்துவ அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார்.


முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பிரதம நீதவான், வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.



கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் திகதி, அப்போதைய ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் இளவரசர் சைத் ராத் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.


அந்த விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்திற்கு முன்பாக தும்முல்ல மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்துப் போராட்டம் நடத்தியதன் மூலம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் இடையூறும் ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கினைக் கறுவாத்தோட்டம் பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர்.


முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு மேலதிகமாக இந்த வழக்கில்  ஜெயந்த சமரவீர, வீரகுமார திசாநாயக்க,பியசிறி விஜேநாயக்க, ரொஜர் செனவிரத்ன, முஹமட் முஸம்மில் ஆகியோரின் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

Zameera

ஊழல் தடுப்புக்கு புதிய டிஜிட்டல் முறைமை: IMF ஆலோசனை


 ஊழல் அபாயங்களைக் குறைப்பதற்காக, பாரம்பரிய காகிதக் கோப்பு முறையை முற்றாக நிறுத்திவிட்டு, 'மத்தியப்படுத்தப்பட்ட மின்னணு சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடன முறைமையை' கட்டாயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.




2026 ஜூன்/ஜூலை மாதங்களுடன் முடிவடைந்த சொத்துப் பிரகடனங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய அனைத்து அரச ஊழியர்களுக்கு எதிராகவும், கடுமையான நிதி அபராதங்கள், ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது.






2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்காக, ஆணைக்குழுவில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, உடனடியாகப் புதியவர்களை ஆட்சேர்ப்பு செய்யுமாறு அரசாங்கத்திற்கு ஆணைக்குழு அறிவித்துள்ளது.




தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியின் 5 ஆவது மற்றும் 6 ஆவது மீளாய்வுகளுக்குப் பிறகு, அரசியல் களத்தில் உள்ள முக்கிய புள்ளிகள் மற்றும் உயர்மட்ட நிதிக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்கான பொறுப்பு நேரடியாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.




2025-2029 காலப்பகுதிக்கான தேசிய ஊழல் எதிர்ப்புச் செயல்திட்டத்தின் கீழ், ஆணைக்குழுவின் அதிகாரங்கள் தனியார் துறையின் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் வரை விரிவுபடுத்தப்படுவதுடன், நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்களைக் கண்டறிந்து, பணமோசடியைத் தடுக்கும் FATF சர்வதேசத் தரநிலைகளுக்கு இலங்கையை உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.