Our Feeds



Friday, June 5, 2026

Zameera

நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – சஜித்


 (எம்.மனோசித்ரா)


நாடு தற்போது அனைத்துத் துறைகளிலும் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் 220 இலட்சம் மக்களைப் பற்றி சிந்தித்து நாட்டை மீட்பதற்கு மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,



பொருளாதார மற்றும் சமூக ரீதியாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வறுமையும் பணவீக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட மூன்று வேளை உணவைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும், நாடு இன்று பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது.


நாட்டின் இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி, சில சுயநல மற்றும் அற்பவாத சக்திகள் இலங்கையின் இறையாண்மையைக் குறைத்து மதிப்பிடுவதற்கும், நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்கும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.


எனினும், ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியில் எமக்குள்ளே பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டைப் பாதுகாப்பதற்காக 220 இலட்சம் மக்களும் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்துடன் இணைந்து அச்சுறுத்தல்களை முறியடிக்கத் தயாராக உள்ளார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.


மேலும், எமது நாட்டில் பௌத்த சாசனத்துக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையைப் பாதுகாத்து அதனை வலுப்படுத்துவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். ஏனைய மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பும் எமது உச்ச சட்டமான அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இனம், மதம், கலாச்சாரம் என எந்தவொரு வேறுபாடும் இன்றி அனைத்துத் தரப்பினரினதும் நல்லிணக்கத்துடனேயே இந்த வெசாக் ஊர்வலம் நடைபெறுகிறது. இத்தகைய நல்லிணக்கமும் சகோதரத்துவமுமே இலங்கையின் ஒற்றையாட்சி, இறையாண்மை  மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் என்றார். 

Zameera

உலகை அச்சுறுத்தும் எல் நினோ விளைவு ஆரம்பம்


 உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் எல் நினோ விளைவுகள் தொடங்கிவிட்டதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாக இந்த எல் நினோ தொடங்கியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்றப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த காற்றானது பசிபிக் பெருங்கடல் பக்கம் அதிகமாக வீசுவதால் இந்த பகுதியில் வெப்பம் கடுமையாக அதிகரித்திருப்பதே, எல் நினோ விளைவு தொடங்கியதற்கான அறிகுறியாகக் கருதப்படுகின்றது என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Zameera

வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய 31,000 மில்லியன் நிதி - நளிந்த ஜயதிஸ்ஸ


 நாட்டில் உள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு விசேட திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


இத்திட்டம் அடுத்த நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும், என்பதுடன், இத்திட்டத்திற்காக 31,000 மில்லியன் தொகை ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 


நேற்று (04) பிற்பகல் மொனராகல மாவட்டத்தில் உள்ள வெல்லவாயா அடிப்படை வைத்தியசாலையில் விசேட ஆய்வு மேற்கொண்டபோது அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். 


இந்நாட்டில் உள்ள அரசு வைத்தியசாலை அமைப்பை, மேலும் உயர் வசதிகளுடன் பராமரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசு மற்றும் மாகாண சபையின் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலை அமைப்பின் குறைபாடுகளை ஆராய்வதற்கும், தற்போதுள்ள பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதற்கும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. 


வெளிநோயாளர் பிரிவு, வைத்தியசாலை வளாகம், வார்டுகள், மருந்தகம், அவசர சிகிச்சைப் பிரிவு, சமையலறை, ஹீமோடையாலிசிஸ் பிரிவு, ஆய்வகம், இரத்த வங்கி மற்றும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட துறைகளை அமைச்சர் ஆய்வு செய்தார். 


வைத்தியசாலை வளாகத்தைப் பார்வையிட்ட பின்னர், அமைச்சர் வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகள், நிபுணர்கள், வைத்தியர்கள்,தாதியர்கள் மற்றும் பிற வைத்தியசாலை ஊழியர்களுடன் கலந்துரையாடலையும் நடத்தினார். 


மேலும், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அதிகாரிகளிடம் பிரச்சனைகளுக்கு உரிய நேரத்தில் தீர்வு காணவும் அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். 


மேலும், பல குறைபாடுகள் இருந்தபோதிலும், வெல்லவாயா மருத்துவமனையில் பணியாற்றும் நிபுணர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்குக் காட்டிய அர்ப்பணிப்புக்குத் தனது நன்றியையும் அமைச்சர் தெரிவித்தார். 


வெல்லவாயா ஆதார வைத்தியசாலை 'பி' பிரிவு ஆதார வைத்தியசாலை என்பதை நினைவு கூர்ந்த அமைச்சர், அந்த பிரிவிற்குரிய அனைத்து வசதிகளும் இந்த வைத்தியசாலையில் இல்லை என்பது கவனிக்கப்படுகிறது என்றும், அத்தகைய காரணங்களுக்காக, சுகாதார அமைச்சு 2020-ஆம் ஆண்டில் ஒவ்வொரு வைத்தியசாலையையும் வகைப்படுத்தி, அதில் உள்ள சிறப்பு வைத்தியர்கள், அவர்கள் சார்ந்த துறைகள், பணியாளர்கள், தேவையான உபகரணங்கள் போன்றவற்றைப் பதிவு செய்துள்ளது என்றும் கூறினார். மேலும், 'B' பிரிவு ஆதார வைத்தியசாலையில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகளை நிறுவுவதே செய்ய வேண்டிய முதல் காரியம் என்றும் அவர் குறிப்பிட்டார். 


சுகாதார அமைச்சகம், தொற்றா நோய்களுக்கென ஒரு பணிக்குழுவை அமைத்து, அந்நோயைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். 


இப்பணியை பிரிவுகள் இதுவரை தனித்தனியாகச் செயல்பட்டு வருவதால், விரும்பிய முடிவுகள் எட்டப்படவில்லை என்பது கவனிக்கப்பட்டுள்ளதாலும், இதற்குச் விசேட கவனம் செலுத்தி, தேவையான திருத்தங்களைச் செய்து, பணியை நிறைவுசெய்ய வேண்டியதன் அவசியம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 


இது தொடர்பான ஒரு கலந்துரையாடலில், விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட நாட்டின் சிறுநீரகவியல் நிபுணர்கள் ஒரு அமைப்பாக, சில மாதங்களுக்குள் பல இடங்களில் தாமாக முன்வந்து சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சைகளை நடத்துவதற்கான ஒரு முன்மொழிவைச் சமர்ப்பித்திருந்ததாகவும், இதற்காக 2000 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பது தெரியவந்ததாகவும் குறிப்பிடப்பட்டது. 


இதற்காக, சுகாதார அமைச்சு மிரிகம வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தில் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணியாளர்களை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளதுடன், அறுவை சிகிச்சை செய்யும் பணிகள் இமாதம் 12ஆம் திகதி தொடங்கும் என்றும் இந்த நோக்கத்திற்காக வெல்லவாயா வைத்தியசாலையைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

SHAHNI RAMEES

பாடகர் சங்கீதன் கைது தொடர்பில் அநுரவின் கட்சி MP கடும் அதிருப்தி!


சில பாடல்கள் கலை வெளிப்பாடுகளை மட்டுமே

SHAHNI RAMEES

'டொனால்ட் ட்ரம்ப்' பெயர் சூட்டப்பட்ட மாடு! - பங்களாதேஷ் மிருகக்காட்சிசாலையில் வெடித்த சர்ச்சை!

 

அரிதான அல்பினோ வகை எருமை மாடு ஒன்றிற்கு,
SHAHNI RAMEES

புதிய இயக்கம் ஆரம்பித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: லட்சக்கணக்கில் இணையும் ஆதரவாளர்கள்...

 

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர்
SHAHNI RAMEES

அரச வங்கியில் பணம் கொள்ளை - உதவி முகாமையாளர் கைது!

 


ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில்

SHAHNI RAMEES

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

 


ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில்

SHAHNI RAMEES

பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது தமிழர்களை மீண்டும் பலிகடாவாக்கும் அரசியல்!

 



பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாடகர் கணேஷ்குமார்

SHAHNI RAMEES

சுகாதார அமைச்சரே! - எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

 

கடந்த பலவருடங்களாக யாழ். போதனா வைத்தியசாலையில்
SHAHNI RAMEES

தேர்தல் சட்ட சீர்திருத்தம்: பொதுமக்களின் ஆலோசனைகளை கோருகிறது பாராளுமன்றம்!

 


நாட்டின் தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது குறித்து
Zameera

சர்வாதிகார ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர்கிறது


 (எம்.மனோசித்ரா)


மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஏமாற்றி வரும் தற்போதைய அரசாங்கம், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதித்துறையின் அதிகாரங்களுக்குள் தலையிட்டு நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக அழித்து ஒரு சர்வாதிகாரப் பயணத்தை நோக்கி நகர்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா குற்றஞ்சுமத்தினார்.


பெலவத்தையின் நேரடித் தலையீட்டின் கீழ் மாகாணசபைகளும், பிரதேச செயலகங்களும் சிதைக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கும் தேவையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,



அரசாங்கம் நாட்டின் ஜனநாயகத்தைச் சுருக்கி, சர்வாதிகாரப் பாதையை நோக்கிச் செல்ல முயற்சிக்கிறது. மாகாண சபைத் தேர்தலைப் பற்றி யோசிப்பது கூட இல்லை. தேர்தல் மேடைகளிலும் தங்களது கொள்கைப் பிரகடனத்திலும் குறிப்பிட்ட காலத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம் என்று கூறினார்கள். ஆனால் இப்போது இரண்டு வருடங்களாகியும் தேர்தலை நடத்தாமல் ஏமாற்றி வருகின்றனர்.


ஜனநாயகக் கட்டமைப்பில் தேர்தல் நடத்துவது மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால் அதற்குத் தேவையான சீர்திருத்தங்களையோ அல்லது ஆதரவையோ பாராளுமன்றத்தில் வழங்குவதாகத் தெரியவில்லை. பல்வேறு சாட்டுக்களைக் கூறி தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிக்கிறார்கள்.


தேர்தல்களை நடத்தாதது மட்டுமன்றி, பெலவத்தையின் தலையீடு அனைத்துத் துறைகளிலும் காணப்படுகிறது. இன்று சுயாதீன ஆணைக்குழுக்கள் என்று எதுவும் இல்லை. பெலவத்தையின் சக்திகள் சுயாதீன ஆணைக்குழுக்களுக்குள் நுழைந்து அவற்றின் சுயாதீனத் தன்மையை அழித்து வருகின்றன.


'நிலக்கரி ஆணைக்குழுவில் இருந்து இன்னும் சில மாதங்களில் நாங்கள் நிரபராதிகளாக விடுவிக்கப்படுவோம்' என்று அவர்களே கூறுகிறார்கள். இதில் எங்கே சுயாதீனத் தன்மை இருக்கிறது? நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.

அதேபோல், உச்ச நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். மேல் நீதிமன்ற நீதிபதிகள் 63 வயதிலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதிலும் ஓய்வுபெற வேண்டும் என்று அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 20 ஆவது திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை மேல் நீதிமன்றத்தில் 12 இல் இருந்து 20 ஆகவும், உச்ச நீதிமன்றத்தில் 11 இல் இருந்து 17 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.


இந்த அமைப்பிற்குள் தலையிட்டு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க இவர்கள் முயற்சிக்கிறார்கள். இதற்கு சட்டத்தரணிகள் சங்கமும் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ஏன் இந்த சுயாதீன நிறுவனங்களுக்குள் தலையிடுகிறார்கள்? இவர்களுக்கு சுயாதீன நிறுவனங்களை வைத்திருக்க விருப்பமில்லை. அனைத்தையும் பெலவத்தையின் கீழ் கொண்டுவந்து கட்டுப்படுத்தவே பார்க்கிறார்கள்.


இன்று மாகாண சபைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. ஜனாதிபதியின் ஆளுநர்களே இருக்கிறார்கள். அவர்கள் பெயரளவில் மட்டுமே ஆளுநர்களாக இருக்கிறார்கள். மாகாண சபைகள் முழுமையாகப் பெலவத்தையினால் நியமிக்கப்பட்ட நபர்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன.


இன்று ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும், ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் பெலவத்தையின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் ஆளுநர்களை விடவும் இந்த பெலவத்தையின் பிரதிநிதிகளுக்கே அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


இந்த ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக அழித்து, ஒரு சர்வாதிகாரப் பயணத்தை நோக்கியே இவர்கள் நகர்கிறார்கள். இந்தச் செயல்களுக்கு எதிராக நாம் மக்களை அணிதிரட்டுவோம், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். மாகாண சபைத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை வழங்கி, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தலைமைத்துவத்தைச் ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என்றார். 

Zameera

25 மில்லியன் டொலர்கள் காணாமல் போனதற்கு யார் பொறுப்பு கூறுவது - மைத்ரி குணரத்ன கேள்வி


 25 மில்லியன் டொலர்கள்  காணாமல் போனதற்கு யார் பொறுப்பு கூறுவது என்று  முன்னாள் மத்திய மாகாண ஆளுநரும் ஜனாதிபதி சட்ட ஆலோசகருமான மைத்ரி குணரத்ன கேள்வி எழுப்புகிறார்.


கண்டியில் வைத்து அவர் ஊடகங்களுக்கு கருத்துத்  தெரிவிக்கும் போதே இவ்வாறு  தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


இந்த நாட்டில் மக்களின் 25 மில்லியன் டாலர் பணம் தவறாக வைப்ப்பிலிடப் பட்டுள்ளது, அல்லது திருடப்பட்டோ  தொலைந்தோ  போயுள்ளது. இதுகுறித்து அரசாங்கத்திற்கோ அல்லது திறைசேரிக்கோ பாராளுமன்றத்திற்கோ  முறையான  அறிக்கையை கையளிக்க முடியவில்லை என்பது தெரிந்த விடயம்.


நாட்டில் உள்ள வங்கிகள் இந்த நாட்டு மக்களுடன் நடந்து கொள்ளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த நாட்டில் வணிகம் செய்யும் உள்ளூர் வணிகர்களைப் பாதுகாக்க வேண்டியது  வங்கிகளின் ஒரு பொறுப்பாகும். 



வங்கிகள் மூலம்  வணிகம் செய்யும் உள்ளூரிலுள்ள  சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்குக் கடன் வழங்குவதில் திட்டமான எந்த ஒரு முறைமையும் தற்போது இல்லை. வங்கிகளில் மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைகளை  கட்டுப்படுத்தவோ அல்லது மேற்பார்வையிடவோ மத்திய வங்கி எது வித  நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரிய வில்லை. மத்திய வங்கி இவற்றைக் கவனிக்க வேண்டும்.


இலங்கையில் தற்போதுள்ள வங்கிகள் நாட்டின் அபிவிருத்திக்காகக் கடன் வழங்குவதற்குப் பதிலாக, திறைசேரிப் பத்திரங்களை திசை திருப்பும் நிலையே காணப்படுகிறது.  மேலும், மற்றும் அரசின் சில அதிகாரிகள் செயல்படும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது எனத் தெரிவித்தார்