Our Feeds



Saturday, February 21, 2026

Zameera

மின்சாரக் கட்டண யோசனை – பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு


 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 18 ஆம் திகதி வரை வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


நாட்டின் 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் ஏனைய விடயங்களையும் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தீர்மானத்தை ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ளது.


2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக, அதாவது ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு 13.56 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பை எதிர்பார்த்து, கடந்த 13 ஆம் திகதி இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.


2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்காக இலங்கை மின்சார சபையினால் 11.57 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பு முன்மொழியப்பட்ட போதிலும், அதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Zameera

2022 பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான தீர்மானங்களே காரணம் - நந்தலால் வீரசிங்க


 2022ம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு தேசிய ரீதியில் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களே காரணமென மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் 36வது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Zameera

அமெரிக்க கடற்படை தளபதி – பாதுகாப்பு பிரதியமைச்சர் சந்திப்பு


  அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் டி. "வெப்" கோலர் , பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்துள்ளார்.



இதன்போது, இலங்கை மற்றும் அமெரிக்கா எதிர்கொள்ளும் பொதுவான பாதுகாப்புச் சவால்கள், கடல்சார் பாதுகாப்பு, அவசர அனர்த்தங்களில் பதிலளிக்கும் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான வாய்ப்புகள், அத்துடன் கடல்சார் கள விழிப்புணர்வை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.



இலங்கையின் பாதுகாப்புப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்கும், குறிப்பாக இலங்கை கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதற்கும், அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' இயற்கை அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய அவசர மனிதாபிமான உதவி மற்றும் ஆதரவிற்கும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் இதன்போது அமெரிக்காவிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.



சட்டவிரோதக் கடத்தல் உள்ளிட்ட எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் ஏனைய நவீன சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கான பொதுவான அர்ப்பணிப்பு இந்தக் கலந்துரையாடல்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது. இது தொடர்பில் பரந்தளவிலான விழிப்புணர்வைப் பெறுவதற்காக மேம்பட்ட தொழில்நுட்ப முறைகள் மற்றும் இணைந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது குறித்தும் இதன்போது பிரதானமாகக் கவனம் செலுத்தப்பட்டது.



இலங்கையின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய அமெரிக்க கரையோரக் காவல்படைக் கப்பல் ஒன்றை வழங்குவதன் மூலம், இலங்கையின் கடற்பரப்பிற்குள் உள்ள பாதுகாப்புச் சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கு இலங்கை கடற்படைக்கு அதிக பங்களிப்பை வழங்கும் ஒரு முக்கிய படியாக இது அடையாளங் காணப்பட்டது.



இரு தரப்பினருக்கும் இடையில் தற்போதுள்ள பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு, அத்துடன் கூட்டுப் பயிற்சிகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் ஒருங்கிணைப்பை மேம்படுத்தக்கூடிய வழிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய பொதுவான நோக்கங்களுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அட்மிரல் கோலர் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Zameera

கல்விச் சீர்திருத்தம்: நிபுணர் குழு நியமனம்


 கல்விச் சீர்திருத்தச் செயல்முறையை முறையாக முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.



நேற்று (20) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் கருத்தரங்குத் தொடரின் மற்றுமொரு கட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தை மையப்படுத்தி நேற்று நடைபெற்றது. இதனை 'கல்விச் சீர்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம்' ஏற்பாடு செய்திருந்தது.



அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அனுர கருணாதிலக:



"கல்விச் சீர்திருத்தச் செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும் 2026 ஆம் ஆண்டிற்காக, பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 17 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 23,304 பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மார்ச் 5 ஆம் திகதியுடன் நிறைவடையும். அதன் பின்னர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.



தற்போதைய சாதாரண தர  முறைமை இதேபோன்று தொடரும், ஆனால் புதிய பாடத்திட்ட மேம்பாட்டுடன் அதன் வடிவம் மாற்றமடையும். இந்தச் செயல்முறையின் கீழ் மதிப்பீட்டு முறைகள் அமல்படுத்தப்படும். குறிப்பாக எமது நாட்டைப் போன்ற நாடுகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடையிலான தனிப்பட்ட உறவுகள் காரணமாக சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். இது குறித்து நிபுணர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்மானங்கள் எடுக்கப்படும்.



ஆங்கிலப் பாட நெறியில் காணப்பட்ட சில குறைபாடுகளை நாம் திருத்த வேண்டியுள்ளது. பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட காரணத்தினாலேயே அத்தகைய விடயங்கள் பாடப்புத்தகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. அதற்கு காரணமானவர்களுக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய பாடப்புத்தகங்கள் தொடர்பாகவும் நிபுணர்கள் ஊடாக ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் பின்னர் 2027 ஆம் ஆண்டு முதல் 6 ஆம் தரத்திலிருந்து மீண்டும் கல்விச் சீர்திருத்தச் செயல்முறையை ஆரம்பிப்போம்.



2026 ஆம் ஆண்டிலிருந்து இந்த மாற்றத்திற்கு 6 ஆம் தர மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயாராக இருந்தனர். அந்த மாணவர்களுக்கு 7 ஆம் தரத்திலிருந்தாவது இதனை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை அரசியல்வாதிகளாகிய நாம் தீர்மானிக்க முடியாது. கல்வியியலாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், 2027 இல் 7 ஆம் தரத்திலிருந்து மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க முடியுமா என்பதை ஆராய்வோம். இந்தச் சீர்திருத்தச் செயல்முறையைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக நிபுணர்கள் மற்றும் தேவையான ஏனைய தரப்பினரை உள்ளடக்கிய குழுவொன்றை ஜனாதிபதி விரைவில் நியமிப்பார் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

Zameera

தங்கத்தின் விலை அதிகரிப்பு




 நாட்டின் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தரவுகள் காட்டுகின்றன. 

இதன்படி, இன்று (21) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 366,300 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை,24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை இன்று 396,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHAHNI RAMEES

வாகன இறக்குமதி அனுமதி பத்திரங்கள் விற்பனை செய்து கட்சிநிதிக்கு பணம் வைப்பு? - மரிக்கார் குற்றச்சாட்டு

 


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சபை முதல்வர்

Zameera

மகாவலி ஆறு நீர்மட்டம் உயர்வு: சுங்காவில–சோமாவதி பாதை தற்காலிகமாக மூடல்


 மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் சுங்காவிலிலிருந்து சோமாவதிய வரையிலான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Zameera

காத்தான்குடி கர்பலா கிராமத்தில் அமைக்கப்பட்ட ஜாமிஉல் மனார் புதிய பள்ளிவாசலை கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்தார்..!


 காத்தான்குடி கர்பலா கிராமத்தில் அமைக்கப்பட்ட ஜாமிஉல் மனார் புதிய பள்ளிவாசலை கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்தார்..!


ஹிரா பவுண்டேஷன் அனுசரணையில் காத்தான்குடி கர்பலா கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜாமிஉல் மனார் ஜும்ஆ பள்ளிவாசலை, ஹிரா பவுண்டேஷன் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (20) ஜும்ஆ தொழுகையின் பின்னர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.


காத்தான்குடி கர்பலா கிராமம், 1980 ஆம் ஆண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் அகமட் பரீட் அவர்களுடைய காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமாகும்.


இப்பள்ளிவாசலுடன் இணைந்து, ஆண் மற்றும் பெண் ஜனாஷாக்களை தனித்தனியாக குளிப்பாட்டுவதற்கான வசதிகளுடன் கூடிய கட்டிடமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள்,


“இப்புதிய ஜும்ஆ பள்ளிவாசலுடன் இணைந்து ஜனாஷா குளிப்பாட்டும் இடத்தையும் திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணிக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஜனாஷாக்களை குளிப்பாட்டுவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இதனை கருத்திற்கொண்டு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.


டாக்டர் அகமட் பரீட் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த கிராமத்தில் இவ்வாறான ஒரு பெரிய ஜும்ஆ பள்ளிவாசலை கட்டி திறந்து வைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.


மேலும், இத்திட்டத்திற்கு உதவிய சவூதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர்களுக்கும், ஹிரா பவுண்டேஷன் செயலாளர் மும்தாஸ் மதனி உட்பட பள்ளிவாசல் நிர்வாகத்தினர், நலன்விரும்பிகள் அனைவருக்கும் அவர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.


இன்று திறந்து வைக்கப்பட்ட இப்பள்ளிவாசலின் ஜும்ஆ பிரசங்கத்தை அஷ்ஷெய்க் ஜெலீல் மதனி அவர்கள் நிகழ்த்தினார்.


-- ஊடகப் பிரிவு






Zameera

கல்கிஸ்ஸையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது


 கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 44,000 ரூபா பணம் என்பன பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன. 

கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கமேஜ நிலந்தவுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. 

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் சுதாரக தேவப்பிரிய பீரிஸ் என்பவரின் மைத்துனர் இவரென்பது தெரியவந்துள்ளது. 

குறித்த நபரின் போதைப்பொருட்களை இலங்கைக்குள் விநியோகிக்கும் பணியை இச்சந்தேகநபர் முன்னெடுத்து வந்துள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Zameera

டிரம்ப்பின் தீர்வை வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது


 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்ட உலகளாவிய வர்த்தக வரிகள் (tariffs), கூட்டாட்சி சட்டத்தை (Federal Law) மீறுவதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இந்த நீதிமன்றத் தீர்ப்பானது டிரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட ஒரு பாரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.


குறித்த வர்த்தக வரிகள் விதிப்பானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பொருளாதார நிகழ்ச்சி நிரலின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தமையே இதற்குக் காரணமாகும்.

Friday, February 20, 2026

Zameera

மின் கம்பியில் சிக்கி நபரொருவர் உயிரிழப்பு


மஹியங்கனை, மெதஓயா பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின் கம்பியில் சிக்கி நேற்று (19) நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

விவசாய நடவடிக்கைகளுக்காக தனது வயலில் இருந்தபோது, அந்தப் பகுதி முழுவதும் இழுக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத கம்பியில் சிக்குண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விலங்குகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க இந்த சட்டவிரோத மின் கம்பி அமைக்கப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கம்பியை பொருத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Sri Lanka

அமெரிக்க விமானம் தாக்கி கப்பலை அழிக்கும் ஈரானின் ஆயுதம் ஆபத்தானது - காமனீ ட்ரம்புக்கு எச்சரிக்கை.


அமெரிக்க விமானம் தாக்கி கப்பலை அழிக்கும் ஈரானின் ஆயுதம் ஆபத்தானது - காமனீ ட்ரம்புக்கு எச்சரிக்கை.





Zameera

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியால் 10,000 கோடி ரூபாய் நட்டம்


 தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையினால் நாட்டிற்கு 10,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தரம் குறைந்த நிலக்கரிகேள்விப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்குப் போதுமான ஏற்பாடுகள் இருந்தபோதிலும், அதனை இரத்து செய்யாமை பாரதூரமான விடயமாகும்.

ஒப்பந்தத்தின்படி இரண்டு நிலக்கரி கப்பல்கள் வராவிட்டால் அந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

டிசம்பர் மாதம் ஒரு கப்பலும், ஜனவரியில் நான்கு கப்பல்களும் மட்டுமே வந்துள்ளன.

பெப்ரவரி மாதத்தில் இதுவரை நான்கு கப்பல்களே வந்துள்ளன. 

மொத்தம் 15 கப்பல்கள் வந்திருக்க வேண்டிய நிலையில் இதுவரை 8 கப்பல்களே வந்துள்ளன. 

இந்தக் கப்பல் தாமதத்தினால் மட்டும் நாட்டிற்கு 31 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

தரம் குறைந்த நிலக்கரி கேள்வி பத்திரத்தால் இதுவரை 7,500 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இது 10,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என டி.வி. சானக்க தெரிவித்தார்.