Our Feeds



Saturday, April 11, 2026

Zameera

இலங்கை நிலக்கரி நிறுவன காரியாலயத்திற்கு சீல் வைப்பு

 

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி செயலாளர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் காரியாலயத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தற்போது முத்திரையிட்டுள்ளனர்

ShortNews

வீதி விதிமீறல்களை முறைப்பாடு அளிக்க புதிய 'WhatsApp' இலக்கம் அறிமுகம்!

 


அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில்

ShortNews

சில நாட்களுக்கு பெட்ரோல் வாகனங்களுக்கான QR முறைமை நீக்கம்!


புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும்

Zameera

இலங்கை பொருளாதாரம் நெருக்கடியில் – ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரிக்கை


 மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் காரணமாக, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டு 4% ஆகக் குறையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) கணித்துள்ளது.



கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட சிரேஷ்ட பொருளாதார நிபுணர் லிலியா அலெக்சாண்டியன் கருத்துத் தெரிவிக்கையில், இந்த நெருக்கடி நீண்ட காலத்திற்கு நீடித்தால், பொருளாதார வளர்ச்சி மேலும் 0.5% முதல் 0.8% வரை வீழ்ச்சியடையக்கூடும் எனச் சுட்டிக்காட்டினார்.

எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு



இந்த நெருக்கடியின் நேரடி விளைவாக, நாட்டின் எரிசக்தி மற்றும் உணவு விலைகளில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது:



• பணவீக்கம்: மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, இவ்வாண்டு பணவீக்கம் 5.2% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோதல்கள் நீடித்தால், இது மேலும் 3% முதல் 5% வரை அதிகரிக்கக்கூடும்.



• எண்ணெய் விலை: சர்வதேச சந்தையில் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த ஜனவரியில் 60 டொலராக இருந்த நிலையில், தற்போது 110 டொலர் வரை உயர்ந்துள்ளது.



• பொருளாதார தாக்கம்: இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4% எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதிக்காக செலவிடப்படுவதால், இந்த விலை ஏற்ற இறக்கங்கள் பொருளாதாரத்தில் தீர்மானமிக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


விவசாயம் மற்றும் உற்பத்தித் துறை பாதிப்பு


எரிசக்தி நெருக்கடிக்கு மேலதிகமாக, ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் உற்பத்திச் செலவை அதிகரித்துள்ளது:


• யுரியா உரம் விலை 50% ஆலும், அமோனியா விலை 40% ஆலும் அதிகரித்துள்ளன.


• இது உள்நாட்டு விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக அமையும் என அலெக்சாண்டியன் தெரிவித்தார்.


சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வருமானம்


சுற்றுலாத்துறை குறித்து கருத்துத் தெரிவித்த பிரதம பொருளாதார அதிகாரி லக்மினி பெர்னாண்டோ பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார்:


• சுற்றுலாப் பயணிகள் வருகை: வான்பரப்பு மூடப்படுதல் மற்றும் விமான டிக்கெட் விலைகள் அதிகரிப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 20% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் 185,000 சுற்றுலாப் பயணிகளே வருகை தந்துள்ளனர், இது அரசாங்கத்தின் இலக்கை விடக் குறைவானதாகும்.


• வெளிநாட்டு கையிருப்பு: இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த மாதத்தில் 3.5% ஆல் குறைந்துள்ளது. வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டி செலுத்தல்கள் ஆரம்பிக்கப்படும் போது நிலைமை மேலும் சிக்கலாகலாம்.


• பணப்பரிமாற்றம்: இலங்கைக்கு அதிகளவான வெளிநாட்டுப் பணம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே கிடைக்கிறது. அங்குள்ள நெருக்கடியால் இந்த வருமானம் பாதிக்கப்பட்டால், அது வெளிநாட்டு கையிருப்பைப் பாதிக்கும்.


ஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரை


வாகன இறக்குமதி போன்ற தற்காலிக வருமான வழிகளில் தங்கியிருக்காமல், எதிர்வரும் ஆண்டுகளுக்கு நிலையான வருமான வழிகளைக் கண்டறிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிய அபிவிருத்தி வங்கி இதன்போது வலியுறுத்தியுள்ளது.

Zameera

அமெரிக்க துணை ஜனாதிபதி–பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு


 அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பைச் சந்தித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் அலுவலக அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க துணை ஜனாதிபதி இன்று (11) பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளார்.

Zameera

மாலைத்தீவு ஜனாதிபதி அடுத்த மாதம் இலங்கை விஜயம்


 மாலைத்தீவு ஜனாதிபதி Mohamed Muizzu அடுத்த மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் மற்றும் கடற்றொழில் துறையிலான புதிய முதலீடுகள் குறித்து, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான மாலைத்தீவு உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. 


மாலைத்தீவு ஜனாதிபதியின் இந்த விஜயத்திற்கு இணையாக, இரு நாடுகளினதும் கடற்றொழில் துறைகளுக்கு இடையே ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 


இரு நாடுகளினதும் கடற்றொழில் துறை சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், மாலைத்தீவின் புதிய மீன் வளங்களையும் இலங்கையின் வளர்ச்சியடைந்த தகரத்திலடைக்கப்பட்ட மீன் (Canned Fish) கைத்தொழிலையும் ஒன்றிணைத்து, புதிய உற்பத்திகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துச் சுட்டிக்காட்டினார். 


குறிப்பாக மாலைத்தீவுச் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கைக்குள் மீன் பதப்படுத்துதல் (Processing) மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட மீன் உற்பத்திகளைத் தயாரிப்பது தொடர்பில் இரு தரப்பினரும் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர். 


தற்போது "Made in Sri Lanka" முத்திரையுடன் கூடிய சில உற்பத்திகள் டுபாய் சந்தை ஊடாக மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறான உற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக இலங்கையிலிருந்து மாலைத்தீவிற்குப் பெற்றுக்கொள்வதற்கான முறையொன்றை வகுப்பது குறித்தும் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது. 


இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.


Zameera

குற்றம் செய்த ஆக்கிரமிப்பாளர்கள் தப்பிச் செல்ல ஈரான் அனுமதிக்காது - மொஜ்தபா காமேனி

அமெரிக்க - இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரான் தியாகிகளின் மரணங்களுக்கு பழிவாங்குவோம் என்றும் ஈரானை தாக்கியவர்களை நிச்சயமாக தண்டிப்போம் என்றும் ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா காமேனி கூறியுள்ளார். 


அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:


அமெரிக்கா  -- இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட எனது தந்தை அயதுல்லா அலி காமேனி மற்றும் பிற தியாகிகளின் மரணங்களுக்கு பழிவாங்குவோம். ஈரானை தாக்கியவர்களை நிச்சயம் தண்டிப்போம். 



குற்றம் செய்த ஆக்கிரமிப்பாளர்கள் தப்பிச் செல்ல ஈரான் அனுமதிக்காது. இந்த போரில் ஏற்பட்ட ஒவ்வொரு காயத்துக்கும் இழப்பீடும் தியாகிகளுக்கு ரத்தப்பணமும் மாற்றுத்திறனாளியான முன்னாள் படைவீரர்களுக்கு மறுவாழ்வு நஷ்டஈடும்  நாங்கள் நிச்சயமாக கோருவோம். 


ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தை ஒரு புதிய கட்டத்துக்கு நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம். அதை நிர்வகிப்பதில் ஈரான் ஒரு புதிய கட்டத்துக்குள் நுழைகிறது. ஈரான் போரை விரும்பவில்லை என்றாலும் தனது உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. 


இந்த போரில் ஈரான் திட்டவட்டமாக வெற்றியாளராக திகழ்கிறது. தற்காலிக போர்நிறுத்தம் என்பது போரின் முடிவல்ல. அனைத்து இராணுவ பிரிவுகளும் உயர் தலைவரின் கட்டளையை பின்பற்றி தங்கள் துப்பாக்கிச் சூட்டை நிறுத்தி வைத்துள்ளன. 


எங்கள் கைகள் இப்போதும் துப்பாக்கியின் விசையின் மீதே உள்ளன. எதிரி தரப்பிலிருந்து மிகச் சிறிய குற்றம் நேர்ந்தாலும் அது முழு பலத்துடன் முறியடிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். 


 

Zameera

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா விரைவில் திறக்கும் - ட்ரம்ப்


“ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா விரைவில் திறக்கும். ஆனால், இதுவொரு எளிதான நடவடிக்கை அல்ல” என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நேற்று (10) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந் நடவடிக்கைக்கு மற்ற நாடுகளும் உதவுவதற்கு முன்வந்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற நாடுகள் இந்த நீரிணையை பயன்படுத்துகின்றன. எனவே அவை உதவ முன்வந்துள்ளன. இது எளிதாக இருக்காது. ஆனாலும் நான் இதைச் சொல்கிறேன் இதை விரைவில் திறப்போம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

போர் தொடங்கியிதிலிருந்து ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது. இது உலகளாவிய ரீதியில் எரிசக்தி விநியோகத்துக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணையை விரைவில் திறப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.




Zameera

நிலக்கரி விவகாரம்: ஜனாதிபதி செயலாளரால் சி.ஐ.டியில் முறைப்பாடு


 2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, ஜனாதிபதி செயலாளர் இன்று (11) முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 


இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகளிலும், பாராளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Zameera

கற்பிட்டியில் 907 கிலோ கிராம் கடத்தப்பட்ட உலர்ந்த மஞ்சள் மீட்பு


 கற்பிட்டியின் பங்களவத்தை மற்றும் சேதவாத்தை கடற்கரைப் பகுதிகளில் இந்த மாதம் 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. 


கடந்த ஏப்ரல் 06 ஆம் திகதி இரவு, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள 'விஜய' கடற்படைக் கப்பலின் ஆலங்குடா துணைப் பிரிவினரால் பங்களவத்தை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) மூட்டைகள் சோதனையிடப்பட்டன. இதன்போது, சுமார் 80 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 07 ஆம் திகதி மாலை சேதவாத்தை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான 16 மூட்டைகள் கண்டறியப்பட்டன. 


அவற்றைச் சோதனையிட்ட கடற்படையினர், அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 827 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளைக் கைப்பற்றினர். 


இவ்வாறாக இரு தினங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zameera

22 பில்லியன் நிலக்கரி மோசடி : அமைச்சர் பதவி விலகுவார் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம் - முஜிபுர் ரஹ்மான்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


நிலக்கரி கொள்வனவு மோசடி மூலம் நாட்டுக்கு 22 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய அமைச்சர் பதவி விலகுவார் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால்  சிறந்த அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதாக வந்த இவர்கள், எந்த  குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டாலும் பதவி விலகுவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற மின்வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு மூலம் அரசாங்கத்துக்கு 22 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய அமைச்சர் பதவி விலகுவார் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை. அவரின் வெட்கம் என்ற நரம்பு பெலவத்தையால் துண்டித்திருக்கிறது. அதனால் அவருக்கு தொடர்ந்து இந்த  அமைச்சுப்பதவியில் இருக்க முடியும்.


அத்துடன் இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது, அப்போது இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு திருடர்கள் என குற்றச்சாட்டு தெரிவித்தபோது, அந்த அமைச்சர்கள் அமைச்சுப்பதவியில் இருந்து விலகினார்கள். ரவி கருணாநாயக்க, திலக்மாரபன்ன ஆகியோருக்கு எதிராக அன்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் அமைச்சுப்பதவியை துறந்தார்கள். ஆனால்  சிறந்த அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதாக வந்த இவர்கள், எந்த  குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டாலும் பதவி விலகுவதில்லை. மாறாக ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் அமைச்சரை பாதுகாக்கவே முற்படுகிறார்கள்.


அத்துடன் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக தற்போது  தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு எவ்வாறு இருந்தாலும், அவர் உர கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருக்கும்போது மேற்கொண்ட மோசடிக்கு எதிிராக குற்றச்சாட்டு ததெரிவிக்கப்பட்டு, தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு விசாரணை முடியும்வரையாவது அமைச்சர் இந்த அமைச்சுப்பதவியில் இருந்து விலகி இருக்கவேண்டும். அதனையும் செய்யவில்லை.


அத்துடன் நிலக்கரி கொள்வனவில் நட்டம் ஏற்பட்டிருந்தால் அதனை திறைசேரியில் இருந்தும்  ஒரு  பகுதியை மின்கட்டணத்தில் இருந்தும் மற்றும் வழக்கு நடவடிக்கைகளின் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.


திறைசேரியின் பணம். மின்கட்டண அதிகரிப்பு, வழக்கு விசாரணைக்காக செலவிடும் பணம் அனைத்தும் மக்களின் பணமாகும். ஜனாதிபதியும் தனது அமைச்சரின் தவறை மறைத்து, ஏற்பட்டிருக்கும் நட்டத்தை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவே நடவடிக்கை எடுத்திருக்கிறார்.


மேலும்  நிலக்கரி கொள்வனவு தொடர்பில் கணக்காய்வு அறிக்கையை தயாரிக்கும்போது, கோப்குழுவின் தலைவர் கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு பல தடவைகள் சென்று, இது தொடர்பில் அழுத்தம் கொடுத்திருக்கிறார். கோப் குழு தலைவருக்கு எவ்வாறு அதனை செய்ய முடியும்.? அதேநேரம் அரச கணக்காய்வாளர் நாயகம் வெற்றிடமாகி இருந்தபோது, கணக்காய்வாளர் நாயகத்தை  நியமிப்பதற்கு  அரசாங்கத்துக்கு  8மாதத்துக்கும் அதிக காலம் சென்றது.


அவர்களுக்கு தேவையான ஒருவரை நியமிப்பதற்கே முயற்சித்து வந்தார்கள். ஏனெனில் இந்த வருடம் ஜனவரியில் இருந்து அரசாங்கத்தின் மோசடிகள் தொடர்பான கணக்காய்வுகள் ஆரம்பிக்கப்படுவதாக நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தாேம். அதனைப்படையிலே தற்போது நிலக்கரி கொள்வனவு தொடர்பான கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதா இல்லையா என கேட்கிறோம் என்றார்.

 

Zameera

மட்டக்குளியில் பேருந்து விபத்து – மாணவி பலி


 மட்டக்குளியில் பேருந்து ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். 


மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) நண்பகல் பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை மாணவி ஒருவர், அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். 


விபத்தில் படுகாயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 


உயிரிழந்த மாணவி மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடையவர் ஆவார். 


சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Zameera

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹாசிம் நியமனம்


 ஐக்கிய மக்கள் சக்தியின் 2026 நடப்பாண்டுக்கான தவிசாளராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டுள்ளார். 


இவருக்கான நியமனக் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி வழங்கி வைத்தார். கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரஞ்சித் மத்தும பண்டார அவர்களும் இந்நிகழ்வில் பிரச்சனமாகி இருந்தார்.