Our Feeds



Wednesday, April 22, 2026

Zameera

2026 இல் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையக்கூடும்


 2025 ஆம் ஆண்டில் இலங்கை எட்டிய பொருளாதார வளர்ச்சி வீதத்தை விடக் குறைவான ஒரு பெறுமதியே 2026 ஆம் ஆண்டில் பதிவாகக்கூடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று (22) நடைபெற்ற “BIG FOCUS” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். 

சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக விவசாயத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன், கைத்தொழில் துறையில் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை மற்றும் ஏற்றுமதித் துறையில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளும் பலவீனமடையும் அபாயம் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். 

உலகப் பொருளாதாரச் சூழலும் இதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய பேராசிரியர், சர்வதேச நாணய நிதியம் (IMF) உலகப் பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்புகளைக் குறைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

உலகப் பொருளாதார வளர்ச்சி மந்தமடைவது இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டின் ஏற்றுமதியையும் பாதிக்கும் என்றும், எரிபொருள், உரம் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகச் சங்கிலி முறிவுகளும் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHAHNI RAMEES

ஈரான் - அமெரிக்க யுத்த நிறுத்தத்தை பாகிஸ்தானின் கோரிக்கைக்கு இணங்க நீட்டிப்பதாக ட்ரம்ப் அறிவிப்பு!

 

பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க இரானுடனான
Zameera

மூன்றரை கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது


 சுமார் மூன்றரை கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவரை மாதம்பே போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமார் 216,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

கற்பிட்டி, நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறிகளை ஏற்றி வந்த லொறி ஒன்றில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மரக்கறி ஏற்றிச் சென்ற பல வாகனங்களை மறித்துச் சோதனை செய்த போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, இந்தப் போதை மாத்திரைகள் இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி வரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


Zameera

‘Walk For Peace’ அமைதி நடைப்பயணம் தம்புள்ளையில் இன்று ஆரம்பம்

 

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ (அமைதிக்கான நடைப்பயணம்), அரச அனுசரணையுடன் இன்று (22) தம்புள்ளையில் ஆரம்பமாகின்றது. இந்தப் பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. 

இன்று காலை 6.30 மணிக்கு இந்த அமைதி நடைப்பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை, 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்களாக 200-க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் அமைதிக்காக மேற்கொண்ட நடைப்பயணம் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அந்தப் பயணமே தற்போது இலங்கையில் ‘ஏஹிபஸ்ஸிகோ’ (Ehipassiko) அமைதி நடைப்பயணம் என்ற பெயரில் அரச அனுசரணையுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கமைய, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பன்னாகர (Pannakara) தேரர் தலைமையிலான பௌத்த தேரர்கள் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தனர். இந்த அமைதி நடைப்பயணத்தில் ‘ஆலோகா’ (Aloka) எனும் நாயும் தேரர்களுடன் இணைந்துள்ளது. 

இந்த நடைப்பயணத்தின் முதல் நாளான இன்று மாத்தளை அலுவிஹாரை வரை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zameera

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை


 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு  வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Zameera

பிரேமலால் ஜயசேகர இன்று நீதிமன்றில் ஆஜர்


 கைது செய்யப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர இன்று (22) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, துப்பாக்கியைக் காட்டி நபரொருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நுவரெலியா பகுதிக்கு வருகை தந்திருந்த போது, அவிசாவளையிலிருந்து சுற்றுலா வந்திருந்த குழுவினருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது அவர் தன்னிடம் இருந்த பிஸ்டல் ரக துப்பாக்கியைக் காட்டி அந்தக் குழுவினரை அச்சுறுத்தியதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

மேலும், சந்தேகநபரிடமிருந்த துப்பாக்கிக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் 2025 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Zameera

இலங்கையின் மறுசீரமைப்பு பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் நிதியுதவி

டிட்வா சூறாவளியினால் இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவியை இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், கடினமான இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் தருணத்தில், பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கும், காட்டிய ஒற்றுமைக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதியுதவியானது சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கும் பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tuesday, April 21, 2026

Zameera

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வோம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை இன்னும் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

 

இன்று (21) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த விசாரணைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

அத்துடன், இந்த விசாரணைகளைச் சரியான முறையில் முன்னெடுப்பதற்காக பொலிஸாரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

 

விசாரணைகள் தொடர்பான விபரங்கள் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும், மிகக் குறுகிய காலத்தில் இவற்றை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனத் தான் நம்புவதாகவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

 

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மாத்திரமன்றி, நாட்டில் இடம்பெற்ற அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகள், ஊழல், மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன், மக்கள் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.

 

இதேவேளை, இம்முறை மே தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள அனைத்து மே தினப் பேரணிகளுக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாகத் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


 

Zameera

உடன்பாடு விரைவில் எட்டப்படாவிட்டால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்கும் ; ட்ரம்ப் எச்சரிக்கை


 இரண்டு வார கால போர்நிறுத்தத்தை நீடிக்கத் தான் விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

"எங்களிடம் அதிக நேரம் இல்லை" என்று குறிப்பிட்ட அவர், விரைவில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்கும் என்று எச்சரித்துள்ளார்.

ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும், அமெரிக்க இராணுவம் தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Zameera

'தாழ் தள' பஸ் சேவை மாகும்புரவில் ஆரம்பம்


 'கிளீன் ஸ்ரீ லங்கா' தேசிய திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோரின் முன்னுரிமையைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்ட 'தாழ் தள' பேருந்து சேவை இன்று (21) மாகும்புர பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர், கண்பார்வை சவால்களைக் கொண்டோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மிகவும் இலகுவாக ஏறிச் செல்லக்கூடிய வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட 10 பேருந்துகள் இன்று முதல் போக்குவரத்து சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ஒவ்வொரு பேருந்திலும் 30 ஆசனங்கள் உள்ளன. அத்துடன், சக்கர நாற்காலிகளில் வரும் பயணிகளுக்கெனத் தனியான இடவசதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த முன்னோடித் திட்டம் மாகும்புரவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும், மாகும்புரவிலிருந்து கடவத்தை வரையிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய சுகாதார மையங்கள் இந்த வழித்தடங்களால் உள்ளடக்கப்படுகின்றன.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த பேருந்துகள் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, ஏனைய பயணிகளுக்கும் வசதியான மற்றும் நம்பகமான சேவையை வழங்கும் எனத் தெரிவித்தார். இவ்வருட இறுதிக்குள் இவ்வாறான 122 பேருந்துகளை சேவையில் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் கண்டி, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கும் இச்சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


Zameera

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 25 பேர் கைது


 நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 25,683 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 


இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் 191 பேர் சாதாரண பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும், 91 பேர் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHAHNI RAMEES

கொழும்பில் குண்டுத் தாக்குதல்! - பரவும் செய்தியில் உண்மையில்லை....

 

கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில்
Zameera

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எ.பி.வூட்லர் தெரிவித்துள்ளார்.

தனது துப்பாக்கி முனையில் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.