Our Feeds



Monday, May 11, 2026

Zameera

மஹிந்த ராஜபக்ஷ நாளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை


 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமேஜ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை காலை 9.00 மணிக்கு அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், சில சட்ட ரீதியான விடயங்கள் குறித்து கலந்துரையாட வேண்டியுள்ளதால், இன்று மாலை சட்டத்தரணிகள் குழுவொன்றுடன் இது குறித்து ஆலோசிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, மறைந்த கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த வாக்குமூலமானது அச்சுறுத்தி, வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டது என கபில சந்திரசேன நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி மனோஜ் கமேஜ், அத்தகைய சூழலில் இந்த அழைப்பு விடுக்கப்படுவது பாரதூரமான விடயம் எனவும் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சட்டவிரோத வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்படுமானால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக ஆணைக்குழுவிற்கு வருவார் என்றே நாம் தீர்மானித்துள்ளோம். ஏனெனில் அவர் ஒருபோதும் பிரச்சினைகளில் இருந்து தப்பியோடுபவர் அல்ல. எனினும், சில சட்ட ரீதியான காரணிகளை நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.


Zameera

அமெரிக்காவிற்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கான தடைகள் நீக்கம்

அமெரிக்காவிற்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீங்கியுள்ளதாகவும், இலங்கையிலிருந்து கடல் நண்டுகளை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க அரசு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்துள்ளதாகவும் கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவ்வமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவிற்கு மீன் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, "கடல் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின்" கீழ் விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் தேசிய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு, இலங்கையின் கடல் நண்டு பிடிப்புச் செயல்முறை மற்றும் அது தொடர்பான விதிமுறைகள் அமெரிக்கத் தரத்திற்கு இணங்குவதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

2025 நவம்பரில் அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பொன்றினால் இந்த ஏற்றுமதி நடவடிக்கைகளில் சில பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், கடற்றொழில் திணைக்களம், NARA நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிவியல் தரவுகள் மற்றும் விடயங்களைக் கருத்திற்கொண்டு, NOAA அமைப்பு தனது முடிவை மறுபரிசீலனை செய்து இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த அனுமதியின் கீழ் பின்வரும் விசேட அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன:

அமெரிக்காவிற்கு மீன் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தேவையான "ஒப்பீட்டுத் தகுதிச் சான்றிதழ்" இதன் மூலம் இலங்கைக்கு கிடைக்கிறது.

இந்த உத்தியோகபூர்வ அனுமதி 2029 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என்பதுடன், அக்காலப்பகுதிக்குள் இலங்கையிலிருந்து கடல் நண்டுகளை எவ்வித தடையுமின்றி ஏற்றுமதி செய்ய முடியும்.

மீன்பிடிக்கும் போது டொல்பின்கள், திமிங்கலங்கள் போன்ற கடல் பாலூட்டிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கை பின்பற்றும் வழிமுறைகள் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுள்ளன.

இந்த வெற்றியானது நாட்டின் கடற்றொழில் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்கவும் பெரும் பக்கபலமாக அமையும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

SHAHNI RAMEES

மதகுருமார்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களால் இழைக்கப்படும் துஷ்பிரயோகங்கள் வெளிச்சத்திற்கு வருவது மிகக் குறைவாகவே உள்ளது. - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

 


சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் நீதியைப்
SHAHNI RAMEES

Airbus ஊழல்! - உயிரிழந்த கபில சந்திரசேன - ராஜபக்ஷர்கள் பொறுப்புக்கூற வேண்டும்!

 


ஸ்ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின்

SHAHNI RAMEES

மாகாண சபைத் தேர்தல் : தீர்மானமொன்று எடுக்காவிட்டால்... - சைலன்டாக அரசை எச்சரிக்கும் SJB

 


எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி மாகாண சபைத்

SHAHNI RAMEES

புதிய மின்சாரக் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்....

 

இந்த ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம்

Zameera

மழை நிலைமை தொடரும் : வளிமண்டலவியல் திணைக்களம்


 தாழ் வளிமண்டல தளம்பல் நிலைமை, அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் குறைந்த அழுத்தப் பிரதேசமாக வளர்ச்சியடையக்கூடும் எனவும், இதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை வரும் நாட்களில் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த தொகுதியின் செல்வாக்கினால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ. அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Zameera

ஈரான் பதிலை நிராகரித்தார் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்துக்கு ஈரான் அளித்த பதிலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். 

தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "ஈரானின் பிரதிநிதிகள் அனுப்பிய பதிலை இப்போதுதான் வாசித்தேன். இது எனக்குப் பிடிக்கவில்லை இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பதிவிட்டுள்ளார். எனினும் நிராகரிப்புக்கான காரணம் குறித்து அவர் தெளிவாக எதையும் விளக்கவில்லை.

முன்னதாக அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் காலதாமதம் செய்யும் தந்திரத்தைக் கையாண்டு அமெரிக்காவைப் பார்த்துச் சிரித்து வருவதாகவும், இனி அவர்கள் அப்படிச் சிரிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஈரானுக்குப் புதிய வாழ்வாதாரத்தை வழங்கியதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், தற்போது நிலைமை மாறிவிட்டதாகத் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஈரானின் பதிலில் சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும். அடுத்த 30 நாட்களுக்கு ஈரான் எண்ணெய் விற்பனை மீதான தடைகளை நீக்கி, கடற்படை முற்றுகையைத் தளர்த்த வேண்டும் ஆகிய நிபந்தனைகள் அதில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

ஈரானின் இந்த ஒட்டுமொத்த பதில் திருப்திகரமாக இல்லை எனக் கருதும் ட்ரம்ப், தனது 'வால் ஆஃப் ஸ்டீல்' என அழைக்கப்படும் கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதார அழுத்தத்தைத் தொடரப்போவதாக தெரிகின்றது.

 

Zameera

மே 1 முதல் டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைகள் அறிமுகம்


 (செ.சுபதர்ஷனி)


மோட்டார் வாகனங்களுக்கான காப்புறுதிச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் 'டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைகளை' விநியோகிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதி சங்கம் உள்ளிட்ட துறையின் முக்கிய பங்குதாரர்கள் இணைந்து எடுத்துள்ள இந்தத் தீர்மானம் குறித்து, பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.இலங்கை செய்திகள்


இந்த புதிய நடைமுறைக்கு அமைவாக, காப்புறுதி நிறுவனங்கள் டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைகளை விநியோகிப்பதுடன், காப்புறுதிதாரரின் விசேட கோரிக்கையின் பேரில் மாத்திரம் அச்சிடப்பட்ட சான்றிதழ்களை வழங்கவுள்ளன. அத்துடன், காப்புறுதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக கைபேசி செயலி ஊடாகவும் இந்த டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த டிஜிட்டல் முறைமைக்கு இணையாக 'தேசிய காப்புறுதி சரிபார்ப்பு அமைப்பு' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் வாகனக் காப்புறுதியின் செல்லுபடியாகும் தன்மையை பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இலகுவாக உறுதிப்படுத்த முடியும்.


வாகனக் காப்புறுதியின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதற்காக 1338 என்ற விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது கைபேசி ஊடாக *1338# என்ற யுஎஸ்எஸ்டி குறியீட்டைப் பயன்படுத்தியோ அல்லது 1338 என்ற இலக்கத்திற்கு வாகன இலக்கத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்புவதன் மூலமோ காப்புறுதிச் சான்றிதழ் தற்போது செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா ? என்பதை உடனடியாக அறிந்துகொள்ள முடியும். மே முதலாம் திகதி முதல் டிஜிட்டல் அட்டைகள் விநியோகிக்கப்பட்டாலும், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சாதாரண காப்புறுதி அட்டைகள் அவற்றின் காலாவதித் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் தற்காலிக காப்புறுதி ஆவணங்கள் வழங்கும் முறை மறு அறிவித்தல் வரை தொடரும். ஒரு சாரதி டிஜிட்டல் அட்டையை நேரடியாகச் சமர்ப்பிக்கத்  தவறினாலும், அதன் அச்சிடப்பட்ட நிழற்படப் பிரதியைச் சமர்ப்பிக்கும் போது அதிகாரிகள் 1338 என்ற இலக்கத்தின் ஊடாக அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் படி, இந்த டிஜிட்டல் ஆவணங்கள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவை என்பதுடன் அவற்றின் செல்லுபடியாகும் தன்மையை நிராகரிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Zameera

ஐந்து மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை


 நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, ஐந்து மாவட்டங்களுக்கு உட்பட்ட 8 பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள தகவலின்படி, பின்வரும் மாவட்டங்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன:

பதுளை

குருணாகல்

மாத்தளை

மொனராகலை

இரத்தினபுரி

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவதானமாக இருக்குமாறும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Zameera

யாழ் தேவி மீண்டும் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது


 கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ் தேவி ரயில் சேவை இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யாழ் தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கவுள்ளது. 

அதேவேளை, ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த ரயில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

யாழ் தேவி ரயிலானது குளிரூட்டப்பட்ட 4 முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்டதுடன், அதில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Sunday, May 10, 2026

Zameera

ஹேக்கர்களின் தாக்குதல்கள் எதிர்காலத்திலும் தொடரலாம் : இது இந்தத் துறையின் இயல்பு - வசந்த சமரசிங்க


 உலகம் முழுவதும் சைபர் தாக்குதல்கள் மற்றும் ஹேக்கர்கள் மூலம் பல்வேறு மோசடிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் உலகின் முதல் சந்தர்ப்பம் அல்ல எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.



இன்று (09) ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து அதிகளவில் கலந்துரையாடி வருவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைத்து அமைச்சுகள் சார்பாகவும் இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.



“இந்த ஹேக்கர்களின் தாக்குதல்கள் எதிர்காலத்திலும் தொடரலாம். இது இந்தத் துறையின் இயல்பு. நாம் உரிய பாதுகாப்பைப் பேணி, அவதானத்துடன் இந்த கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்க வேண்டும்” என அமைச்சர் கூறினார்.

Zameera

ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை நாளை ஆரம்பம்

 

2023/2024 ஆம் ஆண்டுகளுக்குரிய ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சைகள் நாளை (11) ஆரம்பமாகவுள்ளன. 


செய்முறைப் பரீட்சை உள்ளடங்கலாக, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மூன்று பரீட்சை மையங்களில் இந்தப் பரீட்சைகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 


பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே அந்தந்த ஆசிரியர் கலாசாலைகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 


அத்துடன், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாகவும் இந்த அனுமதி அட்டைகளைத் தரவிறக்கம் செய்துகொள்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.