Our Feeds



Sunday, April 19, 2026

Zameera

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பம்


 தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள், நாளை (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 


ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கடந்த 17ஆம் திகதி முதல் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Zameera

அமெரிக்கா போர்நிறுத்த நிபந்தனைகளை மீறுகிறது - ஈரான்


 ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் முற்றுகையானது போர்நிறுத்த நிபந்தனைகளை மீறும் செயல் என ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.


முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டு வார கால நிபந்தனையுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.


அந்த காலப்பகுதியில் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.


தற்போது இந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையை ஈரான் மீண்டும் மூடியுள்ளதுடன், ஈரானிய கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை நீக்கப்படும் வரை அது மூடப்பட்டிருக்கும் என்றும் அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.


இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணை குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கைகள் செல்லுபடியாகாது என்று குறிப்பிட்டுள்ளது.

SHAHNI RAMEES

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் நிறைவு!


மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய

SHAHNI RAMEES

ஈரானை 'வெனிசுவேலா போன்ற நிலைக்கு தள்ளவும் முயன்றனர்!

 


ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது

SHAHNI RAMEES

கடுகதி ரயிலுடன் மோதி ரஷ்ய யுவதி ஒருவர் பலி!

 


பெலியத்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த

SHAHNI RAMEES

அமைச்சர் பதவி விலகியமை எந்த வகையிலும் அவசியமானதல்ல... - கூட்டு எதிர்க்கட்சி அறிக்கை

 

நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகள் காரணமாக
Zameera

மஹரகமையில் வீடொன்றிற்குத் தீ வைப்பு - தாயும் மகளும் உயிரிழப்பு

மஹரகமையில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரு ஆண்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். 


மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக மாவத்தை, இரண்டாவது குறுக்கு ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த 55 வயதுடைய பெண் மற்றும் அவரது 16 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 


இந்தக் கொடூரச் சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமியின் தந்தை மற்றும் வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


நேற்று (18) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அயலவர்கள் உடனடியாகச் செயல்பட்டுத் தீயை அணைத்து, காயமடைந்த இரு ஆண்களையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 


பின்னர் வீட்டைச் சோதனையிட்ட போது, அறையொன்றுக்குள் தாயும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 


குற்றச் செயல் நடந்த இடத்தில் பெட்ரோல் வாடை வீசியுள்ளதோடு, வீடொன்றிற்குத் தீ வைத்து மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவம் இதுவென விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 


கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Zameera

புத்தாண்டில் அதிக கட்டணம்: 80 பேருந்துகளுக்கு அபராதம்




 புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 


கடந்த 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை 680 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதன் நடமாடும் பேருந்து பரிசோதனை பிரிவின் பிரதானி ரோஹண வத்தகே தெரிவித்தார். 


இதன்போது, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 80 பேருந்துகள் கண்டறியப்பட்டதுடன், மேலதிகமாகப் பெறப்பட்ட பணம் மீண்டும் பயணிகளுக்கே பெற்றுக்கொடுக்கப்பட்டது. 


அத்துடன், குறித்த பேருந்து நிர்வாகங்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். 


அதன்படி, நேற்று (18) ஒரு நாளில் மட்டும் சுமார் 150 பேருந்துகள் சோதனையிடப்பட்டதுடன், அவற்றில் அதிக கட்டணம் வசூலித்த 12 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டதாக ரோஹண வத்தகே மேலும் தெரிவித்தார். 


பேருந்துகளைச் சோதனையிடும் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. 


இதன் ஒரு கட்டமாக ஹைலெவல் வீதியின் ஹங்வெல்ல, கலுஹக்கல பகுதியில் பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

Zameera

நிலக்கரி கொள்வனவில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை

நிலக்கரி கொள்வனவில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை எனவும், எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்திலோ அல்லது கோப் (COPE) குழுவிலோ அவர்களால் இதுவரை நிரூபிக்க முடியவில்லையெனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.

நிலக்கரி மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் கூச்சலிட்டாலும், இது குறித்து நாடாளுமன்றத்தில் பல மணிநேரம் விவாதிக்கப்பட்டுள்ளதுடன், கோப் குழுவில் ஆறு மணித்தியாலங்களுக்கும் மேலாக இது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.



அத்துடன், விடயப்பொறுப்பு அமைச்சருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது 22 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றிய போதிலும், மோசடி நடந்துள்ளதை எவராலும் உறுதியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


மக்களிடையே நிலவும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கும், இது தொடர்பாக முறையான சட்டபூர்வ விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதி அணுர குமார திசாநாயக்க அவர்களால் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வெளிப்படுத்தினார்.



“தற்போது எதிர்க்கட்சியினரும் சரி, மக்களும் சரி, தங்களிடம் சாட்சியங்கள் இருந்தால் – அவை எழுத்துப்பூர்வமானதாகவோ, வாய்மொழியானதாகவோ அல்லது மின்னணு சாட்சியங்களாகவோ இருந்தாலும் சரி – இந்த ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து மோசடி நடந்ததா இல்லையா என்பதை நிரூபிக்க முடியும்” என்று அவர் சவால் விடுத்தார்.


இந்த விசாரணையானது தற்போதைய அரசாங்கத்தின் காலப்பகுதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.


அதன்படி, 2009ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அனைத்து நிலக்கரி கொள்வனவு செயல்முறைகள் மற்றும் டெண்டர்கள் குறித்து முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படும்.


தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ள நிலக்கரி கப்பல்கள், ஒட்டுமொத்தமான 460க்கும் மேற்பட்ட கப்பல்களில் மிகச்சிறிய அளவே எனவும், 40க்கும் மேற்பட்ட கொள்வனவு சந்தர்ப்பங்களில் இந்த அரசாங்கத்திற்கு உரியது ஒன்று மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்த விசாரணை நடவடிக்கைகளைச் சரியாக முன்னெடுத்துச் செல்வதற்கும், அதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கும் விடயப்பொறுப்பு அமைச்சரும் செயலாளரும் தமது பதவிகளிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாகவும் சூரியஆராச்சி தெரிவித்தார்.


ஆணைக்குழுவின் அறிக்கை முடிவுகளின்படி எவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதே தமது அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Zameera

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கை வருகை


 இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளார். 

அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர். 

அவர்கள் இன்று (19) இந்திய விமான சேவைக்குச் சொந்தமான 'INDIA - 01' ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர். 

இந்தத் தூதுக்குழுவினரை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிவிசேட விருந்தினர் முனையத்திற்கு வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Zameera

தம்புத்தேகம நீர்த்தேக்கத்தில் 2 பேர் சடலமாக மீட்பு


 தம்புத்தேகம நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நீராடும் பகுதியில் நேற்று (18) பிற்பகல் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 


கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 30 வயதுடைய பெந்திவெவ மற்றும் திம்பிரிகஸ்கடவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அவர்கள் நீராடச் சென்றிருந்த போதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சடலங்கள் மரண பரிசோதனைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பாக தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை, நேற்று (18) நண்பகல் அனுராதபுரம் திசாவெவவில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய நபரொருவர் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். 

அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு மீட்கப்பட்டவர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Zameera

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படும் - ஈரான்


 ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நீக்கப்படும் வரை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படை அறிவித்துள்ளது. 


முன்னதாக கப்பல்களின் பாதுகாப்பான பயணத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பாதையையும் மூடுவதாக கடற்படை தெரிவித்துள்ளது. 


ஈரானுடன் ஒருங்கிணைந்து மற்றும் சுங்கக் கட்டணம் செலுத்துவதன் மூலம் கப்பல்கள் இந்த நீரிணை வழியாக பயணிக்க முடியும் என்று ஈரான் கடந்த வெள்ளிக்கிழமை (17) தெரிவித்திருந்தது. 


இருப்பினும், நேற்று (18) ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தடையை மீறும் எந்தவொரு கப்பலும் இலக்கு வைக்கப்படும் என்று கடற்படை எச்சரித்துள்ளது. 


அமெரிக்காவின் இந்த முற்றுகையானது இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் கருதுகிறது. 


நேற்று ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமான் கடலோரப் பகுதிகளில் இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டன. அவற்றில் குறைந்தபட்சம் ஒரு கப்பல் ஈரானிய துப்பாக்கிப் படகுகளால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Saturday, April 18, 2026

Zameera

நாளை பல பகுதிகளில் கடும் வெப்பமான வானிலை


 நாளை (19) வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 


இந்த மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது 'கவனம் செலுத்த வேண்டிய' மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.