Our Feeds



Sunday, June 7, 2026

Zameera

Breaking : சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி



அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 


குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் அவர் இவ்வாறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


கொழும்பு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.


 

Zameera

புங்குடுதீவு கடலில் காணாமல் போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு


 யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 


புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று மீனவர்கள் நேற்று முன்தினம் (5) கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர். 


அவர்களை தேடும் பணிகள் நேற்று முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. 


இந்நிலையில் கடற்தொழில் அமைச்சரின் பணிப்பின் பேரில் கடற்படையினர் தமது படகுகளில் நயினாதீவு மற்றும் அதனை அண்டிய கடற்பரப்புகளில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில், குறித்த மீனவர்களை கண்டுபிடித்து பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்துள்ளனர். 


மீட்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் பாதுகாப்பாக குறிகட்டுவான் இறங்கு துறைக்கு அழைத்து வரப்பட்டு , அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 


குறித்த மீட்பு நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


-யாழ். நிருபர் பிரதீபன்-

SHAHNI RAMEES

நாட்டில் எவ்வகையிலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது! - அமைச்சர் வசந்த சமரசிங்க


 எதிர்வரும் பெரும்போகம் வரை நாட்டில் எவ்வகையிலும்

SHAHNI RAMEES

பிஜி (Fiji) தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

 

தெற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில்
SHAHNI RAMEES

சினிமா பாணியில் ஸ்கெட்ச்! - ஹொரணை வங்கி கொள்ளையில் நடந்த திடீர் திருப்பம்.

 

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில்
Zameera

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தால் அதிகரிப்பு


கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


அதன் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவிக்கையில், கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்கள் அறிக்கைப்படுத்தப்படுவது 50% முதல் 55% வரையான சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.


அதேபோல், இந்த வருடத்தில் கடந்த ஜூன் 5ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 36,168 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், அவர்களில் 50 சதவீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.


மேல் மாகாணத்திற்கு மேலதிகமாக, தெற்கு மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் மற்றும் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.


டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பதற்கு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நிலவிய மழைத்துடனான வானிலையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய வைத்தியர், 'டிட்வா' புயல் பின்னர் பெருமளவில் குப்பைகள் சேர்ந்ததன் காரணமாக கொசுக்கள் பெருகும் இடங்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
 


 

Admin

எரிபொருள் விலை உயர்வால் 50% குறைக்கப்படும் பேருந்து சேவைகள்!


இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50% வரை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நட்டத்துடன் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கால அட்டவணைகளை மாற்றி சேவைகளை மட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதாக கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் இதுவரை அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், நிலைமை தொடர்ந்தால் பேருந்து கட்டணங்கள் 20% முதல் 25% வரை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

Admin

“கணவருக்கு அநீதி இழைக்கப்படுகிறது” - சலேயின் மனைவி கண்ணீர் வாக்குமூலம்!


முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே, கடந்த 38 வருடங்களாக நாட்டிற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து சேவை செய்துள்ளாரெனவும், அதற்காக மக்கள் தங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளதெனவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுரேஷ் சலேயைப் பார்ப்பதற்காக இன்று (07) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வந்திருந்த போதே அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு தனது கணவரிடம் கூறிய போதிலும், அவர் அதனை ஏற்கத் தயாராக இல்லை எனவும், தனக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக அவர் தொடர்ந்து குரல் கொடுப்பார் என்றும் அவர் மேலும் கூறினார்.

அத்துடன், தற்போதும் ஒரு சந்தேகநபர் மட்டுமேயான சுரேஷ் சலே மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்படுவதாகவும், அதில் எந்தவொரு நீதியும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயைப் பார்ப்பதற்காக இன்று (07) அவரது மனைவி, மகன் மற்றும் சகோதரர் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்திருந்தனர்.

அங்கு கருத்துத் தெரிவித்த சுரேஷ் சலேயின் மனைவி:

"எனது கணவர் நிரபராதி என்பது அனைவருக்கும் தெரியும் என்பதைத்தான் நான் கூற விரும்புகிறேன். எனவே, இவ்வாறு செய்வது மிகவும் அநீதியானது. ஏனெனில் இந்த நேரத்தில் அவரை ஒரு பலிக்கடாவாக்குவது நன்றாகத் தெரிகிறது. சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கையிலும் கூட இது மிகவும் மனிதாபிமானமற்ற நடத்தை என்று கூறப்பட்டுள்ளது. அவர் இப்போது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். எந்த வகையிலும் அதனை நிறுத்த அவர் விரும்பவில்லை. நாங்கள் அவரது மனதை மாற்ற நிறையப் பேசிப் பார்த்தோம். ஏனெனில் அவர் நிரபராதி என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும்.

புலனாய்வுகளை மேற்கொள்ள முடியும், ஆனால் அதனை மனிதாபிமான முறையில் செய்ய வேண்டும் அல்லவா? ஏனெனில் அவர் மிகவும் கொடூரமான முறையில்தான் நடத்தப்பட்டுள்ளார். எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. இத்தனை முப்பத்தெட்டு வருட காலம் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அவர், ஒரு முறை கூட பிள்ளையின் பாடசாலைக்குக் கூடச் செல்ல நேரம் இருக்கவில்லை. ஏனெனில் அவர் எப்போதும் நாட்டிற்காகவே அர்ப்பணிப்புடன் இருந்தார்.

அப்படிப்பட்ட ஒரு மனிதருக்கு, நாட்டிற்காக இவ்வளவு தியாகங்களைச் செய்த ஒரு மனிதருக்கு இப்படிச் செய்வது மிகவும் அநீதியானது. இந்த மோசமான நடத்தைக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். எனது கணவரை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதில்லை. ஏனெனில் தான் எப்படியும் நாட்டிற்காக உயிரைக் கொடுக்கத் தயாரான ஒரு நபர் என்று அவர் கூறுகிறார். இவ்வாறான அநீதிக்கு எதிராக அவர் எப்படியும் நிமிர்ந்து நிற்பார்.

அவர் எப்போதும் நேர்மையாக இருந்த ஒரு மனிதர். எனவே எனது கணவரைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இவ்வாறு உச்சகட்ட சேவை செய்ததை இட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுவதற்கு முன்னதாக, எப்படியாவது ஒரு வைத்தியசாலைக்காவது அவரைக் கொண்டு செல்ல முடிந்தால் அது பெரிய விஷயமாக இருக்கும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் அவர் இருக்கும் மனநிலையின்படி, 'என்னை வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்லுங்கள்' என்று அவராகக் கூற முடியாது. எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் சரியானதைச் செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவரது உயிரைக் காப்பாற்றிக் கொடுங்கள் என்று நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது அவ்வளவுதான்.

தயவுசெய்து உங்களால் முடிந்த உச்சகட்ட உதவியைச் செய்யுங்கள். சுரேஷ் நாட்டிற்காகச் செய்தது போல, இப்போது சுரேஷிற்காக நீங்கள் எழுந்து நிற்பதற்கான உங்களது சந்தர்ப்பம் இதுவாகும். ஏனெனில் அவரால் நாட்டிற்காக முப்பது வருடங்களுக்கும் மேலாகத் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்க முடிந்ததென்றால், இது உங்களுக்கான சந்தர்ப்பம். யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். சுரேஷிற்காக நீங்கள் எழுந்து நில்லுங்கள். நான் கேட்டுக்கொள்வது அவ்வளவுதான்."

Zameera

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது – வசந்த சமரசிங்க


 எதிர்வரும் பெரும்போகம் வரை நாட்டில் எவ்வகையிலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 


அவர் சுட்டிக்காட்டுகையில், நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் மெட்ரிக் தொன் சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 


அத்துடன், தேவையான அளவு மாற்று அரிசி இருப்புகளை பேண இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 


தற்போது நிலவும் மத்திய கிழக்கு போர் காரணமாக நாட்டில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்தார். 


போர் மோதல்கள் தொடர்ந்தாலும், ஏற்றுமதி வருமானம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி நாட்டிற்கு சாதக தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 


அதேநேரம் டொலரின் மதிப்பு உயர்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு தற்போதைய அரசாங்கம் மேலும் இடமளிக்காது என்றும் அவர் வலியுறுத்தினார். 


கடந்த பெரும்போகம் மற்றும் சிறு போகங்களுக்கு தேவையான உரங்களை வழங்குவதற்குத் தலையீடு செய்ததைப் போல, அடுத்த பெரும்போகத்திற்கு தேவையான உரங்களை இறக்குமதி செய்வதற்கும் அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உர மானியம் 30,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 


நாட்டில் கீரி சம்பா அரிசி தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்ட விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, இந்த வருடத்தில் மாற்று அரிசியை மாத்திரம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்கான கொள்கை ரீதியான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Admin

சலேவை அவசர மருத்துவ சிகிச்சைக்காக இடமாற்றுங்கள் - சட்டத்தரணி மூலம் சிஐடி பணிப்பாளருக்கு கடிதம்!



உளவுத்துறையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறும், அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் கோரி அவரது சட்டத்தரணி அசித் சிறிவர்த்தன குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சட்டத்தரணி அசித் சிறிவர்தனவினால், சிஐடி பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமது கட்சிக்காரரான சுரேஷ் சலேயின் உடல் மற்றும் உள நிலைமைகள் மோசமடைந்துள்ளன. எனவே, அவருக்கு மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவதற்காக உடனடியாக தகுந்த வைத்தியசாலையொன்றில் அனுமதிப்பது அவசியமாகும்.

தகைமை வாய்ந்த மற்றும் சுயாதீனமான மருத்துவ நிபுணர்களின் கீழ் அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு முறையான சிகிச்சைகளை வழங்கக்கூடிய பொருத்தமான வைத்தியசாலைக்கு அவர் அவசரமாக மாற்றப்பட வேண்டும்.

மேலும், தனது இறுதி உயில் மற்றும் அது சார்ந்த ஏனைய சட்ட ஆவணங்களைத் தயாரிப்பதற்காக, தனது சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு சுரேஷ் சலே கோரிக்கை விடுத்துள்ளதோடு இந்தக் காரணிகள் மற்றும் சூழ்நிலைகள் சுரேஷ் சலேயின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பின்னடைவை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.

அத்துடன், தனது நல்வாழ்வு, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்து பகுத்தறிவுடன் முடிவெடுக்கும் திறனை அவர் தற்பொது இழந்திருக்கலாம். அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சூழல், அவரது உயிருக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதற்கமைய, சிஐடி பணிப்பாளர் மேற்படி கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிக்க வேண்டும். அத்துடன் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படாவிடின், தமது கட்சிக்காரருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசியலமைப்பு, குற்றவியல் அல்லது சர்வதேச மட்டத்திலான எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்கான அடிப்படையாக இது பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Admin

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து - உயிரிழப்பு 13 ஆக உயர்வு!


ஹொரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட பகுதியில் இயங்கி வந்த 'செனெஹஸே கெதெல்ல' (அன்பின் இல்லம்) முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தின் போது காயமடைந்த மேலும் 6 பேர் ஹொரணை மற்றும் கல்பாதி வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஜூன் 3ஆம் திகதி மாலை இந்த இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, அங்கு சுமார் 72 பேர் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இல்லத்தின் உரிமையாளர், ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லக்மினி விதானகே உத்தரவிட்டு ள்ளார். நீதவான் லக்மினி விதானகே மற்றும் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் ஆகியோர்  நேரில் சென்று களப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இந்த இல்லம் முறையான பதிவு மற்றும் அனுமதியின்றி இயங்கி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சர் உபாலி பன்னிலகே, முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஐவருக்கு மேற்பட்ட முதியவர்களை பராமரிக்கும் எந்தவொரு இல்லமும் தேசிய முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.

2000- ஆம் ஆண்டின் முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் எண் 9- இன் படி, ஐந்துக்கும் மேற்பட்ட முதியவர்களை முதியோர் இல்லமாகக் கொண்டு இயங்கும்  எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ தேசிய முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி மில்லனிய பிரதேச செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில், இந்த இல்லத்தின் அவலநிலை மற்றும் அபாயகரமான சூழல் குறித்து  தேசிய முதியோர் செயலகத்திற்குத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில் இந்த இல்லத்தின்அதிகபட்ச கொள்ளளவு 15 பேருக்கு மட்டுமே என்றபோதிலும், அங்கு 48 பேர் கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ஒரே கட்டிலில் இருவர் உறங்கியதுடன், கட்டில்கள் இன்றி பலர் தரையில் உறங்க வேண்டிய அவல நிலை காணப்பட்டது.

இல்லத்தினுள் கடுமையான துர்நாற்றம் மற்றும் அசுத்தமான சூழல் நிலவியதுடன், போதிய கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் இருக்கவில்லை. இல்லத்தின் பின்புறத்தில் பாதுகாப்பு வேலி இல்லாததால், மனநல பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடும் அபாயம் நீடித்தது என்றுள்ளது.

இந்நிலையில், தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

Admin

பாடகரை பயங்கரவாதி என கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம் - சாணக்கியன்!


வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சியப் பாடல் ஒன்றைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

சந்திவெளி எக்கோ விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தற்போது அமைச்சர்களாகவும் உயர்மட்டப் பொறுப்புகளில் உள்ளவர்களாகவும் இருக்கும் பலர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உட்பட, கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி எங்களுடன் இணைந்து கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இன்று அதே சட்டம் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய விடயமாகும் என்றார்.

மேலும், ஒரு பாடலுக்காக ஒருவரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் புலிக்கொடி புலிகளுடன் தொடர்புடைய சின்னங்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், குறித்த பாடலில் அவ்வாறான எந்தவொரு உள்ளடக்கமும் காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இது வெறுமனே ஒரு எழுச்சிப் பாடல் மட்டுமே. அதனை அடிப்படையாகக் கொண்டு இளைஞர் ஒருவரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பது மிகவும் மோசமான மற்றும் கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும். கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில், இவ்வாறான சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ். சுதாகரன், உப தவிசாளர் கு. பத்மநீதன், செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Admin

திலீப பீரிஸின் செயற்பாடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தை அவமதிக்கும் செயல் - சரத் வீரசேகர குற்றச்சாட்டு!


திலீப பீரிஸ்  சட்ட மா   அதிபராக இருந்து கொண்டு, ஒட்டுமொத்த சட்டமா அதிபர் திணைக்களத்தையும் அவமதிக்கும் வகையில் செயற்படுகிறார். சுரேஷ் சலேவை வதை செய்தமை தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நலன் கருதி களனி விகாரையில் பொதுஜன பெரமுன கட்சியின் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினரால் நேற்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

திலீப பீரிஸ் சட்ட மா    அதிபராக இருந்து கொண்டு, ஒட்டுமொத்த சட்டமா அதிபர் திணைக்களத்தையும் அவமதிக்கும் வகையில் செயற்படுகிறார். சுரேஷ் சலேவுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும், நாட்டை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாட்டுப் புகலிடம் கோரிய அசத் மௌலானா, சனல் -4 ஊடகத்துக்கு வழங்கிய பொய்யான வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த அசத் மௌலானாவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்பது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்த இமாம் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக,சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலப்பகுதியில் சுரேஷ் சலே மலேசியாவிலும் இந்தியாவிலும் இருந்ததே தவிர, அவர் இலங்கையில் இருக்கவில்லை.

இவ்வாறான பொய்யான சாட்சியங்களின் அடிப்படையில் அவரை 180 நாட்கள் சிறையிலடைத்து, 6க்கு 4 அடி அறையில் வைத்து சித்திரவதை செய்தமை தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக, உரிய நேரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.