Our Feeds



Monday, May 18, 2026

Zameera

தேவைக்கு ஏற்ப மாத்திரமே வாகனங்களை இறக்குமதி செய்யும் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்


 எதிர்காலத்தில் தேவைக்கு ஏற்ப மாத்திரமே வாகனங்களை இறக்குமதி செய்யக்கூடிய வகையில் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுத் துறையின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். 


தேவையின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம், நாட்டிலுள்ள வெளிநாட்டு நாணயம் தேவையற்ற முறையில் விரயமாக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். 


இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட பேராசிரியர் பிரியங்க துனுசிங்க, 


"இன்று வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் பின்னர், வாகன இறக்குமதியாளர்கள் பெருமளவில் வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை நிலையங்களில் (Sales) குவித்து வைத்துள்ளனர். இன்று இந்த நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்களில் பெருமளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டணத்துடன், அவற்றை அதிக விலைக்கு விற்று மிக அதிக இலாபத்தைப் பெறுவதற்கு அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது." 


"தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வசதி இருக்க வேண்டும். அவ்வாறு தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டுமே தவிர, மிகவும் கஷ்டப்பட்டு ஈட்டும் வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி வாகனங்களை இறக்குமதி செய்து, அவற்றை விற்பனை நிலையங்களில் நிறுத்தி வைத்து அதிக இலாபம் ஈட்டுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது." என்றார்.

SHAHNI RAMEES

விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!


பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள

Zameera

அரசாங்கம் எப்படியோ என்று தெரியாது… ஆனால் மக்கள் நல்லிணக்கமாக உள்ளார்கள் - மஹிந்த ராஜபக்ஷ


 (இராஜதுரை ஹஷான்)



யுத்த வெற்றியை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த தினத்தை ஒருபோதும் மறக்ககூடாது. இன்று பிளவுபடாத ஒரே நாடாக உள்ளதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும். மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கமாகவும் உள்ளார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.



அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஏற்பாடு செய்த, இராணுவத்தினரை கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பில் திங்கட்கிழமை (18) நடைபெற்றது.Beaches & Islands



இந்நிழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,



யுத்தம் முடிவடைந்த இந்த தினத்தை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நாட்டை பாதுகாத்த இராணுவத்தினர் கௌரவிக்கப்பட வேண்டும். யுத்த வெற்றி நாளை ஒருபோதும் மறக்கக்கூடாது. இன்று இலங்கை பிளவுபடாத ஒரே நாடாக உள்ளதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும்.



அரசாங்கம் எப்படியோ என்று தெரியாது. ஆனால் மக்கள் நல்லிணக்கமாக உள்ளார்கள். அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. யுத்த வெற்றிக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் என்றும் நினைவுகூரப்படவேண்டும். அவர்களால் தான் இன்று நாடு ஐக்கியமாக உள்ளது. இது பாரியதொரு வெற்றியாகும் என்றார்.


SHAHNI RAMEES

சாமரவின் வெளிநாட்டுப் பயணத் தடைக்கு தற்காலிக தளர்வு!

 


ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பாராளுமன்ற

Zameera

பிரதமர் இங்கிலாந்துக்கு விஜயம்




 இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (18) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். 


பிரதமருடன் மேலும் இருவர் சென்றுள்ளதாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்தார். 


அவர்கள் இன்று பிற்பகல் 01.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் லண்டன் நகர் நோக்கி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல்.- 403 (UL- 403) என்ற விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளனர். 


அவர்கள் தமது பயணத்தை நிறைவு செய்து எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் நாட்டிற்குத் திரும்பவுள்ளனர்.

Zameera

விமல் வீரவன்சவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது. 


2016ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 


இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 


இதன்போது, வழக்கின் சாட்சியாளர்கள் எவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை என 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார். 


இதற்கமையவே, வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஜூலை மாதம் 13ஆம் திகதிக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 


கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி, அன்றைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் அல் ஹுசைன் இலங்கை வந்திருந்த போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு - துன்முல்ல பகுதியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, வீதிகளை மறித்து பொதுமக்களுக்குப் இடையூறு ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி கறுவாத் தோட்டம் பொலிஸாரால் இந்தப் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. 


வீதிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் புரிந்துள்ளதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, ஜெயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, ரொஜர் செனவிரத்ன மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Zameera

ஈரான் இணங்காவிட்டால் அந்நாட்டில் எதுவும் மிஞ்சாது - ட்ரம்ப்

அமைதி ஒப்பந்தத்துக்கு ஈரான் இணங்காவிட்டால் அந்நாட்டில் எதுவும் மிஞ்சாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பித்தன.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் அனைத்து தோல்வியிலேயே முடிந்தன.

இதனால் மீண்டும் போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இந்நிலையில் அமெரிக்கா முன்மொழியும் அமைதி ஒப்பந்தத்துக்கு ஈரான் சம்மதம் தெரிவிக்காவிட்டால் அந்நாட்டில் எதுவும் மிஞ்சாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (17) தெரிவித்துள்ளார்.

“ஈரானைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு நேரமில்லை. அவர்கள் வேகமாகச் செயல்பட வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்கு எதுவும் மிஞ்சாது. நேரம் மிகவும் முக்கியமானது” என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


 

SHAHNI RAMEES

LTTEக்கு பகிரங்கமாக ஆதரவு! - அர்ச்சுனா MP கைது செய்யப்படலாம் என அச்சம்!

 


இலங்கை எம்பி அர்ச்சுனா கைது செய்யப்படலாம் என அச்சம்!

SHAHNI RAMEES

பிரதமர் இணக்கம்! - மல்வானை வீட்டில் இருந்து வௌியேறும் பல்கலை மாணவர்கள்!

 

தொம்பே பிரதேச செயலகத்தின் பொறுப்பிலுள்ள
SHAHNI RAMEES

யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை தமிழ் மக்களே பெற்றுள்ளனர்!

 


யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை
SHAHNI RAMEES

ஜனாதிபதி இவ்வாரம் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்!

 


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த வாரம்

Zameera

கோத்தபாய சென்ற வழியிலேயே இந்த அரசாங்கம் பயணிக்கிறது - எஸ்.எம்.மரி்க்கார்


 (எம்.ஆர்.எம்.வசீம்)


அரசாங்கம் பாரிய டொலர் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதால், வாகன இறக்குமதியை தடை செய்யாமல் வாகனங்களுக்கான வரியை அதிகரித்துள்ளது. எதிர்காலததில் வீடுகளில் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் உபகரணங்களுக்கும் வரியை அதிகரிக்கும். அதனால் கோத்தபாய சென்ற வழியிலேயே இந்த அரசாங்கம் பயணிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரி்க்கார் தெரிவித்தார்.


கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,


அரசாங்கம் 33வீதம் மின்சார கட்டணத்தை குறைப்பதாக தெரிவித்து, தற்போது மின்சார கட்டணத்தை தற்போது 40 வீதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று உணவு. கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்களின் வரியை பூச்சியமாக்குவதாகவே தெரிவித்தது. ஆனால் 2024 செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இருந்ததை விட அதிக விலைக்கே உணவுப்பொருட்கள் மருந்துப்பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்கிறோம்.


அதேபோன்று தற்போது டொலரின் பெருமதி 330 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் டொலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திறைசேரியில் இருந்து 2,5 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளது. என்.டி.பி வங்கி, ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் போன்ற நிறுவனங்களில் இருந்து பாரியளவில் டொலர் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அரசாங்கம் எதுவும் கதைப்பதில்லை. அதனை மறைப்பதற்கே முயற்சித்து வருகிறது. 


அதேநேரம் அரசாங்கம் தற்போது இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கு 50 வீத வரி அதிகரித்துள்ளது. டொலரை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு வாகனம் இறக்குமதி செய்வதை தடை செய்திருக்கலாம். அதனை செய்யாமல், வாகனங்களுக்கான வரியை அதிகரித்து, மக்களுக்கு வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய முடியுமாகி இருந்த அந்த இயலுமையை இல்லாமல் செய்திருக்கிறது. எதிர்காலத்தில் அரசாங்கம் வீட்டு உபகரணங்களான ஆடை சலவை இயந்திரம், மின்விசிறி போன்ற இலத்திரனியல் உபகரங்களின் இறக்குமதி வரியை அதிகரிக்கும். அரசாங்கம் கோத்தபாய அரசாங்கம் பயணித்த வழியிலே செல்கிறது.


மக்கள் அனுபவமில்லாத கோத்தபாய ராஜபக்ஷ்வை நாட்டின் ஜனாதிபதியாக்கி, நாட்டை வங்குராேத்தாகியது. அதேபோன்று பரீட்சித்துப்பார்ப்பதற்காக அநுர குமாரவை ஜனாதிபதியாக்கி, கைசேதப்படுகிறார்கள். இந்த அரசாங்கத்துக்கு முடியாது என்பதை மக்கள் தற்போது உணர்ந்து வருகிறார்கள். அதனால் மக்களுக்கு அடுத்த மாற்று வழியாக இருப்பது, அனுபவமுள்ள, பரீட்சித்து பார்க்கப்படாத ஒரே தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது அணியான ஐக்கிய மக்கள் சக்தியாகும். நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியுமான ஆளுமையும் திறமையும் உள்ளவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலே இருக்கிறார்கள் என்றார்.

Zameera

வெளிவிவகார அமைச்சின் e-DAS கட்டமைப்பில் கோளாறு: ஆவண சான்றளிப்பு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!


 வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவண சான்றளிப்பு கட்டமைப்பில் (e-DAS) ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அனைத்து ஆவண சான்றளிப்பு சேவைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.


பத்தரமுல்லையில் அமைந்துள்ள தூதரக விவகாரப் பிரிவின் முதன்மை அலுவலகம் மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை, குருநாகல் ஆகிய பகுதிகளில் உள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களின் சேவைகளும் இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தொடர்புடைய தொழில்நுட்ப சேவை வழங்குநர்களுடன் இணைந்து, e-DAS கட்டமைப்பை மிக விரைவாக வழமைக்குக் கொண்டு வந்து, சாதாரண சேவைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


ஏற்கனவே இணையத்தளம் மூலமாக நேரத்தை ஒதுக்கியுள்ள விண்ணப்பதாரர்கள், அடுத்தகட்ட அறிவிப்புகள் மற்றும் இற்றைப்படுத்தல்களை (Updates) அறிந்துகொள்ள 'e-Channeling' கட்டமைப்பைக் அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


கட்டமைப்பு வழமைக்குத் திரும்பியவுடன் அது குறித்த விபரங்கள் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உடனடியாக அறிவிக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இந்த திடீர் முடக்கம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு தூதரக விவகாரப் பிரிவு தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.