Our Feeds



Tuesday, April 14, 2026

Zameera

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க நடவடிக்கைகளை மீறி செயல்படும் கப்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்


 ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க நிர்வாகத்தின் நடவடிக்கைகளை மீறி செயல்படும் கப்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், சட்டவிரோதமாக நுழையும் அல்லது அமெரிக்க உத்தரவுகளை பின்பற்றாத கப்பல்கள் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படுமெனவும் கடலில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒழிப்பதுபோல விதிமீறும் கப்பல்கள் “சுட்டு வீழ்த்தப்படும்” எனவும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த எச்சரிக்கையானது ஹோர்முஸ் நீரிணை பகுதியின் பாதுகாப்பு நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது.

SHAHNI RAMEES

பசி கொடுமையின் உச்சம் சூடானில் இலை தழைகளை தின்று உயிர் வாழும் மக்கள்!

 


சூடான் ராணுவத்துக்கும். துணை ராணுவப்படைக்கும்

SHAHNI RAMEES

அமெரிக்கா - ஈரான் போர் எதிரொலி: காண்டம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

 


ஈரான் - அமெரிக்கா போரால் காண்டம்

SHAHNI RAMEES

பேச்சுவார்த்தை நிராகரிப்பு: "போர்க்களமே பதில் சொல்லும்" என ஹிஸ்புல்லா தலைவர் எச்சரிக்கை!

 

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இஸ்ரேலிய

Zameera

புத்தாண்டை முன்னிட்டு கைதிகளை பார்வையிட விசேட வாய்ப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு குடும்பத்தினருக்கு விசேட வாய்ப்பை வழங்குவதற்கு சிறைச்சாலைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவு அல்லது இனிப்புப் பண்டங்கள் அடங்கிய பொதி மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதி என்பவற்றை ஒரு கைதிக்கு போதுமான அளவில் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.


 

Zameera

இன்றைய வானிலை


 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. 


மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை வவுனியா மாவட்டங்களிலும் மற்றும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 


சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வு காரணமாக, நாளை (15) வரையில் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. 


அதற்கிணங்க இன்று நண்பகல் 12.10 அளவில் நாவலடி, பரந்தன், முரசுமோட்டை, வெள்ளிக்கண்டல், உடபத்துக்கண்டல், புளியம்பொக்கணைஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Zameera

ஈரான் மீதான கடற்படை முற்றுகைக்கு இஸ்ரேல் ஆதரவு

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை இஸ்ரேல் ஆதரிப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எட்டப்படாததால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் கடற்படையை முற்றுகையிடப்போவதாக சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தார்.

இதுகுறித்து இஸ்ரேல் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நெதன்யாகு பேசியதாக காணொளி ஒன்றை அவரது அலுவலகம் வெளியிட்டிருக்கின்றது.

“நாங்கள், நிச்சயமாக, ட்ரம்ப்பின் இந்த உறுதியான நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். மேலும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இஸ்ரேல் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.

போர் நிறுத்தத்தை அறிவித்தவுடன் ஈரான் உடனடியாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அமெரிக்காவால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அமெரிக்கா இந்த ஈரானின் கடற்படையை முற்றுகை செய்ய முடிவு செய்துள்ளது” எனத் குறிப்பிட்டுள்ளார்.

 

Monday, April 13, 2026

Zameera

நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் 24 மணி நேர சேவை


 நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் தமது சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் பட்டாசு மற்றும் வாணவேடிக்கை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், குறிப்பாக சிறுவர்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.

அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்த வேண்டாம் எனவும், மதுபோதையில் எக்காரணம் கொண்டும் வாகனம் ஓட்ட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார். அதிக சோர்வு மற்றும் தூக்கமின்மை விபத்துக்களுக்கு காரணமாக அமைவதால், அது குறித்து அவதானமாக இருக்க வேண்டும். 

தூய்மையான உணவுகளை மாத்திரமே உட்கொள்ள வேண்டும். முடிந்தவரை கொதித்தாறிய நீரைப் பருகுங்கள். நீரிழிவு, இதய நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்காக நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வருபவர்கள், திருவிழாக் காலத்தில் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறினாலும் மருந்துகளை உட்கொள்ள மறக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 திருவிழாக் காலத்தின் பின்னர் இவ்வாறான நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் வீதம் அதிகரிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Zameera

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை


 நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (13) பிற்பகல் 04.00 மணி முதல் நாளை பிற்பகல் 04.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு முதலாம் கட்ட 'கவனம் செலுத்துக' (Level 1 - Watch) எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கண்டி மாவட்டம்: யட்டிநுவர பிரதேச செயலக பிரிவு. 

கேகாலை மாவட்டம்: வரக்காபொல, கேகாலை மற்றும் ரம்புக்கனை பிரதேச செயலக பிரிவுகள். 

நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுகள். 

இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, குருவிட்ட, ஓப்பநாயக்க, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகள்.

SHAHNI RAMEES

2 கோடி பெறுமதியான சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் சிக்கின! #VIDEO

 



இலங்கையில் பதிவு செய்ய முடியாத, சுமார் 2 கோடி ரூபா

Zameera

காத்தான்குடியில் நவீன உள்ளக விளையாட்டு அரங்கு: ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் குறித்து ஹிஸ்புல்லாஹ் எம்.பி ஆய்வு.!


 காத்தான்குடியில் நவீன உள்ளக விளையாட்டு அரங்கு: ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் குறித்து ஹிஸ்புல்லாஹ் எம்.பி ஆய்வு.!


காத்தான்குடி ஆற்றங்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (13) நேரில் சென்று பார்வையிட்டார்.


இதன்போது, நவீன வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டு அரங்கு (Indoor Stadium) அமைக்கும் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 


மேலும், இப்பகுதியின் முழுமையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்யப்பட்டது.


இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஈ.எம் றுஸ்வின் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


-- ஊடகப்பிரிவு

Zameera

நிலக்கரி மோசடி தொடர்பாக முஜிபுர் ரஹ்மானால் CID யில் முறைப்பாடு


 ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இன்று (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளனர். 


நிலக்கரிக்கான விலை மனு கோரலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


குறித்த விலை மனுவை ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விதம் தொடர்பான குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளதாகத் தெரிவித்து, இந்த முறைப்பாட்டை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர். 


இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில், 


ஒரு குரல் பதிவு வெளியாகியுள்ளது. அதைக் கேட்கும்போது அங்கேயும் ஒரு மோசடி நடந்துள்ளது என்பது புரிகிறது. ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு இந்த டெண்டரை வழங்க வேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடல் அந்த குரல் பதிவில் உள்ளது. 


எனவே, அந்த குரல் பதிவு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கோரி இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். 


அந்த குரல் பதிவில் ஜனாதிபதியின் பெயர் மற்றும் அவருக்கு மிக நெருக்கமான தொழிலதிபர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. 


இதன் மூலம் அங்கேயும் தெளிவாக ஒரு மோசடி நடந்துள்ளது என்பது உறுதியாகிறது.

Zameera

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நேர்முகத்தேர்வு திகதி அறிவிப்பு


 தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. 

இந்த நேர்முகத் தேர்வுகள் அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். 

நேர்முகத் தேர்வுகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கான இணைப்பு கீழே, 

https://moe.gov.lk/en/selected-student-teacher-name-list-for-the-national-colleges-of-education-ncoes-base-on-g-c-e-a-l-examinations-result-in-year-2023-and-2024/