Our Feeds



Friday, May 29, 2026

Zameera

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு!


 அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு  கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபை தேர்தலின் போது, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துக்கு சொந்தமான 7.8 மில்லியன் ரூபாய் நிதியை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக முறைகேடாகப் பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.Beaches & Islands


இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.


சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில், பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் கீழ் இந்த நபர்கள் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று  மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்துக்கு அறிவித்ததை அடுத்தே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

SHAHNI RAMEES

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் - தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் பெண்கள் அமைப்பு முறைப்பாடு

 


அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகய ஹேமரத்ன

Zameera

தாய்வான் விவகாரத்தில் அணுபோர் அபாயம் - லண்டன் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை




 தாய்வான் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே போர் தொடர்நதால், அது உலகையே அழிக்கும் அணுஆயுதப் போராக மாற வாய்ப்புள்ளதாக லண்டன் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

சிங்கப்பூரில் இன்று (29) நடைபெற உள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாட்டுக்கு முன்னதாக இந்த அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் புதிய அணுஆயுதப் போட்டி தீவிரமடைந்து வருவதாகவும், நாடுகள் தங்களது அணு ஆயுத பலத்தை இரகசியமாக அதிகரித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் பரஸ்பரம் தங்களின் கட்டுப்பாட்டு மையங்களை தாக்க முற்படும்போது, போரை கட்டுப்படுத்த எந்த ஒரு பாதுகாப்பு விதியும் இல்லாததால் அணு ஆயுத மோதல் தவிர்க்க முடியாததாகிவிடும் என பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் முறையே 3 ஆயிரத்து 700 மற்றும் 4 ஆயிரத்து 400 அணுஆயுதங்கள் உள்ள நிலையில், சீனா தனது அணுஆயுதங்களை அதிவேகமாக அதிகரித்து வருகின்றது.


Zameera

சீனாவில் நிலநடுக்கம்


 கிழக்கு சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள தர்பான் நகருக்கு அருகில் 5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் எதுவித தகவலும் வெளியாகவில்லை.

Zameera

வெசாக் காலத்திற்கு நாடளாவிய விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்


 வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.


நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பாதுகாப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வழிபாட்டுத் தலங்கள், தன்சல்கள் மற்றும் வெசாக் வலயங்களில் சிவில் உடையிலான பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், வெசாக் வாரத்தில் கலாசாரத்திற்குப் பொருத்தமற்ற வகையில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை, அலட்சியமாக அல்லது அபாயகரமாக இயக்கப்படும் வாகனங்கள் தொடர்பான தகவல்களை 070-4755600 என்ற வட்ஸ்அப் இலக்கம் அல்லது 119, 188 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்கள் மூலம் அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

SHAHNI RAMEES

Online delivery: யாழில் நூதன முறையில் போதைப்பொருள் வர்த்தகம்!

 


யாழ்ப்பாணம் பகுதியில் மிக நூதனமான முறையில்

SHAHNI RAMEES

பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்துள்ளார் - மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம்!


மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட

Zameera

பிள்ளையான் தொடர்பான விசாரணைக்கு அழைப்பு வரும் வரை காத்திருக்கிறேன் - நாமல் ராஜபக்ஷ


 (இராஜதுரை ஹஷான்)


பிள்ளையான் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைக்கும் வரை காத்திருக்கிறேன். நானும் பல கேள்விகளை விசாரணை அதிகாரிகளிடம் கேட்கவுள்ளேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


குருநாகல் பகுதியில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற மத வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


எதிர்காலத்தில் எந்த அரசியல் கட்சிகளையும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. எமது அரசியல் செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்கிறோம். அரசாங்கம் அதற்கு அச்சமடையத் தேவையில்லை.Politics


எம்மை பின்தொடராமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.மக்கள் ஆணை உள்ளது என்று குறிப்பிட்டுக் கொள்ளாமல் முடிந்தால் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தியிடம் வலியுறுத்துகிறேன்.


 பிள்ளையான் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைக்கும் வரை காத்திருக்கிறேன். நானும் பல கேள்விகளை விசாரணை அதிகாரிகளிடம் கேட்கவுள்ளேன். பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு நபரை தூதகரத்துக்கு அழைத்து எவ்வாறு பேச முடியும்.


புத்தசாசனத்தை மலினப்படுத்துவதற்கு திட்டமிட்ட வகையில் ஒரு தரப்பினர் செயற்படுகிறார்கள். அட்டமஸ்தான தேரர் விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை. இந்த விடயத்தை அரசியலுக்குட்படுத்துவது முற்றிலும் தவறானது. நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண வேண்டும் என்றார்.

SHAHNI RAMEES

கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் தாக்கி கொலை!


 கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் நபர்

Zameera

நயினாதீவு கடலில் தவறி வீழ்ந்து பாடசாலை அதிபர் பலி


 நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்தார். 


அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும், பயணிகள் படகினை தவறவிட்டமையால், கடற்தொழிலாளி ஒருவரின் சிறு படகில் நயினாதீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளனர். 


அதன்போது, சீரற்ற காலநிலையினால் அவர்கள் பயணித்த கடல் பகுதி கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில், படகு கடல் அலையில் சிக்கியுள்ளது. 


இதன்போது படகில் இருந்து அதிபர் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளார். 


அதனை அடுத்து , உடனடியாக செயற்பட்ட படகோட்டி அதிபரை மீட்க முற்பட்ட போதிலும், அவர் உயிரிழந்தார் 


சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


-யாழ். நிருபர் பிரதீபன்-

Zameera

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் இன்னும் சிக்கல்கள்


 போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்னதாக அமெரிக்காவும் ஈரானும் இன்னும் சில சிக்கலான விடயங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளதாக அமெரிக்க துணைத் ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார். 


இந்த ஒப்பந்தம் போர் நிறுத்தத்தை 60 நாட்களுக்கு நீடிக்கும் என்றும், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. 


ட்ரம்ப் மற்றும் ஈரானிய தலைவர்களின் அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில், இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தின் முதற்கட்ட வரைவுக்கு இணங்கியுள்ளதாக செய்திகள் வௌியாகின. 


ஆனால், இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவோ அல்லது உறுதிப்படுத்தப்படவோ இல்லை என்று ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 


பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு சில விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதுடன்,யுரேனியம் செறிவூட்டல் பற்றியும் விவாதிப்பதாக கூறப்படுகின்றது. 


இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு அருகில் இருப்பதாகவே ஜே.டி. வான்ஸ் குறிப்பிட்டுள்ளார். 


ஈரான் அதிகளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்வதை நிறுத்த வேண்டும் என்றும், அதன் தற்போதைய இருப்பை அகற்ற வேண்டும் என்றும் அமெரிக்கா நீண்டகாலமாக கோரி வருகிறது. 


கோட்பாட்டு ரீதியாக, இந்த யுரேனியம் அணு ஆயுதங்களை உருவாக்க பயன்படுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Zameera

போக்குவரத்துக்கு அமைச்சின் செயலர் இராஜினாமா


 போக்குவரத்து நெஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளாரென அறியமுடிகிறது.

தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக தெரியவந்தது.

Zameera

ரம்புக்கனை – கலகெதர அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் இன்று ஆரம்பம்


 மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் இன்று (29) ஆரம்பமாகவுள்ளன. 


ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இந்த பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. 


மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் பகுதியின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 18.7 கிலோமீற்றர் தூரத்திற்கு இந்த நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


 


மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் இன்று (29) ஆரம்பமாகவுள்ளன. 


ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இந்த பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. 


மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் பகுதியின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 18.7 கிலோமீற்றர் தூரத்திற்கு இந்த நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 


இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அந்தப் பணிகள் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


முதற்கட்டப் பணிகளுக்காக 78 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதுடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக 112.4 பில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. 


இந்தத் திட்டத்திற்குத் தேவையான அனைத்து நிதிகளும் உள்நாட்டு நிதியுதவிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளதுடன், இதன் நிர்மாணப் பணிகள் உள்நாட்டு ஒப்பந்த நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.