Our Feeds



Sunday, April 5, 2026

Zameera

🚨BREAKING லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 


இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


இதற்கமைய அதன் புதிய விலை 4,765 ரூபாயாகும் 


5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


அதன் புதிய விலை 1,910 ரூபாயாகும். 


2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


இதன்படி அதன் புதிய விலை 890 ரூபாவாகும்


 

SHAHNI RAMEES

விரைவில் பெட்ரோல், டீசலுக்கான QR முறைமை நீக்கப்படும்!

 


ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை

SHAHNI RAMEES

சீனாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் கப்பல்!

 


சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தாங்கிய கப்பலொன்றை

Zameera

சுகாதார அமைச்சருக்கு GMOA வழங்கிய அவகாசம்


 வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு, சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு நாளை (06) காலை 8.00 மணி வரை அவகாசம் வழங்குவதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. 


சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு அமைச்சர் தயக்கம் காட்டுவதாகவும், அதன் காரணமாகவே இந்தப் போராட்ட நடவடிக்கை நீடிப்பதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். 


அமைச்சரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தமது தொழிற்சங்க நடவடிக்கை குறித்த அடுத்தகட்ட தீர்மானத்தை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


இது குறித்து வைத்தியர் பிரபாத் சுகததாச மேலும் கருத்து தெரிவிக்கையில், 


நோயாளிகளை அசெளகரியத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று நாம் ஏற்கனவே சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். 


சுகாதார அமைச்சர் தீர்மானங்களை எடுக்கத் தயங்குவதாலேயே தற்போது நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 


அவர் பேச்சுவார்த்தை மேசைக்கு வரத் தயார் என்று அறிவித்தால், அந்த நிமிடத்திலிருந்தே தொழிற்சங்க நடவடிக்கையிலிருந்து விலகுவது குறித்து எம்மால் தீர்மானிக்க முடியும். 


அவர் முடிவுகளை எடுக்கத் தாமதித்தால் அதன் பாதிப்புகளை இந்நாட்டு நோயாளிகளே அனுபவிக்க வேண்டியிருக்கும். 


அதனால்தான் நாளை காலை 8 மணி வரை சுகாதார அமைச்சருக்கு அவசியமான தலையீட்டை மேற்கொள்ள அவகாசம் வழங்கியுள்ளோம். 


இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் நாம் தெரியப்படுத்தியுள்ளோம். நாளை காலை 8 மணிக்குள் அவர் இணக்கம் தெரிவித்தால், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதா? இல்லையா என்பதை எமது நிறைவேற்று சபை ஊடாகத் தீர்மானிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Zameera

புதையல் தோண்டிய 11 பேர் கைது


 மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அதிகாலை 5.00 மணிக்கு திக்கோடை ஆனந்தப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்தனர். 

இதன்போது புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புத்தளம், அட்டாளைச்சேனை, கல்கமுவ, பெரிய போரதீவு, பெரியநீலாவணை, பொல்ஹாவலை, திக்கோடை பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்தனர். 

அத்துடன் சந்தேகநபர்களை புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய நவீன ஸ்கானர் இயந்திரம் மற்றும் வேன் ஒன்றையும் பொலிஸார் மீட்டனர். 

கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-


SHAHNI RAMEES

"அமெரிக்காவுக்கு நரகத்தின் கதவுகள் திறக்கும்" - ட்ரம்பின் பாணியில் பதில் மிரட்டலை விடுத்த ஈரான்!

 

அமெரிக்கா - ஈரான் போர் 5 வாரங்களை தாண்டியுள்ள நிலையில்,
SHAHNI RAMEES

F35 போர் விமானத்தில் இருந்து குதித்த அமெரிக்க வீரர் ஈரானில் இருந்து பத்திரமாக மீட்பு: டிரம்ப்

 


ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேலுக்கும் இடையிலான

Zameera

பாதுக்கை உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு முதல் 12 மணிநேர நீர்வெட்டு


 பாதுக்கை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (05) இரவு 8.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் வழங்கும் லபுகம மற்றும் களுதுவாவ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், அவற்றின் உற்பத்தித் திறன் வரையறுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (05) ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 8.00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது.

Zameera

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்


 பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை (06) முற்பகல் 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க  முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளே இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணம் என அச்சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இந்த முறைமையினால் ஊழியர்கள் கடுமையாக அசெளகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் 6% இலாபத்தைப் பெற்றுக்கொள்வதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 3% இலாபப் பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற போதிலும், கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினால் அது வெட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், ஓடர் செய்யப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் முறையாக வழங்கப்படாததால், எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்திச் செல்வதில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் டி.வி. சாந்த சில்வா சுட்டிக்காட்டினார்.


 

Zameera

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கும் ஆற்றல் அரசாங்கத்திடம் உள்ளது


 அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கும் ஆற்றல் அரசாங்கத்திடம் உள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பிரச்சினைகளுக்கும் எதிர்காலத்தில் தீர்வு கிடைக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். 


தற்போது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பயிற்சிக்கு பிந்தைய வைத்தியர்களுக்கான நியமனங்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்காக 453 வைத்தியர்களில் 435 பேர் விண்ணப்பித்துள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். 


தற்போது இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அது வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் இந்த வைத்தியர்களுக்கான முதற்கட்ட நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

SHAHNI RAMEES

பிள்ளையான் கைது விடயத்தில் பொய் கூறியமைக்கு - ஜனாதிபதி நாட்டு மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும்!

 

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்காக
SHAHNI RAMEES

ஈஸ்டர் தாக்குதல் ஊழல் அரசியலின் வெளிப்பாடு: குற்றவாளிகள் தராதரம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும்!


 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு

SHAHNI RAMEES

ஈஸ்டர் தாக்குதல்களின் வலி இன்னும் எங்கள் இதயங்களில் தங்கியுள்ளது!

 


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு (2019 ஏப்ரல் 21) இலங்கையில்