Our Feeds



Sunday, March 22, 2026

SHAHNI RAMEES

ஹோர்முஸ் நீரிணையை திறக்க 22 நாடுகள் கூட்டறிக்கை!

 



மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த 28-ஆம் திகதி

SHAHNI RAMEES

இன்று 90 சதவீத தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலகல்..

 


இன்று (22) நாட்டின் தனியார் பேருந்துகளில்

SHAHNI RAMEES

கரண்ட் கட் - ஒரு விளக்கையாவது அணைத்து ஒத்துழைப்பு தாருங்கள்! - அரசாங்கம் கோரிக்கை....

 

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்
SHAHNI RAMEES

மார்ச் 25 இல் வருகிறது டீசல் கப்பல்!



 எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி 37,000 மெட்ரிக்

SHAHNI RAMEES

பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு!

 

\

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில்

SHAHNI RAMEES

கொழும்பில் வாகன தரிப்பிடக் கட்டணம் வசூலிப்பு நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!!!

 

கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகனத் தரிப்பிடக்

Saturday, March 21, 2026

SHAHNI RAMEES

மக்கள் நலனுக்காக ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணையும்...



தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களில் திசைதெரியாமல்

SHAHNI RAMEES

ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையில் சந்திப்பு!

 


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கும் கட்சித்

Friday, March 20, 2026

SHAHNI RAMEES

தமது போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரிய அமெரிக்கா!

 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி
Zameera

நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிலையங்கள் மூடப்படாது


 நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 


நாளை மற்றும் நாளை மறுதினங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அந்த கூட்டுத்தாபனத்தின் முகாமை பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார். 


சாதாரண நடைமுறைக்கு அமைவாக ஒவ்வொரு மாதமும் ஒரு சனிக்கிழமை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் மூடப்படுவது வழமையாகும். 


இதனை அடிப்படையாகக் கொண்டே சனிக்கிழமை கூட்டுத்தாபனம் மூடப்படவுள்ளதாக செய்திகள் பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 


இருப்பினும், தற்போதுள்ள விசேட தேவை மற்றும் சனிக்கிழமை இரவு QR குறியீடு (QR Code) மீளமைக்கப்பட உள்ளதால், அன்றைய தினம் பெற்றோலிய கூட்டுத்தாபனம் திறந்திருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார். 


அத்துடன், தேவை ஏற்படின் ஞாயிற்றுக்கிழமையிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார். 


இதேவேளை, மொத்த களஞ்சிய முனைய நிறுவனமும் சனிக்கிழமை எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் கூறினார். 


இதன் காரணமாக நுகர்வோர் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவது குறித்து எந்த அறிவித்தலோ அல்லது தீர்மானமோ எடுக்கப்படவில்லை என்றும் முகாமை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


Zameera

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்ட போராட்டத்திற்கு துணை நிற்போம்


கடந்த மாசி மாதம் 4ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களின் உணர்வுக்காக சட்டத்தரணிகள் துணை நிற்போம் என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். 

நேற்று யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவரை விசாரணைக்காக அழைத்தபோது சட்ட ஆலோசனை வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் சென்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பல்கலைக்கழக மாணவர்களை சுமார் நான்கு மணித்தியாலங்கள் குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். 

மாணவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரம் தேவை ஏற்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என தெரிவித்தனர். 

மாணவர்களை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை பல்கலைக்கழக மாணவர்களாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஆகவே தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு தேவையான சட்ட உதவிகளை சட்டத்தரணிகளாக துணை நிற்போம் என அவர் மேலும் தெரிவித்தார். 

சட்டத்தரணிகளான திருக்குமரன், சதீஷ் மற்றும் கோல்டன் ஆகியோரும் மாணவர்களுக்கான சட்ட ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


 

Zameera

குவைத் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல்


 தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை. ​


மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க அவசரக்காலக் குழுவினர் போராடி வருகின்றனர். 


அத்துடன் சில அலகுகள் கட்டாயமாக மூடப்பட்டுள்ளன. 


ஈரானின் சவுத் பார்ஸ் வளாகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் அதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது. 


இதில் வளைகுடா நாடுகள் ஈரானின் கோபத்திற்கு இலக்குகளாக மாறியுள்ளன. 


அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையின் அடிப்படையில் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளின் மீதான தமது தாக்குதல்களை இடைநிறுத்தியுள்ளதாக இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தெரிவித்திருந்தார். 


எனினும் தமது இழப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் தொடர்ச்சியான தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Zameera

ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும்


 ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.


மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இத்துறையின் பிரதான ஏற்றுமதியாளர்கள் மற்றும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.


இங்கு குறிப்பாக ஏற்றுமதித் துறைக்கும், உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தினார். 


தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து, உருவாகியுள்ள சூழ்நிலையை முகாமைத்துவம் செய்வதற்காக ஏற்றுமதித் துறைக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. 


இத்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பாக ஏற்றுமதியாளர்கள் மற்றும் இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கம்முவ, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க ஆகியோருடன், பிரண்டெக்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ரப் ஒமர், ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்கள் மன்றத்தின் (JAAF) தலைவர் பீலிக்ஸ் பெர்னாண்டோ, இலங்கை இறப்பர் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சிசிர ரணதுங்க, இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹஸிபா அக்பரலி மற்றும் இலங்கை வர்த்தக சபை, கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தென்னை சார்ந்த தொழிற்துறையினர் சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை உள்ளிட்ட ஏற்றுமதித் துறை சார்ந்த உற்பத்தி மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.