Our Feeds



Wednesday, May 20, 2026

Zameera

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது


 அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 


இதனால் ஆகக்குறைந்த கட்டணம் 40 ரூபாவுக்கும் அதிகளவில் உயர்த்தப்படக்கூடும் என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று (20) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 

நாடு தற்போது பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கி வருகின்றது. 

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து, ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதால் அது பேருந்து கட்டணத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்த டொலரின் பெறுமதி அதிகரிப்பானது பாரிய விளைவை ஏற்படுத்தும். 

இதனால் உதிரிப்பாகங்களின் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளன. 

அடுத்த மாத முற்பகுதிக்குள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் தமது அறிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும். 

எனவே பெரும்பாலும் பேருந்து கட்டணங்கள் பாரிய அளவில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 

அத்துடன் ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக குறைந்தபட்சம் அதிகரிக்கப்படும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
Zameera

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை சென்ற 322 பேர் கைது


 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி, அதனுடன் தொடர்புடையோர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று நாளை (21) நடைபெறவுள்ளது. 


பாராளுமன்ற வளாகத்தில் நாளை பிற்பகல் இந்த விசேட கூட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதில் பெருந்தோட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தொழிற்சங்க தலைவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


அண்மைக்காலமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சகல தரப்பினருடனான சந்திப்பு ஒன்றுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 


இந்நிலையில், இந்தக்கூட்டமானது நாளை நடைபெறவுள்ள நிலையில், தொழிலாளர்கள் நலன் குறித்து பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Zameera

பெரு நாட்டில் நிலநடுக்கம்




 பெரு நாட்டின் தெற்கே பசுபிக் பகுதியில் இன்று (20) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கம் ஐகா பகுதிக்குட்பட்ட பம்பா டி ததே என்ற நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவில், 56.5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், 27 பேர் காயமடைந்து உள்ளனர். எனினும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHAHNI RAMEES

பிள்ளையானை சிறைக்கே சென்று பார்த்த ராஜபக்ஷ குடும்பம். - பிள்ளையானுக்கு வாக்குறுதி!


ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் பின்னர்,

Sri Lanka

பால் தேநீரின் விலை அதிகரிப்பு!


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sri Lanka

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு!



மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் காண்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார்.

இதற்கு இணையாக, பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்தப் புதிய நூலகக் கட்டிடத்தில், சிறுவர்களுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காகத் தனியானதொரு பிரிவு நிறுவப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

நாட்டில் வாசிப்பு கலாசாரம் குறைந்து வரும் இவ்வேளையில், தமிழ் மக்கள் இன்னமும் வாசிப்பதில் காட்டி வரும் ஆர்வம் பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நூலகம் ஒன்றைத் திறப்பது என்பது சிறைச்சாலையின் தேவையை இல்லாமல் செய்வதாகும் என்றும், இந்த பொது நூலகத்தின் புதிய கட்டிடத்தைத் திறப்பதன் மூலம் தமிழ் மக்களின் புத்தக வாசிப்பு கலாசாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்றும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, மாநகர சபை ஊழியர்களுடன் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன் போது மட்டக்களப்பு மாநகர சபையின் நகரபிதா கே. சிவம் பாக்கியநாதன், ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதியினால் நூலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருடன், கந்தசாமி பிரபு, ஜி. ஸ்ரீநேசன், எஸ். இராசமாணிக்கம், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Sri Lanka

பால் மாவின் விலை அதிகரிப்பு!



இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும்போது, 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் பால் மா பக்கெட்டின் விலை 125 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

Sri Lanka

342 ரூபாயைக் கடந்தது அமெரிக்க டொலரின் விற்பனை விலை!



இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342 ரூபாயைக் கடந்து பாரிய உயர்வை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்துள்ளது.

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை (Buying Rate) 332.08 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை (Selling Rate) 342.70 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் ஏற்பட்ட பாரிய மாற்றம் நேற்று (19) செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.23 ரூபாயாகவும், விற்பனை விலை 338.07 ரூபாயாகவும் காணப்பட்டது.


இதற்கமைய, நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் ஒரே நாளில் டொலரின் மதிப்பு மிகக் கடுமையான உயர்வைச் சந்தித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் அரச வங்கி ஒன்றில் இன்றைய தினம்  அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 345.20 ஆகவும், கொள்வனவு விலையை ரூ. 335.65 ஆகவும்  அதிகரித்துக் காணப்பட்டது.

Sri Lanka

போர் வீரர்களின் கனவை நனவாக்குவது நம் அனைவரினதும் பொறுப்பு - ஜனாதிபதி உருக்கம்!


போர்வீரர்களால் பிரார்த்தனை செய்யப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதோடு அவர்களின் பிரார்த்தனைகளை ஒருபோதும் வீணடிக்கவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை போர் வீரர்களின் உன்னத தியாகத்திற்கு அமைதியான, சட்டத்தை மதிக்கும் தேசமே உண்மையான கௌரவம்" எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.


பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு அருகாமையில்  இடம்பெற்ற போர் வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.


அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி

யுத்தமும் மோதல்களும் நிறைந்த ஒரு நாட்டை நிராகரிப்பதில் முதன்மையானவர்கள் போர் வீரர்கள் ஆவர் எனத் தெரிவித்த ஜனாதிபதி, யுத்தம் எவ்வளவு அழிவுகரமான மற்றும் பயங்கரமானது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர் .


அதேபோல், எமது நாட்டை ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதும், அனைவருக்கும் சமநீதி மற்றும் சட்டத்தை மதிக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பி, உலகை வெல்லும் ஒரு நாடாக எமது தாய்நாட்டை மாற்றுவதே அவர்களின் இறுதிப் பிரார்த்தனையாக இருந்தது. அவர்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தது அந்த உன்னத பிரார்த்தனைகளுடன்தான் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


இழந்த வீரமிக்க வீரர்களையும் வீராங்கனைகளையும் நினைவுகூரும் நமக்குச் செய்யக்கூடியது, அவர்கள் செய்த உன்னத தியாகத்திற்கு வெறுமனே கௌரவத்தையோ அல்லது மரியாதையையோ மட்டும் செலுத்திவிட்டு கடந்து போய்விடுவதல்ல என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.


அவர்களுக்கு மரியாதையும் கௌரவமும் மட்டும் போதுமானதாகாது. அவர்களால் பிரார்த்தனை செய்யப்பட்ட அந்த அமைதியான, சட்டத்தை மதிக்கும் உன்னத தேசத்தை உருவாக்குவதற்கான பொறுப்பு, உயிரோடு இருக்கும் நம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.


அவர்களால் பிரார்த்தனை செய்யப்பட்ட அந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றும், அவர்களின் பிரார்த்தனைகளை ஒருபோதும் வீணடிக்கவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டோம் என்றும் இந்த போர் வீரர்களின் நினைவுச் சின்னத்தின் முன்னால் நின்று தாம் சத்தியம் செய்வதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Sri Lanka

விட்ஸ் கார் கனவை நனவாக்குங்கள் - அரசாங்கத்திற்கு சஜித் சவால்!


அரச வருவாய் அதிகரித்து திறைசேரி நிரம்பி வழிகிறது என்றால், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும், தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தபடி 12 இலட்சம் ரூபாவிற்கு ‘விட்ஸ்’ (Vitz) ரக காரை வாங்கும் மக்களின் கனவை நனவாக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்குச் சவால் விடுத்துள்ளார்.

நேற்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறான கேள்விகளை அரசாங்கத்தை நோக்கிக் எழுப்பினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

ஜனாதிபதியும் ஆளுந்தரப்பு அமைச்சர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டில் முதன்மை உபரி காணப்படுவதாகவும், அரச வருவாய் அதிகரித்து திறைசேரி நிரம்பி வழிவதாகவும் தெரிவித்து வருகின்றனர். அத்துடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெரும் தொகை நிதியுதவிகள் கிடைக்கவுள்ளதாகவும் அரசாங்கத் தரப்பிலிருந்து கூறப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில், மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும் என ஜனாதிபதி குறிப்பிடுவது ஏன்? திறைசேரி நிரம்பி வழியும் பட்சத்தில், அந்த நிதியைப் பயன்படுத்தி எரிபொருள் விலை அதிகரிப்பைத் தடுத்து, மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்க முடியாது என அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த தேர்தல் காலங்களில், 12 இலட்சம் ரூபாவுக்கு ‘விட்ஸ்’ ரக கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம் என தற்போதைய ஆளுந்தரப்பினர் வாக்குறுதி அளித்திருந்தனர். இத்தகைய சூழலில், நடுத்தர மக்கள் வாகனமொன்றை வாங்குவதற்குக் கொண்டுள்ள கனவை அரசாங்கம் எப்போது நனவாக்கப் போகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வினவினார்.

ஒரு நபர் மாதமொன்றுக்கு 16,690 ரூபாவைக் கொண்டு வாழ முடியும் என அரசாங்கம் தெரிவிப்பதைக் கடுமையாக விமர்சித்த சஜித் பிரேமதாச, தற்போதைய வாழ்க்கைச் செலவுடன் இந்தத் தொகையை வைத்துக் கொண்டு ஒருவரால் எவ்வாறு வாழ முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த வறுமைக் கோட்டைக் கணக்கிட்டுள்ள விதம் முற்றிலும் தவறானதாகும். எனவே, அத்திணைக்கள அதிகாரிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து, இத்தரவுகள் மற்றும் தகவல்களை எவ்வாறு பகுப்பாய்வு செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.

Zameera

வானிலை தொடர்பில் அறிவிப்பு


 நாட்டின் மீது தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Zameera

வடகிழக்கு யுத்த வெற்றியின் கௌரவம் மஹிந்த ராஜபக்ஷவையே சாரும்


 (க.சிவலிங்கமூர்த்தி)


முப்பது வருட கால கொடூர பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்த வடகிழக்கு யுத்த வெற்றியின் முழுக் கௌரவமும் அதற்குச் சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே சாரும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.அரசியல் பகுப்பாய்வு


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;


நேற்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இராணுவ வீரர்கள் நினைவிடத்துக்குச் சென்று வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் மலரஞ்சலி செலுத்திவிட்டு வருவதற்குப் பொலிஸாரால் அனுமதி வழங்கப்பட்டிருக்க முடியும். அதற்கு எவ்விதப் பிரச்சினையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனினும், அரசாங்கம் அந்த அனுமதியை அவருக்கு வழங்க மறுத்துள்ளது. இலங்கையில் இதுவரை ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்குப்பங்களித்த மாவீரர்களான இராணுவ வீரர்கள் விடயத்தில் இவ்வாறானதொரு கொள்கையைக் கடைப்பிடித்ததில்லை. பயங்கரவாதத்துக்கு எதிராகவே எமது இராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து போரிட்டனர்.


பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொலை செய்து, சிறுவர்களைக் கட்டாயமாகப் படையில் சேர்த்த விடுதலைப் புலிகள் அமைப்பை இன்று தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் சுயநலத்துக்காகக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் இடமளித்துள்ளது. இவ்வாறான விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்துவதற்கும் கொண்டாடுவதற்கும் இடமளிப்பதன் மூலம், மற்றுமொரு வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவாவதை ஒருபோதும் தடுக்க முடியாது. மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகள் அமைப்புத் தலைதூக்கி நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படுமாயின், அதற்கான முழுமையான பொறுப்பை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கமே ஏற்க வேண்டும்.



இந்த வடகிழக்கு யுத்தத்துக்குச் சரியான அரசியல் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வழங்கியிருந்தார். அதனை எவராலும் மறுக்க முடியாது. கடந்த 1987 ஆம் ஆண்டு ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் ஜெனரல் விஜய விமலரத்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற வடமராட்சிப் போரின்போது பிரபாகரனை முழுமையாகச் சூழ்ந்து கொண்டு, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழிப்பதற்கு இன்னும் சில தினங்களே இருந்த நிலையில், அன்றைய ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கம் அச்சமடைந்து போரை நிறுத்தியது. அன்று போரை நிறுத்தியிருக்காவிடில் பயங்கரவாதம் அப்போதே ஒழிக்கப்பட்டிருக்கும்.


அதேபோன்று, 2009 மே மாதத்தில் யுத்தம் முடிவடைவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளியுறவுச் செயலாளர் பேர்னார்ட் குஷ்னர் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் ஆகியோர் ஒன்றிணைந்து போரை நிறுத்துமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்தனர். அன்று அவர் அந்த அச்சுறுத்தல்களுக்குப் பயந்து போரை நிறுத்தியிருந்தால், இன்று இந்நேரம் ஈழ நாடு பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும். அந்த அழுத்தங்களுக்குப் பணியாது போரை வெற்றிகரமாக முடித்து வைத்த பெருமை மஹிந்த ராஜபக்ஷவுக்குரியதாகும்.


யுத்த வெற்றியின் பின்னர் வடக்கு மாகாணத்தை முழுமையான அபிவிருத்திக்கு அவர் உட்படுத்தினார். நாட்டின் ஏனைய பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி வீதம் நூற்றுக்கு 10.7 ஆக இருந்தபோது, வடக்கின் வளர்ச்சி வீதத்தை நூற்றுக்கு 12.2 ஆக உயர்த்திக் காட்டினார். பாலங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், காப்பட் வீதிகள், பாடசாலைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் எனப் பல உள்கட்டமைப்பு வசதிகள் அங்கு ஏற்படுத்தப்பட்டன. வடகிழக்கு யுத்தத்தினால் விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டாயமாகப் போரில் ஈடுபடுத்தப்பட்ட சிறுவர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு முறையான கல்வி வழங்கப்பட்டதன் விளைவாக இன்று அவர்கள் சமூகத்தில் உயர்ந்துள்ளனர். வடக்குக்கு உண்மையான அமைதியைக் கொண்டுவந்தது மஹிந்த ராஜபக்ஷவேயன்றி வேறெவருமில்லை என்றார்.

Zameera

கபில சந்திரசேனவுக்கு பிணை நின்ற இருவரிடமும் பொலிஸார் இதுவரை சாட்சியங்களை பதிவு செய்யவில்லை


 சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை நின்ற இருவரிடமும் பொலிஸார் இதுவரை சாட்சியங்களை பதிவு செய்யவில்லை என்பது கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (19) தெரியவந்துள்ளது.



இது குறித்து பொலிசாரிடம் கடுமையான தொனியில் கேள்வி எழுப்பிய நீதவான், இதுவரை அவர்களிடம் இருந்து வாக்குமூலங்களோ அல்லது குறிப்புகளோ பெறப்படவில்லை என்றால் விசாரணைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்று வினவினார்.



ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான நீதவான் விசாரணை, இன்று மூன்றாவது நாளாகவும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விபரம் வெளிவந்தது.



மரணமடைந்தவரின் தற்போதைய வீட்டிலும், அவர் வசித்து வந்த வீட்டிலும் உள்ள சிசிடிவி  தரவுகள் சேமிக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.



இதன்படி, அந்த சிசிடிவி கெமராக்களின் டிவிஆர் இயந்திரங்கள் மற்றும் மரணம் நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மாத்திரைகளை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை பெறுவதற்கு புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். அங்கு அடையாளம் தெரியாத இரண்டு வகையான மாத்திரைகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.



இதன்போது, சமூகத்தில் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ள கபில சந்திரசேனவின் பிணையாளர்கள் குறித்து நீதவான் கேள்வி எழுப்பினார்:



"இந்த சாட்சிய விசாரணையின் போது மரணமடைந்தவருக்கு பிணை நின்ற இருவர் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன. அவர்களை சாட்சியமளிக்க அழைக்கவில்லையா?"



அதற்கு பதிலளித்த பொலிஸார், "சுவாமி... அவர்களிடம் இருந்து இதுவரை வாக்குமூலங்களை பதிவு செய்ய முடியாமல் போனது" என்று கூறினர்.



அப்போது நீதவான் கடுமையான தொனியில், "வாக்குமூலங்களை பதிவு செய்ய முடியாமல் போனதாகக் கூறி சாட்சியங்களை அழைக்காமல் இருக்க முடியுமா? அவர்களையல்லவா முதலில் சாட்சியத்திற்கு அழைத்திருக்க வேண்டும். வாக்குமூலங்களை பதிவு செய்யாவிட்டால் எவ்வாறு விசாரணை நடத்துவீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.



அதற்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி, "சுவாமி... அந்த இரண்டு பிணையாளர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.



அதற்கு பதிலளித்த நீதவான், "விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது அந்த இரு பிணையாளர்களும் இல்லையே. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றால் வாக்குமூலம் பெறுவது இன்னும் எளிதானதே. என்னிடம் இருந்து உத்தரவைப் பெற்று அதனை மிக எளிதாகச் செய்திருக்கலாம்" என்று கூறினார்.



விசாரணைகளுக்காக பொலிஸார் கோரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்த நீதவான், மரண பரிசோதனை தொடர்பான சாட்சியங்களை அழைக்குமாறு உத்தரவிட்டார்.



இதன்படி, இன்று முதலாவதாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றின் செவிலியரான கோசல ரத்னஜீவ சாட்சியமளித்தார்:



"சம்பவம் நடந்தன்று காலை 7.45 மணியளவில் முதல் தொலைபேசி அழைப்பு வந்தது. நாங்கள் நோயாளர் காவு வண்டி மூலம் அந்த வீட்டிற்குச் சென்றோம். பின்னர் அந்த வீட்டில் இருந்த ஒரு சட்டத்தரணி எங்களை மேல் தளத்திற்கு அழைத்துச் சென்றார். அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. கட்டிலின் மீது ஒரு ஆடைப் பை வைக்கப்பட்டிருந்தது. ஒருவர் தரையில் படுத்திருப்பது போல் கிடந்தார். கழுத்தில் ஒரு துணிப் பட்டி கட்டப்பட்டிருந்தது. முகம் ஒரு நாற்காலியின் மேல் இருந்தது. வைத்தியர் அந்த நபரைப் பரிசோதித்து, அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார். மரணமடைந்தவர் கபில சந்திரசேன என்பதை அறிந்துகொண்டேன். வைத்தியசாலை நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, நான் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தேன்" என்று கூறினார்.



அதனைத் தொடர்ந்து, அரவிந்த டி சில்வாவின் வீட்டில் பணிபுரிந்த ராஜேந்திர குமார் சிவகுமார் சாட்சியமளித்தார்:



"மே 07 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் கபில ஐயா எங்களது வீட்டிற்கு வந்தார். அவர் இரவு உணவு உட்கொள்ளவில்லை. இரவில் கபில அவர்கள் அரவிந்த ஐயாவுடன் பேசிக்கொண்டிருப்பதை கண்டேன். நள்ளிரவு 12.10 மணியளவில் நான் தூங்கச் செல்லத் தயாரானேன். கடைசியாக நான் தேநீர் தயாரித்துக் கொடுத்தேன். அப்போது நேரம் நள்ளிரவு 12.00 மணி முதல் 12.05 மணிக்கு இடையில் இருக்கும். நான் நள்ளிரவு 12.15 மணியளவில் தூங்கச் சென்றேன். நள்ளிரவு 1.30 மணியளவில் கழிவறைக்குச் செல்ல நான் விழித்தேன். சமையலறை பகுதியில் விளக்குகள் எரியக் கண்டேன். நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். அந்த நேரத்தில் கபில அவர்கள் கையில் ஒரு வெள்ளை நிறப் போத்தலை வைத்துக்கொண்டு ஃபில்டருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார். நான் சாரிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன். தண்ணீர் எடுக்க வந்ததாகக் கூறினார். நான் அறையில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினேன். பின்னர் அவர் மேலே சென்றார், நானும் தூங்கச் சென்றேன்" என்று சாட்சி கூறினார்.



பின்னர், அரவிந்த டி சில்வாவின் வீட்டில் சிசிடிவி கெமராக்களைப் பொருத்திய நிறுவனத்தின் பொறியியலாளரான கிரிஷாந்த கமலசிறி சாட்சியமளித்தார்:



"அரவிந்த டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது வீட்டில் ஐந்து கெமராக்கள் பொருத்தப்பட்டன. 2022 ஆம் ஆண்டளவில்தான் அவை பொருத்தப்பட்டன. கெமராக்களில் தரவுகள் சுமார் ஒரு மாதம் சேமிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஓராண்டிற்குப் பிறகு அழைப்பு விடுத்து அலாரம் அடிப்பதாகப் பார்க்கச் சொன்னார்கள். பரிசோதித்தபோது அதன் 'ஹார்ட் டிஸ்க்'  சேதமடைந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அது மாற்றப்பட்டது. இந்த கெமராக்களில் தரவுகள் ஏன் சேமிக்கப்படவில்லை என்று என்னால் கூற முடியாது. நான் அதனைப் பரிசோதிக்கவில்லை" என்று தெரிவித்தார்.



இதனையடுத்து மேலதிக சாட்சிய விசாரணை இந்த மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.