Our Feeds



Sunday, August 16, 2026

ShortNews

இந்தோனேஷியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை அதிகரிப்பு!



இந்தோனேஷியாவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், பலரும் காயமடைந்துள்ளதாக நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (BNPB) உறுதிப்படுத்தியுள்ளது.

'புளோரஸ்' (Flores) தீவுப் பகுதியில் நேற்று (15) அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளதுடன், பிராந்தியத்தில் பெரும் பீதியையும் நிலைகுலைவையும் ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் மிகக் குறைந்த ஆழத்தில் (சுமார் 10 கிலோமீற்றர்) அமைந்திருந்ததால், இதன் தாக்கம் மிகக் கடுமையாக உணரப்பட்டது.

இதன் காரணமாகத் தொடக்கத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் அது திரும்பப்பெறப்பட்டது. எனினும், கடலோரப் பகுதிகளில் 1.5 மீற்றருக்கும் அதிகமான அளவில் சிறிய சுனாமி அலைகள் பதிவாகியதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பாரிய இயற்கை அனர்த்தத்தினால் 350-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதுடன், 100-க்கும் மேற்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் மின்சாரத் தடைகள் காரணமாகப் போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவம், பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியுள்ளதாலும், சில தொலைதூரப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் இன்னும் சென்றடைய முடியாத நிலை காணப்படுவதாலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Zameera

யாழில் இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு கையளிப்பு

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு இன்று (16) கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவினால் குறித்த வீட்டுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட, வீடானது இன்று யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரத்னாயக்கவினால் கையளிக்கப்பட்டது.

இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ லண்ட்ஸ்கோப்ரல் எம்.ஆர் ராஜா என்பவருக்கு குறித்த வீடு கட்டி வழங்கப்பட்டது.

இராணுவத்தின் சேவா வனிதா திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் ரூபா செலவில் குறித்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் சர்வ மத தலைவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட கட்டளை தளபதி கோப்பாய் பிரதேச செயலாளர், இராணுவ தளபதிகள், பொலிசார் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




 


ShortNews

நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மழை!


நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

ShortNews

கடற்படையின் டோரா படகு விபத்து - தொடரும் மீட்பு பணிகள்!


இலங்கைக் கடற்படையின் டோரா (Dvora) கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, இன்றும் (16) தேடுதல் நடவடிக்கைகள் தொடர்வதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

மொறட்டுவை, அங்குலானை பகுதியை அண்மித்த கடற்பகுதியில் நேற்று (15) இலங்கை கடற்படைக்குச் சொந்தமான டோரா ரக படகு ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், நேற்று மீட்கப்பட்ட 11 கடற்படை வீரர்களும் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதுடன், அவர்களது உடல்நிலை சீராகவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விபத்துக்குள்ளான கடற்படைக் கப்பலை மீட்கும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், நிலவும் கொந்தளிப்பான கடல் சூழ்நிலை இதற்கு ஒரு பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

SHAHNI RAMEES

மக்களின் கண்ணீர் குறித்து அரசாங்கத்திற்கு எந்தக் கவலையும் இல்லை!

 


நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள்

SHAHNI RAMEES

இலங்கை இளைஞர்களுக்கு எவ்வித வருத்தமும் ஏற்படாத பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எங்களின் நிலையான திட்டம்! - திலித்

 


இலங்கை இளைஞர்களுக்கு எவ்வித வருத்தமும்

Saturday, August 15, 2026

SHAHNI RAMEES

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட ஐவரை விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தல்

 


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்

SHAHNI RAMEES

கல்முனை வைத்தியசாலை ஊழியர்களின் ஆடை விவகாரம்: உரிய நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர், றிஷாட் பதியுதீனிடம் உறுதி

 


கல்முனை வைத்தியசாலை ஊழியர்களின் ஆடை விவகாரம்:

Zameera

செம்மணி மனித புதைகுழி: மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்



செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், 53 ஆவது நாளான இன்றைய தினம் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 107 நாள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 562 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 557 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

 

Zameera

பாடநூல்களை பழைய காகிதத்திற்கு விற்பனை – 5 பேர் விளக்கமறியலில்




 கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்குச் சொந்தமான 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடநூல்களை 47,000 ரூபாய்க்கு வெளிநபர் ஒருவருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இவர்கள், இன்று (15) கடுவலை நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முதலாம் ஆண்டிற்கான தமிழ் செயல்பாடு மற்றும் பாடநூல்கள் 19,892 காணாமல் போன சம்பவம் தொடர்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உயர் பெண் அதிகாரி ஒருவர் அண்மையில் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த புத்தகத் தொகுதியை கொண்டு சென்ற லொறி சாரதி, அந்தப் புத்தகங்களை பழைய காகிதம் மற்றும் போத்தல் வியாபாரி ஒருவருக்கு விற்று 47,000 ரூபாவை பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்த மேல் விசாரணை பணிகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Zameera

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு ரூ.570 மில்லியன் மருத்துவ உபகரணங்கள்


 கண்டி தேசிய வைத்தியசாலைக்கு 570 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 அதிநவீன மருத்துவ உபகரணத் தொகுதிகள் உத்தியோகபூர்வமாக நோயாளர்களின் சிகிச்சை சேவைகளுக்காக இன்று (15) கையளிக்கப்பட்டன.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது புதிதாக நிறுவப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய இருதய வடிகுழாய் ஆய்வகப் பிரிவு (ரூ. 200 மில்லியன்), மமோகிராபி பிரிவு (ரூ. 180 மில்லியன்) மற்றும் சி.டி. பரிசோதனைப் பிரிவு (ரூ. 190 மில்லியன்) ஆகியவை இவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு வைக்கப்பட்டன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்பில் செயற்படுத்தப்படும் சுகாதார முறைமை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் கதிரியக்க சிகிச்சை சேவைகளுக்காக இணைக்கப்பட்ட இரண்டாவது சி.டி. ஸ்கேன் இயந்திரம் இதுவென்பதுடன், இருதய வடிகுழாய் ஆய்வகப் பிரிவும் அவ்வைத்தியசாலைக்கு கிடைத்த இரண்டாவது இருதய வடிகுழாய் ஆய்வகமாகும்.

அத்துடன், இலங்கையிலுள்ள மிக உயர்ந்த நவீன தொழில்நுட்பம் கொண்ட 5 மமோகிராபி இயந்திரங்களில் ஒன்றும் இன்றைய தினம் வைத்தியசாலையில் நிறுவப்பட்டது.

அதிகளவு காத்திருப்புப் பட்டியலைக் கொண்ட கண்டி தேசிய வைத்தியசாலையில் தற்போது 8,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் நிதிப் பங்களிப்பில் புற்றுநோய் பிரிவு, அவசர விபத்துப் பிரிவு உள்ளிட்ட கட்டிடங்களை அமைப்பதற்காக இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இருதய வடிகுழாய் பிரிவுகள் 16 இந்த ஆண்டிற்குள் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பில் நிறுவும் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன்கீழ் கண்டி தேசிய வைத்தியசாலையின் புதிய இருதய வடிகுழாய் ஆய்வகப் பிரிவு நிறுவப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

Zameera

73 பாதாள உலகக் குழு உறுப்பினர்களை நாட்டிற்கு அழைக்க நடவடிக்கை


 வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள முக்கிய பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 73 பேரை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார். 

மேலும் நூற்றுக்கு அருகாமையிலான நபர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றம் காரணமாக, வெளிநாடுகள் மற்றும் தூதரகங்களின் சிறப்பு பாராட்டும், உயர் ஒத்துழைப்பும் இதற்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு எந்தவொரு வௌி அழுத்தங்களோ அல்லது அச்சுறுத்தல்களோ விடுக்கப்படவில்லை என்றும், சோதனைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு மட்டுமே கோரிக்கைகள் கிடைப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் இங்கு தெரிவித்தார்.

இருப்பினும், இந்த கடத்தல்களுக்கு பணம் முதலீடு செய்த மற்றும் உதவிய நபர்கள் தற்போது கடுமையாக கலக்கமடைந்துள்ளதாக அவதானிக்க முடிகிறது என்றும் பிரியந்த வீரசூரிய கூறினார்.

சில அரசியல்வாதிகள் தன்னை பற்றி வெளியிடும் கருத்துக்கள் குறித்து தனக்கு எந்த பயமும் இல்லை என்றும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் இங்கு வலியுறுத்தினார்.

தான் எந்தவொரு சமூக அநீதியையோ அல்லது அழிவையோ செய்யாததால், சிறப்பு பாதுகாப்பு இல்லாமலும் நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு செல்ல முடியும் என்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறினார்.

மேலும், மக்களுக்கு சென்று பார்க்க முடியாத நிலை தனக்கு ஏற்படவில்லை என்றும், சமூகத்திற்கு பொய் கூறி அழிவை ஏற்படுத்திய அரசியல்வாதிகளுக்கே அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய,

"மேலும் 73 சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களை அழைத்து வர வேண்டியுள்ளது. மேலும் 100 பேர் வரை இருப்பதாக நம்பப்படுகிறது. அதேபோல் எங்களுக்கு நல்ல சர்வதேச ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. அத்துடன் நாங்கள் முன்னெடுக்கும் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் நாடுகள் சிறப்பு பாராட்டு தெரிவித்துள்ளன."

SHAHNI RAMEES

ஹிரிகெட்டியவில் புதிதாக அமைக்கப்பட்ட இஸ்ரேலிய சாபாத் இல்லத்தை (Chabad House) அகற்றுமாறு கிராமமக்களும் பிக்குமாரும் எதிர்ப்பு போராட்டம்!

ஹிரிகெட்டியவில் புதிதாக அமைக்கப்பட்ட இஸ்ரேலிய