Our Feeds



Monday, March 30, 2026

SHAHNI RAMEES

'ஐஸ்' போதைப்பொருளுடன் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

 

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில்,
Zameera

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் ராஜினாமா


 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சரத் கணேகொட மார்ச் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ராஜினாமா செய்துள்ளார். 


இந்நிலையில், நிதி அமைச்சின் செயலாளரால் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஏ.கே.டி.டி. டிமல் அரந்தர பதில் தலைவராகப் பணியாற்றுவார். 


இதேவேளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனங்களின் பணிப்பாளர் சபையிலிருந்து பணிப்பாளர் ரோஹன் குணதிலக்கவும் விலகியுள்ளார்.

Zameera

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளது.

வைத்தியர்களின் நியாயமற்ற இடமாற்ற பிரச்சினைளுக்கு உரிய தீர்வை வழங்காது அதிகாரிகள் அசமந்த போக்கை கடைப்பிடிக்கின்றனர்.

இதனை கண்டித்து, இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை (31) காலை 8 மணி முதல் முதலாம் (01) திகதி காலை 8 மணிவரை இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

 

SHAHNI RAMEES

அமெரிக்காவின் உச்ச பாதுகாப்பு விமானத்தை இரண்டாகப் பிளந்த ஈரான்!


அமெரிக்காவின் உச்ச பாதுகாப்பு விமானத்தை அழித்தது ஈரான்

Zameera

மின்சாரக் கட்டணம் உயர்வு: ஏப்ரல் 1 முதல் அமல்


 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. 


இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு அமைய, 13.56% மின்சாரக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. 

எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது 

அதன்படி 0 - 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. 

இதற்கமைய 15 ரூபாய் மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்படுகின்றது. 

மாதாந்தம் 45 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

61 - 91 அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மாதாந்த 120 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

91 - 120 அலகுகளுக்கு மின்சாரக் கட்டணம் 7.1% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி மாதக் கட்டணம் 420 ரூபாவினால் உயரும். 

180 அலகுகளுக்கு மேல் இந்த கட்டத்திற்கு அதிகப்படியான கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், மின்சாரக் கட்டணம் 25% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான சலுகை: மாதாந்த மின்சார நுகர்வு 180 அலகுகளுக்குக் குறைவாகக் காணப்படும் மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனினும், அதே பிரிவில் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மாத்திரம் 9.6% கட்டண உயர்வை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Zameera

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்


 இணையதளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 125 சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 


சீன அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட விசேட விமானம் மூலம் அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 


கடந்த 17ஆம் திகதி அநுராதபுரம் பகுதியில் உள்ள பல விடுதிகளில் தங்கியிருந்து இணையதளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டிருந்த போதே, குறித்த சீனப் பிரஜைகள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினராலும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினராலும் கைது செய்யப்பட்டனர். 


இவர்கள் சுற்றுலா மற்றும் வர்த்தக விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகை தந்த பின்னர், குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்தமை விசாரணையில் தெரியவந்தது. 


இவர்கள் வெலிசரவில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர். 


இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக சீன குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றும், வைத்தியர் ஒருவரும் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். 


நேற்றிரவு குறித்த சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டதுடன், அவர்களுடன் இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தைச் சேர்ந்த 6 அதிகாரிகள் கொண்ட குழுவொன்றும் சீனா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


SHAHNI RAMEES

கமல் அமரசிங்க மீண்டும் விளக்கமறியலில்...

 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட
SHAHNI RAMEES

கரண்ட் பில் கூடுமா? - இன்று பிற்பகல் தெரியும்!

 

நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான
SHAHNI RAMEES

நிலக்கரி மோசடி: ஜனாதிபதியும் ஒரு பங்காளி - சம்பிக்க குற்றச்சாட்டு!

 


தரமற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பில் வலுசக்தி

Zameera

குவைட்டில் ஏவுகணை தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு


 இஸ்ரேல், அமெரிக்கா - ஈரானுக்கு இடையிலான போர் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் தாக்குதலின் ஒரு பகுதியாக குவைட்டில் உள்ள மின்சார மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டிடம் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குவைட் நாட்டின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இன்று (30) வெளியிட்ட அறிக்கையில் இத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து தொழில்நுட்பம் மற்றும் அவசரகால குழுக்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக செயற்பட்டு நிலையத்தை மீண்டும் செயல்பட வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் எரிசக்தி அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Zameera

ஈரானின் எண்ணெய் வளத்தையும், கார்க் தீவையும் அமெரிக்காவால் கைப்பற்ற முடியும் - ட்ரம்ப்


 (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)


ஈரானில் உள்ள மசகு எண்ணெயைக் கைப்பற்ற முடியும் எனவும், அந்நாட்டின் முக்கிய எரிபொருள் மையமான கார்க் தீவைக் கைப்பற்றவும் வாய்ப்புள்ளது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.


டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவிக்கையில், 


உண்மையைச் சொல்லப்போனால், ஈரானின் எண்ணெயை எடுத்துக்கொள்வதுதான் எனக்குப் பிடித்தமான விடயம். தனது இந்தத் திட்டத்தை எதிர்க்கும் அமெரிக்கர்கள் அறிவற்றவர்கள்.


ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவைக் கைப்பற்றுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும், சில நேரங்களில் நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம், சில நேரங்களில் இல்லாமலும் போகலாம்; நம்மிடம் பல தெரிவுகள் உள்ளன.


அத்தீவில் ஈரானிடம் பெரிய அளவில் பாதுகாப்பு வசதிகள் இல்லை, அமெரிக்காவால் மிக எளிதாக அதைக் கைப்பற்ற முடியும்.


மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே 3,500 அமெரிக்க வீரர்கள் அங்கு தரையிறங்கியுள்ளனர்.  கார்க் தீவைக் கைப்பற்றினால், அமெரிக்கப் படைகள் அங்கு நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டியிருக்கும்.


அதேவேளை, பாகிஸ்தான் தூதுவர்கள் வழியாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றார்.


ஒரு ஒப்பந்தம் மிக விரைவாக எட்டப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், போர் நிறுத்தம் எப்போது ஏற்படும் என்பது குறித்து தெளிவான பதிலை அளிக்க மறுத்துவிட்டார்.

Zameera

NPP எம்.பி பைசல் சென்ற கார் விபத்து


 தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த கார், சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

நேற்று இரவு 11.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அந்த நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே காரில் இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த விபத்தினால் கார் மற்றும் மதிலுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Zameera

வெப்பமான வானிலை தொடரும்


 நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  


அதேநேரம் மேல் மற்றும் சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  


நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.  


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.