Our Feeds



Wednesday, July 1, 2026

Zameera

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு


 பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. 


சாதாரண சேவையின் கீழான பேருந்து கட்டணத்தை 100 கிலோமீற்றருக்கும் குறைந்த பயணத்தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 அல்லது அதற்கும் மேற்பட்ட கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 20 சதவீதத்தினாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


அதேநேரம் சொகுசு பேருந்துகளுக்கான கட்டணத்தை முதல் 100 கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 கிலோமீற்றருக்கும் அதிக பயணத் தூரத்திற்கு 15 சதவீதத்தினாலும் அதிரிக்கப்பட்டுள்ளது.

Zameera

இலங்கை முதலீட்டு சபைக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்


 இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ஜே.ஜி.எல்.எஸ். ஜயவர்தன, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 


இதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அவரிடம் கையளிக்கப்பட்டது. 


கலாநிதி ஜே.ஜி.எல்.எஸ். ஜயவர்தன, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகவும் (நிறுவன ரீதியான பணிகள்) கடமையாற்றுகிறார்.

Zameera

சலேவின் கடவுச்சொற்களை சி.ஐ.டிக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு


 அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் இரகசிய கடவுச்சொற்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.


இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Zameera

535 பயன்பாட்டு வாகனங்கள் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி


 அரச அபிவிருத்திப் பணிகள் மற்றும் களநிலைப் பணிகளுக்கு 535 பயன்பாட்டு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 


அந்தந்த நிறுவனங்களில் காணப்படுகின்ற பயன்பாட்டு வாகனங்களில் நிலவுகின்ற பற்றாக்குறையானது, அரச அபிவிருத்தித் கருத்திட்டங்களை வினைத்திறனாக அமுல்படுத்துவதற்குத் தடையாக இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. 


அதற்கமைய, கீழ்க்காணும் பயன்பாட்டு வாகனங்களைத் துரிதமாகக் கொள்வனவு செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Zameera

புதிய கடற்படை தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்


 நாட்டின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

 

மத்தேகொடவில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 

 

கடற்படைத் தளபதிக்கு இன்று (01) கடற்படைத் தலைமையகத்தில் விசேட அணிவகுப்பு மரியாதையுடன் கௌரவம் அளிக்கப்பட்டது.

Zameera

விவசாயிகள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினையே நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளது

விவசாயிகள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினையே நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

பொலன்னறுவையில் விவசாயத் தலைவர்களுடன் இன்று (01) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை அரசாங்கம் தனது பிரதான கடமையாகக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, இன்று முற்பகல் மெதவாச்சிய பிரதேசத்திற்குச் சென்று, பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவசாயத் தலைவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் சர்வஜன அதிகாரத்தின் உப தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமன மற்றும் பிரதிச் செயலாளர் ருஷான் மலிந்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த திலித் ஜயவீர எம்.பி:

"இப்போது விவசாயிகளை கேலிக்குள்ளாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரச்சினை குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. உலகளாவிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் எழும் போட்டிகளை எதிர்கொள்ளும் திறன் எங்களிடம் உள்ளது. விவசாயியை ஒரு 'விவசாய தொழில்முனைவோராக' மாற்றும் வேலைத்திட்டம் குறித்து நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். இதுவே தற்போது இந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய தேசியப் பிரச்சினை. மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இதையே முதன்மையான பிரச்சினையாகக் கொள்ள வேண்டும். ஒருபுறம் விவசாயி, மறுபுறம் நுகர்வோர் எனப் பார்க்க வேண்டும். நீண்டகாலமாக நாங்கள் பாதுகாத்து வந்த நமது விவசாய கலாச்சாரத்தை, இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா அரிசியால் மூடிமறைக்க முயற்சிப்பார்களேயானால், அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்."

 

Zameera

சுகீஷ்வர பண்டார ஜூலை 8 வரை மீண்டும் விளக்கமறியலில்


 இன்று (01) முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகீஷ்வர பண்டார, வரும் ஜூலை 08-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு, ஜூலை மாதம் 08 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது.

அதுவரை சந்தேகநபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படுவார் என கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று உத்தரவிட்டார்.

இந்த விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, விசாரணைகளை முன்னெடுக்கும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.


 

SHAHNI RAMEES

உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் சுரேஷ் சலே!

 

இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்யத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHAHNI RAMEES

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் வெற்றி பெறுவோம்!


அரசாங்கத்தின் மீதான மக்களின்
SHAHNI RAMEES

QR முறை நீக்க வேண்டும்!

 


எரிபொருட்கள் தற்போது தட்டுப்பாடின்றி கிடைக்கப்பெறுவதால்,

SHAHNI RAMEES

எல்பிட்டியவில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி கைவிலங்குடன் தப்பியோடிய சந்தேகநபர்!

 

எல்பிட்டிய பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய
SHAHNI RAMEES

16 ஆண்டுகள் சிறைத்தண்டனையை இரத்து செய்யக் கோரி சரண குணவர்தன மேன்முறையீட்டு மனு தாக்கல்!

 


ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தனக்கு விதிக்கப்பட்ட

SHAHNI RAMEES

டெங்கு பாதிப்பு 55,000 ஐக் கடந்தது - உயிரிழப்புகள் 32 ஆக உயர்வு!

 

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில்