
Saturday, March 14, 2026

போர் மோதலால் ஈரானில் 3.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு
இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலைநகர் தஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொடர்ந்து நிலவும் மோதல் சூழல் காரணமாக, இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், மோதல்கள் ஆரம்பமானது முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஈரானைச் சேர்ந்த 25,000 இற்கும் அதிகமானோர் ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளுக்குத் தடை
3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாகக் கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பிரிவு மாணவர்களை இலக்காகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்படும் இணையவழி கருத்தரங்குகள் தொடர்பாக பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி உளவியலின்படி, 3-5 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களின் கற்றல் செயல்பாடுகள், செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூகத் தொடர்புகள் நிறைந்த சூழலிலேயே அமைய வேண்டும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. திரையைப் பார்த்து கல்வி கற்கும் சிறுவர்களின் சமூகத் திறன் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறன் குறைவடைவதற்கும், ஆக்கபூர்வமான சிந்தனைக்குத் தடையாக அமைவதற்கும் இது காரணமாகிறது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, அரசாங்கம் மற்றும் பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் அபிவிருத்திக் கொள்கைகளின்படி, முன்சிறுவர் பருவ வளர்ச்சியின் போது குழந்தை சூழலுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும். சிறுவர்களை அதிகளவில் தொழில்நுட்பக் கருவிகளுக்கு உட்படுத்துவது அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக மூளை வளர்ச்சிக்குத் தீங்கானது என்பதால், இத்தகைய வயதுப் பிரிவினருக்கு இணையவழி வகுப்புகளை நடத்துவதை அமைச்சு அங்கீகரிக்கவில்லை.
வர்த்தக நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்படும் இவ்வாறான கருத்தரங்குகளால் சிறுவர்களின் கல்வித் தரம் உயராது எனவும், அது அவர்களின் இயல்பான வளர்ச்சிக்குத் தடையாக அமையும் எனவும் பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பெற்றோருக்கு அறிவித்துள்ளது
எனவே, பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தைக் கருத்திற் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. ஒரு குழந்தையின் சிறந்த ஆசிரியர் சூழலும் நேரடி அனுபவங்களுமே தவிர டிஜிட்டல் திரை அல்ல என்றும் அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது. இதன்படி, பிள்ளைகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பில் பெற்றோராக அதிக அவதானம் செலுத்தி செயற்படுமாறு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் போர்க்கப்பல் IRIS Dena மீது தாக்குதல் : தகுந்த பதில் வழங்கப்படும்
ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான IRIS Dena மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு "தகுந்த பதில் வழங்கப்படும்" என்று ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார்.
போர்ப் பயிற்சியை முடித்துவிட்டு மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், நேரடிப் போரில் ஈடுபடாத நிலையில் தமது கடற்படையினர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், IRIS Dena கப்பலின் பெயரும் அதன் பணியாளர்களின் உயிர் தியாகமும், ஈரானிய கடற்படை வரலாற்றில் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக நிலைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரானின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் கடற்படை சக்தியை மேலும் பலப்படுத்துவதற்கும் உறுதியான தீர்மானத்துடன் செயற்படுவதாக ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி வலியுறுத்தினார்.

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைக்கு இத்தாலி ஆதரவு இல்லை
இத்தாலி பாராமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, மத்திய கிழக்கிலிருந்து தனது நாட்டுப் படைகளை மீளப்பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது எனவும், ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது எனவும் அவர் அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரிழந்த ஈரான் மாணவர்களின் குடும்பங்களுக்கு சீனா நிதியுதவி
இத் தாக்குதலில் 150 இற்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்ததோடு, 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பில், பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் இங் தெரிவிக்கையில்,
“ஈரான் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததற்கு சீனா ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பங்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
இத் தாக்குதலுக்கு ஈரான் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு சீன செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து ரூபா 1.84 கோடி நிவாரணமாக வழங்கப்படுகிறது.
மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் ஈரான் மக்களின் சிரமங்களைப் போக்கும் விதமாக சீனா தொடர்ந்து தனது ஆதரவை ஈரானுக்கு வழங்கத் தயாராகவுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.

அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை
(எம்.மனோசித்ரா)
அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து அரசாங்கம் ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை (13) அமைச்சில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ள சூழலில், இதற்கான தீர்வாக ரஷ்ய எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இலங்கையில் தடையின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான மற்றுமொரு கட்டமாக, ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யனுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கோரிக்கையை ரஷ்ய அரசாங்கத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்துவதாகத் தூதுவர் இதன்போது உறுதியளித்தார். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் உறுதியளித்ததாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்குத் தேவைப்படும் எந்த நேரத்திலும் ரஷ்யாவின் ஆதரவு இருக்கும் என்பதை இக்கலந்துரையாடலின் போது தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார்.
நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு




