Our Feeds



Thursday, May 21, 2026

Zameera

மொரிஷியஸ் நாட்டுக்காக தயாராகும் நவீன படகு - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விசேட களவிஜயம்


 மொரிஷியஸ் நாட்டின் தனியார் துறை நிறுவனமொன்றிற்காக இலங்கையின் சீநோர் (Cey-Nor) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வரும், 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள பாரிய படகின் முன்னேற்றத்தைப் பார்வையிட கடற்றொழில்,

நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (21) முற்பகல் மட்டக்குளி சீநோர் கப்பல் கட்டும் தளத்திற்கு விசேட களவிஜயமொன்றை மேற்கொண்டார்.

55 அடி நீளம் கொண்டதும், சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் (250,000) அமெரிக்க டொலர் பெறுமதியானதுமான இந்த நவீன படகு மிக விரைவில் மொரிஷியஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கடந்த காலங்களில் சீநோர் நிறுவனம் போதிய கவனத்திற்கு உள்ளாகாமல் இருந்த போதிலும், தற்போதுள்ள மனித மற்றும்

பௌதீக வளங்களைப் பயன்படுத்தி இந்நிறுவனத்தை சர்வதேச மட்டத்திலான ஒரு கப்பல் கட்டும் தளமாக (Dockyard) மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என அமைச்சர்

இதன்போது தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது: "சீநோர் நிறுவனம் சர்வதேச சந்தையை வெற்றிகொள்ளக்கூடிய பாரிய ஆற்றலைக் கொண்ட ஒரு நிறுவனமாகும்.

நாட்டில் பயன்படுத்தப்படும் மீன்பிடிப் படகுகளில் பாரிய அளவிலானவை சீநோர் நிறுவனத்தினாலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

வருடாந்தம் இவ்வாறான பாரிய படகொன்று மாத்திரமே தயாரிக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, அந்த உற்பத்தித் திறனை இரண்டு மடங்காக அதிகரிக்க நாம் நடவடிக்கை

எடுத்து வருகிறோம். அண்மையில் மேற்கொண்ட நோர்வே விஜயத்தின் போது அந்நாட்டின் தொழில்நுட்ப உதவியைப் பெற்றுக்கொள்ள இணக்கம் காணப்பட்டதுடன், அடுத்த மாதம்

ஆரம்பத்தில் மேற்கொள்ளவுள்ள ஜப்பான் விஜயத்தின் ஊடாகவும் நவீன தொழில்நுட்பத்தையும் அறிவையும் சீநோர் நிறுவனத்திற்குப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறேன்."

சீநோர் நிறுவனத்தின் தலைவர் வசந்த மனப்பெரும இங்கு கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்குளி மற்றும் காரைநகர் ஆகிய இரு தளங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி

வருடாந்தம் 4 பாரிய படகுகளைத் தயாரிப்பதன் மூலம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை ஈட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சின் நான்கு வருடத் திட்டத்தின் கீழ், தற்போதைய 300 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை 600 மில்லியன் டொலர்களாக உயர்த்துவதற்கு சீநோர் நிறுவனம் பாரிய பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அமைச்சின் மற்றும் சீநோர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


Sri Lanka

இஸ்ரேலின் பிடியிலுள்ள சமீரா மஹ்பூப்தீனை விடுவிக்க ராஜதந்திர ஏற்பாடுகள் அவசியம் - வௌிவிவகார அமைச்சருக்கு ரிஷாட் எம்.பி.கடிதம்


இஸ்ரேலிய படைகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சமீரா மஹ்பூப்டீனின் எதிர்காலத்தில்  கூடுதல் கவனமெடுத்து, அவரை விடுவிப்பதற்கான ராஜதந்திர நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வௌிவிவகார அமைச்சர் விஜித்த  ஹேரத்தின் கவனத்துக்கு இவ்விடயத்தை கொண்டு வந்துள்ள அவர், இது குறித்து கடிதம்  ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளதாவது

காசாவுக்கான மனிதாபிமான உதவிகளுடன் துருக்கியிலிருந்து புறப்பட்ட படகுகளை  இஸ்ரேல்  கைப்பற்றி, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளது.

இந்தப் படகுகளில், எமது நாட்டைச் சேர்ந்த பெண்மணியும் உள்ளார். சுமார் 45 நாடுகளிலிருந்து  நானூறு மனிதாபிமான பணியாளர்கள் இப்படகுகளில் பயணித்திருந்தனர். மனிதாபிமானம் மற்றும் அமைதியான நோக்குகளுடன் மாத்திரமே இவர்கள் காசாவுக்கு புறப்பட்டனர். எவ்வித அசம்பாவித நோக்கங்களுமின்றி   பயணித்த இந்தப் படகுகள் காசாவிலிருந்து 250 கிலோமீற்றர்  தூரத்திலான கடற்பரப்பில், இடைமறிக்கப்பட்டன.

இவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், இதுவரைக்கும் எவ்வித தகவல்களையும் வௌியிடவில்லை. எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியாதுள்ளது. இதனால், இவர்களுக்கு ஏற்படவுள்ள பாரதூர  விளைவுகள் வௌிச்சத்துக்கு வந்துள்ளன. 

எமது  நாட்டைச் சேர்ந்த மனிதாபிமானப் பணியாளரான சமீரா மஹ்பூப்டீனின் எதிர்காலம் குறித்து எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இவரைத் தொடர்புகொள்வதற்கான எந்த வசதிகளும் இதுவரை செய்யப்படவில்லை. எனவே, சட்டரீதியான ஏற்பாடுகளுடன்  சமீரா மஹ்பூப்டீனை விடுவிப்பதற்கான ராஜதந்திர செயற்பாடுகளில்  அரசாங்கம் அவசரமாக ஈடுபட வேண்டும்.

இஸ்ரேலின் இவ்வாறான செயற்பாடுகள், மனிதாபிமானத்துக்கே கேடாக அமைந்துள்ளது. அமைதிச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது, மனிதாபிமானத்தை மலினப்படுத்துவதாகவே அமையும். இவ்வாறு ரிஷாட்பதியுதீன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SHAHNI RAMEES

பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டியின் சடலம் மீட்பு! #VIDEO


சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 79 வயதுடைய

Zameera

வனவாசல ரயில் விபத்தினால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 1.7 மில்லியன்


 வனவாசல ரயில் விபத்தின் காரணமாக ரயில்வே அமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 1.7 மில்லியன் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ் விபத்தினால் சுமார் 200 அடி நீளமுல்ல ரயில் தண்டவாளங்கள், ஸ்லீப்பர்கள் மற்றும் பிற ரயில் பிரிவுகள் சேதமடைந்ததாக ரயில்வே மற்றும் பொறியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சேதமான பகுதிகள் தற்போது புனரமைக்கப்பட்டுவிட்டதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ரயில்வே அமைப்பு, சமிக்ஞை அமைப்பு மற்றும் ரயில் பெட்டிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட மொத்த சேத மதிப்பீடு, அடுத்த சில நாட்களில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படும் என்று திணைக்களம் கூறியுள்ளது.


SHAHNI RAMEES

பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு எதிரான வழக்கு : பாதிக்கப்பட்ட சிறுமிக்காக சிரேஷ்ட சட்டத்தரணியை நியமிக்கக் கோரிக்கை!

 


அநுராதபுர நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள

SHAHNI RAMEES

சமீரா மெஹ்புப்தீனை பாதுகாப்பாக மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருவது குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தை!


 காஸா நோக்கிப் பயணமான 'குளோபல் சுமுத் புளோட்டிலா'

Sri Lanka

நாட்டில் கொள்கை ரீதியான தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் - கர்தினால் மெல்கம் ரஞ்சித்




அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் குறித்து தான் கடும் அதிருப்தியில் இருப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 


நீர்கொழும்பு பிட்டிபன மகா வித்தியாலயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 


அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 


"அரசியல்வாதிகளின் உலகில் இப்படியான விஷயங்கள்தான் நடக்கின்றன. இன்று ஒன்றைச் சொல்வார்கள், நாளை அதற்கு நேர்மாறான ஒன்றைச் செய்வார்கள். 


உதாரணமாக, கடந்த ஒரு அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஒருவர், தற்போது ஜனாதிபதி நீதிமன்றத் தீர்ப்புகளை அவரே அறிவிக்கத் தொடங்கியுள்ளார் என்றும், நீதிமன்றத்தை அவமதிக்கிறார் என்றும் கூச்சலிடுகிறார். 


அதே அமைச்சர், அன்று இருந்த அரசாங்கத்தின் மூலம் எமது முன்னாள் பிரதம நீதியரசரை பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவரது பதவியிலிருந்து பலவந்தமாக நீக்கினார். அந்த நேரத்தில் இந்த நபர் அதற்கு ஆதரவாக வாக்களித்தார். 


இப்போது வந்து இதில் தலையிடுகிறார்கள் என்று கூறுகிறார். இவ்வாறான இரட்டை கொள்கைகள் முன்னரும் வெவ்வேறு காலப்பகுதிகளில் இருந்தன. பாராளுமன்றத்தில் ஒரு பக்கத்தில் இருப்பவர்கள் மறுபக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து திருடர்கள், திருடர்கள், திருடர்கள் என்பார்கள். அந்தப் பக்கத்தில் இருப்பவர்கள் திரும்பிப் பார்த்து நீங்கள்தான் திருடர்கள், திருடர்கள், திருடர்கள் என்பார்கள். 


அப்படியென்றால் அனைவரும் திருடர்கள் தான். அவர்களே தாங்கள் திருடர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். இவ்வாறு சட்டத்தை சட்டவிரோதமாக்க முற்படுகிறார்கள். நீதிமன்றம் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான். 


ஆனால், அதனை அனைத்து அரசியல் கட்சிகளும் செய்ய வேண்டும். ஒரு தரப்பினர் அதனைச் செய்யாமல் இருந்துவிட்டு, பின்னர் மற்றைய தரப்பினரை அதைச் செய்யச் சொல்லித் திட்டுவது தவறான ஒன்றாகும். 


அது ஒரு பொய். அப்படிப் பொய் சொல்ல வேண்டாம். அரசியல் தலைவர்கள் தாம் அணியும் ஆடைகளுக்காவது குறைந்தபட்சம் மதிப்பளிக்க வேண்டும். எனவே, வெட்கமற்ற வேலைகளைச் செய்ய வேண்டாம். தான் செயல்படுத்தாத ஒரு கொள்கையைப் பற்றி இப்போது வந்து உபதேசம் செய்ய வேண்டாம். அது தவறு. 


துறவிகளை பாடசாலைகளின் தலைமைத்துவத்திற்கு நியமிக்குமாறு நாம் பல வருடங்களாக இந்த அரசாங்கங்களிடம் கூறி வருகிறோம். வெவ்வேறு அரசாங்கங்கள் துறவிகளுக்கும் மதகுருமார்களுக்கும் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து எங்களை ஏமாற்றின. 


இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களிடம் நாம் இந்தப் பட்டியல்களைக் கையளித்தோம். துறவிகள், கன்னியாஸ்திரிகள் மற்றும் குருமார்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்காக பட்டியலைத் தருமாறு எங்களிடம் கூறினார்கள். 


ஆனால், அந்த ஆசிரியர் நியமனங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனக்கு நினைவிருக்கிறது, மடு திருத்தலத்தில் வைத்து பின்னர் ஜனாதிபதியான ஒரு நபர், எனது முகத்தைப் பார்த்து ஒன்றரை மாதத்தில் இந்த ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாகக் கூறினார். 


அந்த ஒன்றரை மாதம் இன்றுவரை வரவில்லை. அந்த நபர் பின்னர் நாட்டின் ஜனாதிபதியாகவும் மாறினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எல்லாமே பொய்க் கதைகள். அரசியல் உலகம் குறித்து நாம் மிகவும் கசப்படைந்துள்ளோம். 


இந்த நடத்தை, இந்த வறுமை குறித்தே அவ்வாறு தோன்றுகிறது. கொள்கையற்ற, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத, பொய் சொல்லும், மற்றவர்கள் மீது சேறு பூசும், இப்படியான சமூகத்தை அசுத்தப்படுத்தும் கதாபாத்திரங்களால், அரசியல் நமக்கு வெறுத்துப் போகும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்." என்றார்.

Sri Lanka

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் திசை திருப்பப்படுகின்றன - நாமல் ராஜபக்ஷ!



கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், தற்போதைய அரசினால் தங்களின் அரசியல் தேவைகளுக்காக திட்டமிட்டபடி திசைதிருப்பப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (21) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிறைச்சாலையில் இருந்தபோது, அவரை சட்டபூர்வமாக, சிறைச்சாலை அதிகாரிகளின் முன்னிலையிலேயே தாம் பார்வையிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு இருக்கையில் மக்கள் பணத்தை வீணடித்துக்கொண்டு பிரான்ஸுக்குச் சென்று அவரை ரகசியமாக சந்திக்கவேண்டிய தேவை எமக்கோ அல்லது ராஜபக்ஷக்களுக்கோ கிடையாது என்றார்.

அவ்வாறான குற்றச்சாட்டுகள் மக்கள் பணத்தை வீணடிக்கும் ஒரு செயலாகும் என்றும் அவர் சாடினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான கோப்புகளை மூடிமறைத்த அதிகாரிகளுக்கு தற்போதைய அரசில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய நாமல் ராஜபக்ஷ, தாக்குதலை திட்டமிட்டு வழிநடத்தியவர்களின் பெற்றோர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி-யின்) தீவிர உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் என்பதுடன், தாக்குதல்காரரின் தந்தை ஜே.வி.பி யின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் என்பதும் வெளிப்படையானது என்றார்.

தாக்குதல் கோப்புகளை மூடிமறைத்தவர்களிடமே தற்போது விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டு, ராஜபக்ஷக்களையும் பிள்ளையானையும் இதில் தொடர்புபடுத்துவதற்காக பிரான்ஸுக்குச் சென்று வாக்குமூலங்களைப் பெறும் நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாகவும், இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளின் இறுதிப் பின்னணி ஜே.வி.பி-யிடமே இருப்பது தெளிவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய அவர், தேர்தல் காலங்களில் சர்வதேச நாடுகளின் தொடர்புகள் மற்றும் சான்றுகள் தம வசம் இருப்பதாகக் கூறியவர்கள், தற்போதைய தங்களது ஆட்சியில் ஏன் அந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

பொலிஸ் மற்றும் சட்டத்துறை அமைச்சுகள் தற்போது ஜே.வி.பி-யின் விருப்பத்துக்கு ஏற்பவே சட்டத்தை வளைத்து வருவதாகவும் அவர் சாடினார். இராணுவத்தினரை அவமதித்ததாக ராஜபக்ஷக்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், எல்.டி.டி.ஈ அமைப்பைத் தவிர, இலங்கையின் வரலாற்றில் ஜே.வி.பி-யினரே கடந்த காலங்களில் அதிகளவிலான இராணுவத்தினரை படுகொலை செய்தார்கள் என்பதை சுட்டிக்காட்டினார்.

தங்களின் அரசியல் தோல்விகளையும், இராணுவத்தினருக்கு இழைத்த அநீதிகளையும் மறைப்பதற்காகவே இராணுவத்தினர் குறித்து ஜே.வி.பி தற்போது நாடகமாடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்கள் குறித்து கவலை வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ, தற்போதைய நாடாளுமன்றம் ஒரு குறிப்பிட்ட கட்சியின் அலுவலகம் போல மாற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது வரப்பிரசாதங்கள் குறித்துப் பேசும்போது அவர் வெளியேற்றப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்ற சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்றும், தேசிய மக்கள் சக்தி  கட்சியின் சபாநாயகரைப் போல நடந்துகொள்ளக் கூடாது என்றும் தனது பேட்டியில் மேலும் வலியுறுத்தினார்.


Zameera

நாட்டில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம்


 நாட்டில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. 


இலங்கையில் பதிவாகும் மரணங்களில் சுமார் 34 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் நோய்களாலேயே நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அலகப்பெரும நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 


அங்கு மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர் ஸ்ரீனி அலகப்பெரும, 


"உயர் இரத்த அழுத்தம் இருப்பது பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால், குறைந்தது ஆறு மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதன் மூலம், அது அதிகரித்துள்ளதா என்பதை எம்மால் கண்டறிய முடியும். இலங்கையில் பொதுவாக நாட்டில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. இதில் 63.9 சதவீதமானோர் சிகிச்சை பெறுவதில்லை. மேலும், சிகிச்சை பெறுபவர்களில் 39.1 சதவீதமானோரின் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லை. அதிக உப்புள்ள உணவுகளை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும்" என்று குறிப்பிட்டார்.

Sri Lanka

சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் அர்ச்சுனா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் - ராமதாஸ்!


பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாட்டின் அரசியல்வாதியான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாக சுட்டிக்காட்டிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அர்ச்சுனா சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் அர்ச்சுனா, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை கடுமையாக சாடியிருந்தார். அதைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதியான ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

நம்முடைய தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள், தங்களின் அரசியல் உரிமை மற்றும் வாழ்வுரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாக பேரிழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள். அரசியல் பகுப்பாய்வு

போராட்ட காலங்களில் தமிழினம் பின்னடைவைச் சந்தித்ததற்கு சகோதர யுத்தங்களும் ஒற்றுமையின்மையுமே முதன்மைக் காரணம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது.

இத்தகைய சூழலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தம்பி சீமானை குறிவைத்து, “ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்” என பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்து, தரக்குறைவாகப் பேசியிருப்பது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது.

தமிழ்நாட்டில் தமிழ்ச் தேசிய அரசியல் வளர்வதைச் சகித்துக்கொள்ள முடியாத தீய சக்திகளின் ஏவலாளியாகச் செயற்பட்டு, தமிழர் ஒற்றுமையைக் குலைக்கத் துடிக்கும் இந்த துரோக அரசியலைத் தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது. அண்டை நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு பேசுவதைச் சம்பந்தப்பட்ட அரசுகள் வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது.

எனவே, ராமநாதன் அர்ச்சுனா தனது ஜனநாயக விரோதப் பேச்சினை உடனடியாகத் திரும்பப் பெற்று, தம்பி சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

Sri Lanka

சீனித் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!


இந்தியாவின் சீனி ஏற்றுமதித் தடை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக, நாட்டில் சீனி தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏற்படக்கூடும் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மே 15 முதல் செப்டெம்பர் 30 வரை இந்தியா சீனி ஏற்றுமதிக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ள நிலையில், பிரேசில், தாய்லாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.


பிரேசிலிலிருந்து சீனி இறக்குமதி செய்ய கொள்முதல் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாட தாமதங்கள் காரணமாக அவை நாட்டை வந்தடைய குறைந்தது இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியா சுத்திகரிக்கப்படாத சீனிக்கே தடை விதித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், சுத்திகரிக்கப்பட்ட சீனியை இறக்குமதி செய்வது செலவை அதிகரிப்பதுடன், நுகர்வோரை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.


இதற்கிடையில், இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக பால்மா, பருப்பு, பொதி செய்யப்பட்ட மீன், அரிசி வகைகள் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என்று சங்கம் எச்சரித்துள்ளது.


ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தால், அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்ள இறக்குமதியாளர்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டில் தற்போது சுமார் இரண்டு மாதங்களுக்குத் தேவையான சீனி கையிருப்பு உள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Sri Lanka

கொழும்பு தேசிய கலாபவனில் மாயமான 42 புராதன சின்னங்கள் - அமைச்சர் சுனில் செனவி


கொழும்பு தேசிய கலாபவனில் பாதுகாக்கப்பட்டிருந்த 42 புராதன சின்னங்கள் காணாமல்போயுள்ளதாக புத்தசாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலை கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வியாழக்கிழமை (21) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு தெரிவித்துள்ள அமைச்சர், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

Sri Lanka

செப்டம்பர் வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படப்போவதில்லை!


செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது. என துறைமுக, சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று (21) ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மூல வினாவுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.


கடைசியாக மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் நேரடி தாக்கம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கே ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய நுகர்வோருக்காக 15 பில்லியன் ரூபா மானியத்தை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இது குறித்து மேலும் விளக்கமளித்த அமைச்சர், "டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், மின்சாரக் கட்டணம் மேலும் உயருமா என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், இந்த விலை அதிகரிப்பின் நேரடி தாக்கம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே உள்ளது என்பதை நாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

மற்றவர்களின் சுமையை அரசாங்கம் 15 பில்லியன் ரூபாவை மின்சார சபைக்கு வழங்கி தாங்கிக்கொண்டுள்ளது. என்னால் ஒரு நேரடிப் பதிலைச் சொல்ல முடியும். செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு நாம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்க உத்தேசிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.