Our Feeds



Wednesday, June 10, 2026

Zameera

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 3 வாரத்திற்கு முன் சுரேஸ் சலே செய்த செயல்


 ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே, நீர்கொழும்பு பகுதிக்கு 5 பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட பூஜைக்கு கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை திரட்டியுள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் தெரிவித்தார்.


அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார் என்றும் குண்டுத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கியுள்ளார் என்றும் இந்த விடயங்கள் அனைத்தும் தீவிரமான விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

SHAHNI RAMEES

விமான ஓட்டுநர் உரிமம் இன்றி 900 வான்பயணங்களை மேற்கொண்ட விமானி கைது!

 

விமான ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி, 17 ஆண்டுகளுக்கும்
SHAHNI RAMEES

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்ய வேண்டாம்! - பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரிட் மனு தாக்கல்

 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில்
Zameera

ஷான் விஜயலால் கைது


 தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Zameera

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு: சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட ரவீந்திர விஜேகுணரத்ன



கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

Zameera

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை - பிரதமர்


 மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 


பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10) பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


மாகாண எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்று அதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியதன் பின்னரே தேர்தல் தினம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்க முடியும். 


தற்போதுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகள் காரணமாகவே தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில், குறித்த சட்டத்தை மாற்றி புதிய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதா? அல்லது அதில் திருத்தம் செய்து பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்துவதா? என்பது குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்றின் ஊடாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 


அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Zameera

ஏற்றுமதி வருமானம் பெறும் அனைவரும், மாதாந்த வருமானத்தில் எஞ்சியுள்ள தொகையை அடுத்த மாதம் 10ஆம் திகதிக்குள் இலங்கை ரூபாவாக மாற்றுவது கட்டாயம்


 இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில் எஞ்சிய தொகையை அடுத்த மாதத்தின் 10ஆம் திகதிக்கு முன்பதாகவோ அல்லது அன்றைய தினத்திற்குள்ளோ கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் மொத்த வருமானத்திலிருந்து, மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட கொடுப்பனவுகளுக்கு மட்டுமே நிதியைப் பயன்படுத்த முடியும். அவ்வாறு பயன்படுத்திய பின்னர் கணக்கில் எஞ்சியிருக்கும் தொகையை மாத்திரமே இவ்வாறு உள்நாட்டு நாணயமான இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது

Zameera

வனாதவில்லுவ பகுதியில் முந்திரி பறிக்கச் சென்றவர் சுட்டுக் கொலை


 வனாதவில்லுவ, கரதிவ் பகுதியில் உள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வனாதவில்லுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று (09) அதிகாலை இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் கல்லடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கரதிவ் பகுதியில் உள்ள பெருந்தோட்ட நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான முந்திரித் தோட்டத்தில் முந்திரி பறிக்கச் சென்றபோது, அங்குள்ள காவலாளிகளிடம் சிக்கியுள்ளார். இதன்போது அவர்கள் அவரைத் தாக்கி, ஏர் ரைபிள் எனச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த 8 காவலாளிகள் 4 ஏர் ரைபிள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட ஏத்தாலே, புத்தளம், கற்பிட்டி மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், வனாதவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Zameera

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்


 ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: ஓமான் கடற்பரப்பில் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சற்று நேரத்திற்கு முன்னர் இந்தத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஓமான் கடற்கரைக்கு அருகில் அமெரிக்க இராணுவத்தின் அபாச்சி ஹெலிகொப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது தற்காப்புக்காக நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரி ஒருவர், இந்தத் தாக்குதல்கள் ஈரானுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாக நடத்தப்பட்டதுடன், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தற்போது நிலவும் பேச்சுவார்த்தைகளுக்கு இது தடையாக இருக்காது என அமெரிக்கா நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டத் தாக்குதல்கள் மூலம் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் அமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகப் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் வெளிநாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஹெலிகொப்டர் திங்கட்கிழமையன்று ஈரானின் ஷாஹெட் (Shahed) ட்ரோன் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகப் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதுடன், அது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா அல்லது தற்செயலாக நடந்ததா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஹெலிகொப்டரில் இருந்த இரண்டு விமானிகளுக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், அவர்கள் அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன் படகு மூலம் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Zameera

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது


 ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த சங்கத்திற்கும், பிரதி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் விசாரணை நடத்தி தீர்மானமொன்றை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்ப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, இன்று(10) பயணிகள் ரயில் சேவைகள் வழமை போல் இயங்கும் எனவும், பயணிகள் எவ்வித தடையுமின்றி பயணிக்க முடியும் எனவும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இருப்பினும், சரக்கு போக்குவரத்து ரயில் ஊழியர்கள் மாத்திரம் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Zameera

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Tuesday, June 9, 2026

Zameera

களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் நாளை நீர்வெட்டு


 களுத்துறை உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை (10) 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய களுத்துறை, வாதுவ, மத்துகம, பேருவளை, அளுத்கமை, பயாகல ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் நாளை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை இடைநிறுத்தப்படவுள்ளது.

கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தடைப்படுவதன் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை ஏற்படுவதாக நீர் வழங்கல் சபை மேலும் தெரிவித்துள்ளது.


Admin

அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!


அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் இன்று (9) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 135 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் 128 மேலதிக வாக்குகளினால் நீடிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

விவாதத்தின் முடிவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான யாழ் மாவட்ட எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்புக்கோரினார்.

இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிப்பதற்கு ஆதரவாக 135வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து தமிழரசுக்கட்சியும் எதிராக வாக்களித்தது. அதனடிப்படையில் அவசரகால சட்ட நீடிப்பு 128 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் 82 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.