Our Feeds



Monday, June 22, 2026

Admin

8 மாதங்களின் பின் நடைபெற்ற மாநகரசபை அமர்வில் அமளிதுமளி ; சபை அமர்வு ஒத்திவைப்பு! - நடந்தது என்ன?



உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று (22) திங்கட்கிழமை நடைபெற்ற மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்பட்டது. 


வவுனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடைஉத்தரவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது. சபை உறுப்பினர்கள் இருவர் தாக்கல்செய்த வழக்கின் அடிப்படையில் அந்த உத்தரவு வழங்கப்பட்டது.


இந்நிலையில், குறித்த வழக்கு இன்னும் முடிவடையாத போதும் சபை மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.


இதனையடுத்து எட்டுமாதங்களாக முடக்கப்பட்டிருந்த சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், சபையின் அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது.


இதன்போது முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளமையால் அவர் தலைமையில் இக்கூட்டத்தை நடத்த அனுமதிக்க மாட்டோம். எனவே இதனை குழுநிலை விவாதமாக முன்னெடுக்குமாறு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் கோரினர். இதனால் சபையில் ஆளும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களிற்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு குழப்பத்துடன் சபை ஒத்திவைக்கப்பட்டது. 


முதல்வர் மீது ஊழல்குற்றச்சாட்டு உள்ளமையால் அவர் பதவி விலகவேண்டும். அவர் தலைமையில் சபை கூட்டத்தை நடாத்தவிடமாட்டோம். பதில் முதல்வர் ஒருவரை தெரிவு செய்யுங்கள். அல்லது இந்தக்கூட்டத்தினை குழுநிலை விவாதமாக நடாத்துங்கள். அத்துடன் மாநகரசபையின் அடிப்படை கட்டளைச்சட்டங்கள் மீறப்பட்டுள்ளது. பல வேலைத்திட்டங்கள் கட்டளை சட்டத்திற்கு அப்பாற்பட்டு நடைபெற்றுள்ளது என எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர். 


விசாரணை அறிக்கையானது சட்டரீதியாக வெளிவரும் வரை சபையை குழப்பவேண்டாம். வர்த்தமானியில் அது இன்னும் வெளியிடப்படவில்லை. முதல்வர் குற்றவாளி என்றால் அவரது பதவியினை ஆளுநர் இடை நிறுத்தியிருக்கலாமே.  ஏன் அவ்வாறு இதுவரை நடக்கவில்லை.


மக்கள் சபையை குழப்பாதீர்கள். மக்கள் பணி பாதித்துள்ளது. இங்கு அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டே நடந்துள்ளது. குற்றம் நடந்திருந்தால் முதல்வர் மீது நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட பின்னர் முதல்வரை மாற்றுங்கள் என ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர். 


இதனால் நீண்டநேரமாக சபையில் குழப்பநிலை ஏற்பட்டதுடன், கூட்டத்தை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது. 


இறுதியில் சபைஅமர்வு பத்து நிமிடங்கள் முதல்வரால் ஒத்திவைக்கப்பட்டு குழுநிலை விவாதமாக சபை அமர்வு தொடர்ச்சியாக நடைபெற்றது.


இதேவேளை மாநகரமக்களே விழிப்படையுங்கள், கட்டளைச்சட்டங்களை மீறவேண்டாம், சபையின் சொத்துக்களை விற்காதே போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் சபை மண்டபத்திற்குள் ஏந்தியிருந்தனர்.


மக்கள் சபையை குழப்பாதீர்கள். மக்கள் பணி பாதித்துள்ளது. இங்கு அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டே நடந்துள்ளது. குற்றம் நடந்திருந்தால் முதல்வர் மீது நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட பின்னர் முதல்வரை மாற்றுங்கள் என ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர். 


இதனால் நீண்டநேரமாக சபையில் குழப்பநிலை ஏற்பட்டதுடன், கூட்டத்தை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது. 


இறுதியில் சபைஅமர்வு பத்து நிமிடங்கள் முதல்வரால் ஒத்திவைக்கப்பட்டு குழுநிலை விவாதமாக சபை அமர்வு தொடர்ச்சியாக நடைபெற்றது.


இதேவேளை மாநகரமக்களே விழிப்படையுங்கள், கட்டளைச்சட்டங்களை மீறவேண்டாம், சபையின் சொத்துக்களை விற்காதே போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் சபை மண்டபத்திற்குள் ஏந்தியிருந்தனர். 

Admin

குர்ஆன் பிரதிகளை தடுத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்த மீளாய்வுக்குழு உடன் நீக்கப்பட வேண்டும் - SLTJ பொதுக்குழுவில் அரசுக்கு கோரிக்கை.

 



பிற கொள்கைகளைச் சார்ந்தவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து தன்னிச்சையாகச் செயல்படும் புத்தக மீளாய்வுக் குழுவை உடனடியாக நீக்க வேண்டும் என ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 11வது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


நேற்று 21.06.2026 கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே மேற்கண்ட தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

01. ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் சதி அம்பலமும்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலானது சில தரப்பினரின் குறுகிய அரசியல் இலாபத்திற்காக நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட சதி என்பதை இன்று நாட்டு மக்கள் நன்கு அறிந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, இத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டுவது அவசியமாகும். இதற்காக, முறையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை நடத்தி, இச்சதியின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

02. இனவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் இன ஒற்றுமை.

இனவாதிகள் மீண்டும் தலைதூக்கி, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தங்களின் வெறுப்புப் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். அதன் ஒரு கட்டமாக, அண்மையில் ஸஹ்ரானின் பழைய வீடியோ ஒன்றையும் சமூக ஊடகத் தளங்களில் பரப்பி மலிவான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையாளர்களையும் அவர்களின் சிந்தனைகளையும் முழுமையாகப் புறக்கணித்து, இவ்வாறான இனவாதிகளுக்கு எதிராகச் சட்ட ரீதியாகத் தக்க பதிலடி கொடுத்து, நாட்டில் மீண்டும் இனவாதம் பரவாமல் தடுக்க வேண்டும். அத்துடன், இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான சூழலை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என இப்பொதுக்குழு வேண்டிக்கொள்கிறது.

03. போதைப்பொருள் ஒழிப்புக்கான ஒத்துழைப்பும் பிரச்சாரமும்.

இன்று நாட்டில் போதைப்பொருள் பல வடிவங்களில் ஊடுருவி, இளையசமுதாயத்தைச் சீரழித்து வருகின்றது. அதனை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் அனைத்துச் சட்டரீதியான முயற்சிகளுக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். அதேவேளை, இந்த நாட்டில் இருந்து போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்பதற்காக, ஜமாத் சார்பாகத் பிரச்சாரப் பணிகளைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பது என்றும் இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

04. மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தலும், புத்தக மறுஆய்வுக் குழுவை நீக்குதலும்.

இலங்கையில் வாழும் அனைத்துக் கொள்கைகளைச் சார்ந்த மக்களுக்கும் தங்களின் மதச் சுதந்திரத்தை எவ்விதத் தடையுமின்றி அனுபவிப்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். சவூதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அல்குர்ஆன் மொழி பெயர்ப்பு பிரதிகளை விடுவிக்காமல் தடை விதித்துள்ள 'மீளாய்வுக் குழுவின்' (Review Committee) செயல்பாடு ஒருதலைப்பட்சமானது என்பது நிரூபணமாகியுள்ளது.

பிற கொள்கைகளைச் சார்ந்தவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து தன்னிச்சையாகச் செயல்படும் இந்த மறுஆய்வுக் குழுவை உடனடியாக நீக்க வேண்டும் என அரசாங்கத்தை இப்பொதுக்குழு உறுப்பினர்கள் மிக அழுத்தமாகக் கேட்டு கொள்கிறது.


Zameera

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளது. 


இதன் ஆரம்ப நிகழ்வு, நாளை (18) பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொள்ள உள்ளார். 


மேலும், வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள எதிர்பார்ப்பதோடு, அவர்கள் கொழும்பிலிருந்து சிறப்பு புகையிரதம் மூலம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி தேரர்களின் அனுசாசனையுடன் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட “சிறி தலதா வழிபாடு” நாளை முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும். 


ஆரம்ப நாளான நாளை (18) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், பக்தர்களுக்கு “தலதா” புனித தந்த தாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நாளை மறுநாள் (19) முதல் தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும்.

 

Zameera

இலங்கைக்கு கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்




 தமிழகம் - இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 45 லட்சம் இந்தியா ரூபா மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகளை பொலிஸார் நேற்று (21) பறிமுதல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 


ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்தவிருப்பதாக மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. 


இதையடுத்து, பொலிஸார் மண்டபம் வடக்கு துறைமுக கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். 


அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த ஒரு இடத்தை சோதனை செய்த போது, அங்கு 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மா்ம நபா்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 


இவற்றை இலங்கைக்குக் கடத்த மறைத்து வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். 


மேலும், கைப்பற்றப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளின் மதிப்பு ரூ. 45 லட்சம் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனா். 


இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மண்டபத்தில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளிடம் பொலிஸாா் ஒப்படைத்தனா்.


Zameera

இலங்கை எப்போதும் நடுநிலையாகவும், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவும் செயற்படும் - விஜித ஹேரத்


 இலங்கை எப்போதும் நடுநிலையாகவும், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவும் செயற்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 


தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் எஸ். போல் கபூருடன் (S.Paul Kapoor) அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 


இக்கலந்துரையாடலின் போது, அமெரிக்கா இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காக அமைச்சர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். 


மத்திய கிழக்கில் நிலவிய யுத்த சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கைக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வழங்கிய ஆதரவிற்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். 


அத்துடன், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கடல்சார் ரோந்துப் படகுகள் மற்றும் விமானங்களுக்காகவும் அரசாங்கத்தின் நன்றியறிதலை அமைச்சர் இங்கு சமர்ப்பித்தார். 


இலங்கையில் பாதுகாப்பான மற்றும் முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க முதலீட்டாளர்களை இலங்கையில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்த அமைச்சர், அதற்கான வசதிகளை வழங்க அரசாங்கம் ஆர்வத்துடன் செயற்பட்டு வருவதாகவும் போல் கபூரிடம் தெரிவித்தார். 


இதன்போது கருத்துத் தெரிவித்த அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை தாம் பெரிதும் மதிப்பதாகக் குறிப்பிட்டார். 


இந்த சந்திப்பின் போது, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அமெரிக்க - ஈரான் ஒப்பந்தம் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், அந்த ஒப்பந்தத்தின் வெற்றிக்காக அமைச்சர் விஜித ஹேரத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 


மேலும், எதிர்வரும் ஜூலை 04ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் அமைச்சர் விஜித ஹேரத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

Zameera

ஆனந்த விஜேபாலவுக்கு எதிரான மனு மீதான விசாரணைக்கு அனுமதி


 பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக 'அத தெரண' நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார். 


பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றி வருவதாகவும், எனவே அரசியலமைப்பின் பிரகாரம் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகைமையற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Zameera

1069 டெங்கு ​நோயாளர்கள் அடையாளம்


 கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். 


இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,037 ஆக அதிகரித்துள்ளது. 


இதுவரை 28 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.


 


சாதாரணமாக நாட்டில் நாளாந்தம் 150 முதல் 200 வரையான டெங்கு நோயாளர்களே பதிவாவதாகவும், தற்போதைய ஆபத்தான சூழ்நிலையுடன் அண்மைய நாட்களாக நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 600 முதல் 650 வரை அதிகரித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


இந்த சூழலிலேயே நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளது. 


நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், இந்த நிலைமையை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என வைத்தியர் கபில கன்னங்கர மேலும் வலியுறுத்தியுள்ளார். 


இதற்கு மேலதிகமாக, நோயாளர்களைக் கவனித்துக்கொள்வதில் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சுகாதார ஊழியர்களும் தற்போது கடுமையான மன மற்றும் உடல் ரீதியான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியர் கபில கன்னங்கர கூறினார். 


இந்தக் கடுமையான அழுத்தமான சூழ்நிலை காரணமாக, எதிர்காலத்தில் நோயாளர்களின் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Zameera

இலங்கை அச்சக மற்றும் வர்த்தகக் கண்காட்சியை பார்வையிட்டார் ரணில்


 இலங்கை அச்சகத்தார் சங்கம் ஏற்பாடு செய்துள்ள 'இலங்கை அச்சக மற்றும் வர்த்தகக் கண்காட்சியை சங்கத்தின் தலைவர் ஜனக ரத்னகுமாரவுடன் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை  முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க பார்வையிட்டார்.


(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)

Zameera

பிரிட்டன் பிரதமர் இராஜிநாமா


 பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

ஆளும் தொழிலாளர் கட்சியில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில் இந்த இராஜிநாமா இடம்பெற்றுள்ளது.

Zameera

கடந்த ஆண்டில் அரிசி இறக்குமதி 40.7 % சதவீதத்தால் அதிகரிப்பு


 கடந்த ஆண்டில் (2025) இலங்கைக்கு ஒரு இலட்சத்து எண்பத்து நான்காயிரத்து எழுநூற்று ஐம்பது (184,750) மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40.7 சதவீத அதிகரிப்பாகும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 2025 ஆம் ஆண்டுக்காக வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த அரிசி இறக்குமதி ஒரு இலட்சத்து முப்பத்தோராயிரத்து முந்நூற்று முப்பத்தெட்டு (131,338) மெட்ரிக் தொன்களாகும்.


அத்துடன், 2025 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த நெல் உற்பத்தி ஐம்பது இலட்சத்து ஐம்பத்து மூன்றாயிரத்து அறுநூற்று தொண்ணூற்றெட்டு (5,053,698) மெட்ரிக் தொன் வரை 7.6 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலைமையின் கீழ் சந்தையில் அரிசி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், நெல் சந்தைப்படுத்தல் சபை 2025 ஆம் ஆண்டில் 19,633 மில்லியன் ரூபாய் தொகையைச் செலவிட்டு விவசாயிகளிடமிருந்து 162,257 மெட்ரிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்துள்ளது.



정부가 2025 ஆம் ஆண்டில் விவசாயத் துறைக்காக மேற்கொண்ட செலவீனம் 142 பில்லியன் ரூபாயாகும் என்பதுடன், 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீத அதிகரிப்பாகும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Zameera

வைத்தியசாலை வளாகத்தில் தன்னையும் பிள்ளைகளையும் கண்காணிக்கப்பட்டதாக சலேவின் மனைவி முறைப்பாடு


 முன்னாள் புலனாய்வுத் துறை அதிகாரி சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே, தன்னையும் தனது இரு பிள்ளைகளையும் சந்தேகத்திற்கிடமான வகையில் கண்காணித்து வருவதாகக் கூறி, குற்றங்களில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சிவில் உடையணிந்த நபர் ஒருவர், தொடர்ச்சியாக தங்களைப் பின்தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த 20ஆம் திகதி, தங்களது தந்தையின் நலம் விசாரிப்பதற்காக தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்த தனது 17 வயது மகளையும் 22 வயது மகனையும் குறித்த நபர் பின்தொடர்ந்து சென்று, கைத்தொலைபேசியில் புகைப்படங்கள் அல்லது காணொளிகள் பதிவு செய்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், இதற்கு முன்னரும் தேசிய வைத்தியசாலை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திற்கு அருகில் அந்த நபர் நடமாடியதை கவனித்துள்ளதாக மனோரி சலே தெரிவித்துள்ளார்.


இந்தச் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபரின் அடையாளத்தையும், அவர் யாரின் அறிவுறுத்தலின் பேரில் செயற்பட்டார் என்பதையும் கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய அதிகார சபையிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Zameera

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது



இணையவழி பணப் பரிமாற்ற முறைகள் மூலம் வங்கித் கணக்குகளுக்குப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கல்கிசை மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. 


நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் முன்னெடுத்த விசாரணையின் போது கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 


இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோகிராம் 34 கிராம் ஹேஷ்​ போதைப்பொருள், 7 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 8 கிராம் 860 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 


இவற்றுக்கு மேலதிகமாக, போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 351,200 ரூபாய் பணமும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளன. 


நீர்கொழும்பு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Zameera

23,000 தாதியர் பற்றாக்குறை ; சேவையில் கடும் அழுத்தம்


 நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால், தாதியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. 


தாதியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கமும் சாதகமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக அதன் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். 


தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தற்போதைய வைத்தியசாலை கட்டமைப்பில் சுமார் 23,000 தாதியர்களுக்கும், சுமார் 14,000 கனிஷ்ட ஊழியர்களுக்கும் வெற்றிடங்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டினார். 


இவ்வாறானதொரு சூழ்நிலையில், தாதி ஒருவருக்கு இரண்டு தாதியர்களின் வேலைப் பழுவை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 


சில சந்தர்ப்பங்களில் தாதியர்கள் தொடர்ந்து பல நாட்கள் பணியாற்ற வேண்டியிருப்பதால் தாங்க முடியாத வேலைப் பளு உருவாகியுள்ளதாகவும், அண்மையில் கிண்ணியா வைத்தியசாலையில் ஏற்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த நிலைமையே பிரதான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 


தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை உடனடியாக தயாரிக்காவிட்டால், வைத்தியசாலை கட்டமைப்பு மேலும் வீழ்ச்சியடையும் என தென்னே ஞானானந்த தேரர் எச்சரித்துள்ளார்.