Our Feeds



Monday, May 18, 2026

Zameera

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் வெளிநாட்டவர் கைது


 கொள்ளுப்பிட்டி நிமல்கா கார்டன் பகுதியில் தீர்வை வரி இன்றி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 540 சிகரெட்டுகளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


இவ்வாறு கைதானவர் 35 வயதுடைய சீன நாட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Zameera

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்


 மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 


அநுராதபுர மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 


ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Sunday, May 17, 2026

Zameera

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு




 (இராஜதுரை ஹஷான்)


பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ஆக்கப்பட்ட இந்த சட்டமூலம், கடந்த வெள்ளிக்கிழமை (15) அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.



2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கும், அது தொடர்பான அல்லது அதற்கு அனுகூலமான விடயங்களுக்கான ஏற்பாடுகளை வழங்குவதற்காகவும் இந்தச் சட்டமூலம் ஆக்கப்பட்டுள்ளது.


'2026 பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்கும் சட்டம்' என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் மூலம், பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி நீக்கப்படும்.


இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் நாள் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை வகிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன், அந்தப் பதவியை வகிக்கும் நபர் ஆயுதப் படைகளில் அவர் சார்ந்த சேவைப் பிரிவிற்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும்.


இச்சட்டம் அமலுக்கு வருவதோடு, பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும், பாதுகாப்பு விடயம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சரின் அமைச்சுக்கு மாற்றப்பட வேண்டும் என அந்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ShortNews

கம்பளையில் சோகம்: பரண் உடைந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு!


கம்பளையில் சோகம்: பரண் உடைந்து

Zameera

தற்போதைய அநுர அரசாங்கத்திடம் திட்டமிடலும் ஆற்றலும் இல்லை - சீலரத்ன தேரர்


 (க.சிவலிங்கமூர்த்தி)


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எந்தவித உடல்நல பிரச்சினையும் இன்றி இளம் மனிதரைப் போல சுறுசுறுப்பாக உள்ளார். மூன்று தசாப்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவர்களின் காலத்தில் யுத்த வெற்றி நினைவேந்தல்கள் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டன. ஆனால் தற்போதைய அநுர அரசாங்கத்திடம் அத்தகைய திட்டமிடலும் ஆற்றலும் இல்லை என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து நலம் விசாரித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


மூன்று தசாப்தங்கள் நீடித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவராக மகிந்த ராஜபக்ஷவை இந்த நாட்டின் மக்கள் நினைவுகூருகின்றனர். இன்று வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசியல்வாதிகள் சுதந்திரமாக சென்று தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்கும் மக்கள் அச்சமின்றி பயணிப்பதற்கும் காரணம் அக்காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களே.


யுத்த வெற்றி நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு திட்டமிடல் அவசியம். மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தலைவர்கள் இருந்த காலத்தில் மே 18 ஆம் திகதியை எவ்வாறு அனுசரிக்க வேண்டும் என்பது தொடர்பில் முன்கூட்டியே திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போதைய அரசாங்கத்திடம் அத்தகைய ஆற்றல் இல்லை. தேசிய நிகழ்வுகளை நடத்துவதற்கும் உறுதியான நிர்வாக திறன் தேவைப்படுகிறது.



தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதிகளின் அனுபவங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா பண்டாரநாயக்க உள்ளிட்ட தலைவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது நாட்டிற்கு பயனளிக்கும். முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவையும் சந்தித்து நலம் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். யுத்தத்தில் பங்களித்த அனைவரின் சேவைகளும் மதிக்கப்பட வேண்டும். அதேவேளை பயங்கரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதி என்பது பயங்கரவாதியே.


நாமல் ராஜபக்ஷ தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்கிறார். அவர் நல்ல செயல்களை மேற்கொண்டால் அவற்றை பாராட்ட தயக்கம் இல்லை. ஆனால் மக்களிடையே சென்று அவர்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு செயல்பட வேண்டும். சமூக ஊடகங்கள் ஊடாக சில புத்த பிக்குகள் மற்றும் மதத் தலைவர்களுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.அரசியல் பகுப்பாய்வு


குறிப்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் சமூக ஊடகங்களில் தீர்ப்பளிப்பது தவறான செயல். பின்னர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் அவதூறு பரப்பியவர்கள் சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். நாட்டை பாதுகாக்கவும் நல்ல தலைவர்களை உருவாக்கவும் பிக்குகள் முக்கிய பங்காற்றியுள்ளனர். மத அமைப்புகளை பலவீனப்படுத்தும் முயற்சிகள் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.      

SHAHNI RAMEES

BREAKING: துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்டவில்லை!



இன்று நாட்டின் எப்பாகத்திலும் புனித

SHAHNI RAMEES

டித்வா நிவாரண மோசடி - கிராம சேவகர் இடமாற்றம்

 


மொனராகலை மாவட்டத்தில் டித்வா இழப்பீட்டு

SHAHNI RAMEES

(CASA 7s) ரக்பி தொடரில், சேம்பியன் பட்டங்களை வென்ற இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகள்!

 




உஸ்பெகிஸ்தான் - தஷ்கண்ட் நகரில் நடைபெற்ற
SHAHNI RAMEES

மேல் மாகாண ஆளுநர் பதவி விலக முடிவு!

 




மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து

Zameera

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராட சென்ற மூவரின் சடலங்கள் மீட்பு




 விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. 


இன்றைய (17) தினம் தெல்தெனிய - பம்பரகல விகாரைக்கு அருகில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர். 

அவர்கள் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

இதனையடுத்து பிரதேச மக்களுடன் பொலிஸார் இணைந்து தேடுதல் நடத்திய நிலையில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Zameera

ரயில் பாதையின் பாகங்களை அகற்றியவருக்கு விளக்கமறியல்




 வனவாசல மற்றும் களனி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் பாகங்களைக் கழற்றிய சந்தேக நபரும், அந்தப் பாகங்களை கொள்வனவு செய்த நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இதன்படி அவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


 


நேற்று (16) அதிகாலை களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் ஒன்று விபத்துக்குள்ளானது. 


இரண்டு ரயில் பாதைகளுக்கு இடையே ரயில்களைப் பாதை மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் 'பொய்ண்ட்' பகுதியின் இரும்புகளை அகற்றியமையே இந்த விபத்துக்குக் காரணம் என ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார். 


பேலியகொட பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த ரயில் பாதையின் பாகங்களைக் கழற்றிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். 


இவர் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த இரும்புப் பாகங்களை 3 ஆயிரம் ரூபாய்க்கு கொள்வனவு செய்த மற்றுமொரு நபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zameera

வனவாசல ரயில் விபத்து: தண்டவாள பாகங்கள் ரூ.3000க்கு விற்பனை


 வனவாசல ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில் கழற்றப்பட்ட தண்டவாளப் பாகங்கள் 3,000 ரூபாய் பணத்திற்காகவே விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்த இடம் அடையாளம் காணப்பட்டு அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாண வட பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக, ரயில் தண்டவாளத்தின் ஆணைகளைக் கழற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் வெளிவந்த தகவல்களின் அடிப்படையிலேயே, பொருட்களைக் கொள்வனவு செய்த நபரைக் கைது செய்ய முடிந்ததாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

ரயில் தண்டவாளப் பாகங்களைக் கழற்றிய நபர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், அவர் 25 வயதுடைய ஒரு இளைஞர் எனவும் காலிங்க ஜயசிங்க தெரிவித்தார்.

வனவாசல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்து குறித்துத் தெளிவுபடுத்துவதற்காக இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமைக்கு மேலதிகமாக, இந்த விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நட்டங்கள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க இங்கு குறிப்பிட்டார்.

இந்தப் பாகங்களைக் கழற்றி விற்பனை செய்வதன் மூலம் மிகக் குறைந்த லாபமே கிடைத்த போதிலும், இவ்வாறான சம்பவங்கள் ஊடாக மில்லியன் கணக்கிலான நட்டங்கள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, திருடப்பட்ட பொதுச் சொத்துக்களைத் தெரிந்தே கொள்வனவு செய்தமைக்காக, அந்தப் பொருட்களை வாங்கிய நபருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்படும் என அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மேல் மாகாண வட பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க:

"திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுதல் மற்றும் திருடப்பட்ட பொருட்களைத் தம்வசம் வைத்திருத்தல் ஆகிய இரு விடயங்கள் தொடர்பாகவும் வழக்குத் தொடரப்பட வேண்டும். இவ்வாறான கொள்வனவுகளைச் செய்யும் நபர்களைக் கைது செய்து சட்டம் நிலைநாட்டப்படும். சில வேளைகளில், திருடப்பட்ட பொருட்களைக் கொள்வனவு செய்து, அவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட பின்னர், ஒன்று அவர்கள் குற்றவாளிகளாக மாறுவார்கள் அல்லது பிணை வழங்கப்பட்டு வெளியே வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன, அது சட்ட நடைமுறை. ஆனால் நாங்கள் கைது செய்வதனையும் வழக்குத் தொடரும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். இந்தச் சம்பவத்தில், ஏற்பட்ட சொத்துச் சேதங்கள் மற்றும் உயிரிழப்பு அபாயங்கள் குறித்தும் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்."

SHAHNI RAMEES

IMF: இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியுதவி!


 சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை மதிப்பீடு செய்வதற்காக எதிர்வரும் மே 27ஆம் திகதி கூடவுள்ளது.


இந்த இரு மீளாய்வுகளும் நிறைவேற்றுச் சபையினால் வெற்றிகரமாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான அடுத்த கட்ட நிதி உதவி விடுவிக்கப்படும்.


முன்னதாக, கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் இந்த மீளாய்வுகள் தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.


இதற்கமைய, இந்த நிறைவேற்று சபை கூட்டத்திற்கு முன்னதாக மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான செலவை ஈடுசெய்யக்கூடிய விலையிடலை மீள நிலைநிறுத்துதல் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிதி உத்தரவாதங்களை உறுதிப்படுத்துதல் போன்ற சில முக்கிய முன் நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.


இந்த மதிப்பீடு வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், 4 ஆண்டுகால விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கும் மொத்த நிதி உதவி சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.