Our Feeds



Wednesday, May 6, 2026

Zameera

மலைய மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தற்போது மறந்துள்ளது - சஜித் பிரேமதாச


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


மலைய மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தற்போது மறந்துள்ளது. அதனால் மலையக தோட்டத் தொழிலாளர்களின் காணிப் பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


அரசாங்கம் மலையக மக்களுக்கு வேண்டியளவுக்கு வாக்குறுதிகளை வழங்குகின்றது. இந்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் தோட்டமொன்றில் காணி, இருப்பிடம் இல்லாத மலையக பிரஜையொருவர் சிறிய கூடாரமொன்றை அமைத்தார் என்பதற்காக அந்த தோட்டத்தின் பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து விரட்டியடித்து, அந்த கூடாரத்தை அகற்றியுள்ளனர்.


லயன் அறைகளில் வாழ்க்கை நடத்தும் மலையக மக்கள் நாட்டுக்கு தேவையான அந்நிய செலாவணியை கொண்டுவருவதற்கு பெரும் அர்ப்பணிப்பை செய்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் வழங்கிய வாக்குறுதிகள், அவர்களுடனான சமூக உடன்படிக்கைகள் உங்களுக்கு மறந்துள்ளது. ஆனால் எமது அரசாங்கத்தில் மலையக மக்கள் உள்ளிட்ட வளங்கள் இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு தரிசு காணியில் அபிவிருத்தியுடன் சிறிய தேயிலை தோட்டங்களின் உரிமையாளர்களாக சமூகத்தில் வாழக்கூடிய வாய்ப்பை வழங்க எதிர்பார்க்கின்றோம்.



இதனால் வீடு இல்லாத மக்கள் எங்காவது தோட்டத்தில் கூடாரத்தை அமைப்பதை கரிசனையுடன் சிந்தித்து அவர்களின் காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை என்பதனை நினைவுபடுத்துகின்றோம். 


அதேவேளை, தற்போதைய அரசாங்கம் எவ்வேளையிலும் தமது பலவீனம், கவனயீனம் மற்றும் முடியாமை காரணமாக ஏதேனும் தவறு நடந்தால் அதன் பொறுப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் சிறிய நல்லது நடந்தால் அதற்கான பொறுப்பையும் கௌரவத்தையும் ஏற்றுக்கொள்ளும். இந்நிலையில் ஏதாவது தவறு நடந்தால் அதன் பொறுப்பை அதிகாரிகள் மீது சுமத்திவிடும்.


அத்துடன் எமது நாட்டின் அரச சேவையானது பெலவத்தை முறைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. தமக்கு ஆதரவானவர்களை நியமித்துக்கொண்டு, அவர்களின் தகுதிகள் தொடர்பில் ஆராயாமல் நியமனங்களை வழங்குவதால் நிர்வாகத்துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்படுகின்றது. 2025 நவம்பர் 14ஆம் திகதியளவில் 2.5 மில்லியன் டொலர் தொடர்பில் 4 கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளன. வருட இறுதி கணக்குகளை பேணுவதை முறையாக செய்திருந்தால் இதன் குறைபாடுகளை கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அரசியல் மயப்படுத்தப்பட்டவர்கள் இந்த அரச சேவைக்குள் புகுத்தப்பட்டுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டுக்கு தேவையான வளங்களை இழக்கும் நிலைமை உருவாகியுள்ளது.


இந்த பொறிமுறை வீழ்ச்சியில் அரச துறையில் தமக்கு சார்பான, தமக்கு தேவையானவர்களை நியமிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். எந்த காரணத்திற்காகவும் அரசியல் சவால்களுக்கு அரச சேவையாளர்கள் அடிபணியக்கூடாது. எங்களுக்கு அரச சேவையாளர்களின் உயிர்கள் முக்கியமாகும். தூய்மையான அரச சேவையை பாதுகாக்க நாங்கள் முன்னிற்போம் என்பதனை கூறிக்கொள்கின்றோம் என்றார். 

Zameera

குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு ஜூன் 17 இல் விசாரணை


 ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 17 ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ரஷாந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், வழக்கு விசாரணைக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் இரண்டு வாரங்களுக்குள் பிரதிவாதி தரப்பிற்கு வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, முதற்கட்ட வழக்கு விசாரணையை நிறைவு செய்த நீதவான், ஜூன் மாதம் 17 ஆம் திகதி வழக்கு விசாரணையை ஆரம்பிப்பதாக உத்தரவிட்டார்.

அன்றைய தினம் வழக்கின் இரண்டு சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

2016 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் மற்றும் இறக்குமதி பிரிவின் மேலாளராக பணியாற்றிய போது, ஹுனுபிட்டிய களஞ்சிய வளாகத்தில் தார் இடுவதற்கான கொள்முதல் நடவடிக்கையின் போது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாகச் செயற்பட்டு, அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதன் மூலம் "ஊழல்" எனும் குற்றத்தைச் செய்ததாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


 

SHAHNI RAMEES

வித்யா படுகொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனை உறுதியானது.

 

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை

Zameera

வடக்கு, கிழக்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வேண்டும் : சாணக்கியன்


 இராஜதுரை ஹஷான்


வடக்கு, கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு வழங்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்

இன்று (6) பாராளுமன்றத்தில் இவ்வாறு கூறிய சாணக்கியன், தீர்வு வழங்காவிட்டால், அரசாங்கத்துக்கு எதிராக  விவசாயிகள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள். நாங்கள் அந்த போராட்டத்துக்கு ஆதரவளிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Zameera

போலி வைத்தியர் கைது


 பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குருநாகல், பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபராவார்.

பொலன்னறுவை தீப உயன அருகில் வைத்து நேற்றிரவு (05) குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பொரளை, கண்டி, மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய ஆகிய பொலிஸ் நிலையங்களால் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த நபர் என்பது ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த போலி வைத்தியரிடமிருந்து வைத்தியர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப், வைத்தியர்களுக்கான சீருடை மற்றும் போலி அடையாள அட்டை உள்ளிட்ட பல உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹிங்குரக்கொடை வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் வைத்தியராக சந்தேக நபர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று (06) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

SHAHNI RAMEES

VIJAY-க்கு கண்டிஷன் போட்டு CONGRESS எடுத்த முடிவு!

 

​கூட்டணி நிபந்தனை: பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி
SHAHNI RAMEES

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்: 26 பேர் பலி


உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும்

SHAHNI RAMEES

கள்ளக்காதலனின் பசிக்கு மகளைப் இரையாக்கிய கொடூர தாய்!

 

தனது கள்ளக்காதலன் மகளைத் துஷ்பிரயோகம் செய்தமையை
Zameera

பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கைது


கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீனட்டியன பகுதியில் கெஹெல்பத்தர விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் T-56 ரக தோட்டாக்கள் மற்றும் மெகசீனுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட 54 தோட்டாக்கள் மற்றும் மெகசீன் ஆகியவை வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒரு குற்றவாளிக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கட்டுநாயக்க பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

Zameera

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்


 சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 


இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், 


மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். 


மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்). 


மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்). 


மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள். 


மு.ப. 11.30 - பி.ப. 5.30 மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு. 


அதன் ​நேரடி ஔிப்பரப்பை கீழே காணலாம்,

Zameera

இன்றைய வானிலை முன்னறிவிப்பு


 நாட்டை சூழவுள்ள அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும் அதனுடன் இணைந்ததாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலையும் காரணமாக, இன்று (06) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் மேகமூட்டமான வானிலை காணப்படுவதுடன், காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Zameera

மாலைதீவு ஜனாதிபதி நாடு திரும்பினார்


 மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு, இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Zameera

இலங்கை–மாலைதீவு வர்த்தக மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் மே மாதம் 05ஆம் திகதி நடைபெற்ற 'இலங்கை – மாலைதீவு வர்த்தக மாநாடு 2026' நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

மாலைதீவு குடியரசின் பொருளாதார அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் வர்த்தக அமைச்சினால் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் மாநாடுகளின் வரிசையில் 10ஆவது மாநாடாக இது அமைந்தது. 

இரு நாடுகளையும் சேர்ந்த அரச பிரதிநிதிகள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஒன்றிணைத்த இம்மாநாட்டில், பிரதான முதலீட்டு வாய்ப்புகள், கொள்கை ரீதியான ஊக்குவிப்புகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை எளிதாக்கி நீண்டகால பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இம்மாநாட்டின்போது, இலங்கைக்கும் மாலைதீவு குடியரசுக்கும் இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு, பொருளாதார ஒத்துழைப்பு, புத்தாக்கம் மற்றும் மூலோபாயக் கூட்டுறவு ஆகியவற்றைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இங்கு விசேட உரை நிகழ்த்திய பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொதுவான கலாசார மரபுகள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நீண்டகால ஒத்துழைப்பு ஆகியவற்றில் வேரூன்றியுள்ள இலங்கை - மாலைதீவு இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான நட்புறவு மற்றும் வலுவான இருதரப்பு உறவைச் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா, வர்த்தகம், மீன்பிடி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய முக்கிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கிய பிரதமர், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் இலங்கையுடன் இணைந்து செயற்படுமாறு மாலைதீவு வர்த்தக சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்தார். 

இத்தகைய ஈடுபாடுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உற்பத்தித்திறன் மிக்க, பரஸ்பர நலன் பயக்கக்கூடிய, நீண்டகால நம்பகமான நட்புறவைப் பேண வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை - மாலைதீவு வர்த்தக மாநாடு 2026 ஆனது, இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் பொருளாதார உறவுகளை உறுதிப்படுத்துவதுடன், நீண்டகால மற்றும் இருதரப்புக்கும் நன்மை பயக்கும் கூட்டுறவை வளர்ப்பதற்கான பொதுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

இம்மாநாட்டில் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தனியார் துறைப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.