Our Feeds



Monday, August 10, 2026

ShortNews

நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிர பரவல் - 89,639 பேர் பாதிப்பு, உயிரிழப்புகள் 65 ஆக அதிகரிப்பு!



நாட்டில் நடப்பு ஆண்டில்  இதுவரை நிலவும் காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாதாந்தத் தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், ஜனவரி மாதத்தில் 7,866 பேரும், மார்ச் மாதத்தில் 6,013 பேரும், பிப்ரவரி மாதத்தில் 5,721 பேரும், ஏப்ரல் மாதத்தில் 5,651 பேரும் இனங்காணப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் 4,292 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாகாண ரீதியான தரவுகளின்படி, நாட்டின் மொத்த நோயாளர்களில் 52.93% பங்களிப்புடன் மேல் மாகாணமே மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு 47,445 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாகத் தென் மாகாணத்தில் 13,302 பேரும், மத்திய மாகாணத்தில் 7,971 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 7,383 பேரும், வடமேல் மாகாணத்தில் 4,465 பேரும், கிழக்கு மாகாணத்தில் 3,703 பேரும், ஊவா மாகாணத்தில் 2,482 பேரும், வடமத்திய மாகாணத்தில் 1,574 பேரும், வட மாகாணத்தில் 1,314 பேரும் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது மொத்தப் பாதிப்பில் 21.27% ஆகும். கொழும்பு மாவட்டத்தில் 17,765 நோயாளர்களும் (கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 3,613 பேர்), கண்டி மாவட்டத்தில் 6,366 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,953 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 5,841 பேரும், காலி மாவட்டத்தில் 4,936 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 4,860 பேரும் பதிவாகியுள்ளனர்.

தற்போது டெங்கு மரண விகிதம் 0.07% ஆகக் காணப்படுகின்ற அதேவேளை, நாடு முழுவதும் 119 சுகாதார மருத்துவ அதிகாரி  பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ShortNews

கேகாலையில் தாமதமான தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் - நீதி கோருகிறது இலங்கை ஆசிரியர் சங்கம்!



கேகாலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் தாமதமாக வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நீதியை வழங்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ,

புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களின் கல்வி எதிர்காலத்திற்கு மிக முக்கியமானதொன்று என்பதால், இவ்வாறான தவறுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதி குறித்து அதிகாரிகள் அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிரியர்களின் பொறுப்புகள் மற்றும் தற்போதைய வாழ்க்கைச் செலவினங்களைக் கருத்திற் கொண்டு, உயர்தரப் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குப் போதுமான கொடுப்பனவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரியந்த பெர்னாண்டோ மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ShortNews

ஒக்டோபர், நவம்பரில் பலத்தமழைக்கு வாய்ப்பு - எல் நினோ தாக்கத்தால் தீவிரமடையக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை


தற்போது நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்பட்டாலும், இது பரவலான அல்லது கணிசமான மழைவீழ்ச்சி அல்ல எனவும், குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு மட்டுமே வரம்பிற்குட்பட்டதாக இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி கசுன் பஸ்க்குவல் தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சியை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே எதிர்பார்க்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இக்காலப்பகுதியில் நாட்டின் பல பாகங்களுக்கும் பரவலாக மழை கிடைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போது நிலவிவரும் வலுவான 'எல் நினோ' காலநிலை நிலைமை காரணமாக, இம்முறை எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சியானது மிகவும் தீவிரமடைந்து, பலத்த மழையாக மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இக்காலப்பகுதி நெருங்கும்போது இதுகுறித்த விரிவான மற்றும் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகள் வளிமண்டலவியல் திணைக்களத்தால் தொடர்ச்சியாக வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ShortNews

துறைமுக நகரில் குடியேறுவோர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாது - எஸ்.எம். மரிக்கார்!


கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City) எதிர்காலத்தில் குடியேறுவதற்கு திட்டமிடும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுவதால், அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படலாம் என உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் எச்சரித்துள்ளார்.

துறைசார் அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர், துறைமுக நகரத்தில் குடியேறக்கூடியவர்கள் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட போதிலும், அவர்களால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டினார்.

"ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றால், அவர்களால் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வாக்களிக்க முடியும்.

ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அவர்களுக்கு இடம் எதுவும் இல்லை. இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்" என்று தெரிவித்த அவர், துறைமுக நகரத்துக்காக பிரத்தியேகமாக தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும், 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க நிர்வாக மாவட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் மூலம், துறைமுக நகர நிலப்பரப்பு ஏற்கனவே கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் மாவட்ட ரீதியிலான பிரதிநிதித்துவம் தொடர்பான கவலைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர்கள் வாதிட்டனர்.

இதற்கு பதிலளித்த எஸ்.எம். மரிக்கார், வர்த்தமானி அறிவித்தலானது நாடு தழுவிய மற்றும் மாவட்ட ரீதியிலான தேர்தல்களுக்கான சேர்க்கையை உறுதிப்படுத்திய போதிலும், உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதித்துவப் பிரச்சினையை அது தீர்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டால், அது துறைமுக நகரத் திட்டத்தை தாமதப்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

தற்போது அங்கு நிரந்தர வாக்காளர்களாக மக்கள் யாரும் வசிக்கத் தொடங்காத நிலையிலும், எதிர்காலத்தில் இங்கு குடியமரப்போகும் மக்களுக்கான வாக்களிக்கும் உரிமை மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதித்துவம் குறித்தே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இந்த விவாதத்தை எழுப்பியுள்ளார்.

ShortNews

வடக்கு - கிழக்கு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரின் வாக்குறுதி!


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்.

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிவதே இச்சந்திப்பின் பிரதான நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் நான் நேரடியாக தலையீடு செய்து வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

குறித்த பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் அவசியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் தலையீடு செய்வதும், இச்சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

ShortNews

புலமை பரிசில் பரீட்சை பெறுபவர்கள் ஒரு மாத காலத்திற்குள்!


2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் முடிவுகளை, ஒரு மாத காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் நடவடிக்கை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நேற்று (09) இடம்பெற்றது.

இதில் 2 இலட்சத்துக்கு 94 ஆயிரத்து 89 மாணவர்கள் தோற்றி இருந்தனர்.

சிங்கள மொழி மூலம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73 ஆயிரத்து 723 மாணவர்களும் பரீட்சையில் தோற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ShortNews

ஜனாதிபதி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு!



காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தேர்தல் நடத்தப்படவில்லை. அடுத்த ஆண்டிலாவது தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோன்றே , காணி விடுவிப்பு தொடர்பில் இரண்டு வருடங்களாக , காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதியை தமிழ் கட்சிகள் சந்தித்த போதும் , காணி விடுவிப்பு தொடர்பில் முக்கியமாக கூறியிருந்தோம். குறிப்பாக வடக்கு - கிழக்கில் முப்படைகளின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் , மலையக மக்களுக்கு காணி பகிர்ந்தளித்து தொடர்பிலும் பேசினோம்.

யாழ்ப்பாணத்தில், பலாலி, மயிலிட்டி, தையிட்டி போன்ற பிரதேச மக்களும் முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு மக்களும் தமது காணிகளை விடுவிக்குமாறு போராடி வருகின்றனர். அது மாத்திரமின்றி , மன்னார், கிளிநொச்சி, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் வாழ்வாதார நிலங்களை மீட்கத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்து கூறினோம்.

அதற்கு அவர்கள் முப்படைகளிடம் எந்த எந்த காணிகளை விடுவிக்க முடியும் என அறிக்கை ஒன்றினை வழங்குமாறு கூறியுள்ளோம் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அதன் அடிப்படையில் காணி விடுவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என கூறியுள்ளனர்.

மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற எமது நோக்கத்தில் மாற்றமில்லை என அரசாங்கம் கூறி வந்தாலும் , இரண்டு வருடங்களாக இதையே கூறி வருகின்றனர் இது ஏற்புடையதில்லை.

யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்டு சொல்ல கூடிய அளவுக்கு காணிகள் விடுவிக்கப்படவில்லை. ஒரு சில வீதிகளை மாத்திரமே விடுவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக மக்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை .

நாங்களும் போராட்ட களத்தில் நின்றவர்கள் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் , மக்களின் போராட்டங்களை ,கண்டு கொள்ளாமல் இருப்பதும், அவர்களின் கோரிக்கைகளை செவி சாய்க்காது இருக்கின்றமையும் ஏற்றுக்கொள்ள முடியாது.




நாங்கள் இனவாதிகள் அல்ல மதவாதிகள் இல்லை என அரசாங்கம் கூறிக்கொண்டாலும் , செயலில் அவ்வாறு இல்லை என்றே கூற முடியும் என தெரிவித்துள்ளார்.

SHAHNI RAMEES

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட 16 வயது சிறுவன் கைது!

 


மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே அனுமதியின்றி

SHAHNI RAMEES

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது!

 



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்

SHAHNI RAMEES

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை - ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனை

 


உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற

SHAHNI RAMEES

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்!

 


க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின்

SHAHNI RAMEES

பொலிஸ்மா அதிபர் பற்றிய கருத்து - சாகர காரியவசம் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலை!

 

பொலிஸ்மா அதிபர் தொடர்பாக வெளியிட்ட கருத்து

Sunday, August 9, 2026

SHAHNI RAMEES

நீதித்துறை சீர்திருத்தங்கள் குறித்து உலமா சபைக்கும் தெளிவூட்டிய நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார!

 


இலங்கையின் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்புகள்