Our Feeds



Monday, February 2, 2026

Zameera

ஜகத் மனுவர்ணவுக்கு எதிராக இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டது


 தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மற்றொரு நபருக்கு எதிராக இன்று (02) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
Zameera

ராஜபக்ஷ் குழுவுக்கும் அநுர குமாரவின் குழுவுக்குமிடையில் வித்தியாசம் இல்லை - நிரோசன் பாதுக்க


 (எம்.ஆர்.எம்.வசீம்)

தூய்மையான அரசியல் ஒன்றை ஏற்படுத்துவதாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் இருப்பவர்கள், தற்போது நாள்குநாள் ஊழல் மோசடிகளில் சம்பந்தப்பட்டு வருகிறார்கள். ராஜபக்ஷ் குழுவுக்கும் அநுர குமாரவின் குழுவுக்குமிடையில் வித்தியாசம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நிராேசன் பாதுக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழkமை (1) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டை ஆட்சிசெய்துவந்த அனைவரும் ஊழல் மோசடிகாரர்கள் எனவும் தூய்மையான அரசியல் ஒன்றை கட்டியெழுப்ப அதிகாரத்தை வழங்குமாறு தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் மக்கள் உணரும் வகையில் எதனையும் செய்யவில்லை. அதேநேரம் அரசாங்கத்தில் இருப்பவர்கள் நாளுக்கு நாள், ஊழல் மோசடி சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டு வருகிறார்கள். 

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கறுப்புப்புப் பட்டியலில் உள்ள நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரின் வங்கி கடன் அட்டையை பயன்படுத்தி இந்தியாவில் வைத்து ஒரு மில்லியனுக்கு பொருட்கள் கொள்வனவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இல்லைை என்றால் முடியுமானால் அவர் நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும். ஊழல் மோசடி தொடர்பில் இவர்களுக்கும் ராஜபக்ஷ் குழுக்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறதா என கேட்கிறோம்.

சுங்கத்தில் இருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது முதல் தற்போது தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதிவரை பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் அரசாங்கம் அனைத்து விடயங்களையும் அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி, தப்பித்துக்கொள்ளும் நடவடிக்கையையே கையாண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தித்வா அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு 20 இலட்சம் ரூபா வழங்குவதாக அளித்த வாக்குறுதியின் பிரகாரம் அநுராதபுரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 இலட்சம் ரூபா அடங்கி காசோலை ஜனாதிபதி கையளித்திருந்தார்.

ஆனால் அந்த காசாேலைகளை பெற்றவர்கள் வங்கியில் கொடுத்தபோது, அந்த வங்கி கணக்குகளில் பணம் இல்லை என, குறுத்த காசோலைகள் மீள பெறப்பட்டிருக்கின்றன. இவ்வாறு 17 காசோலைகள் மீள திருப்பப்பட்டிருக்கின்றன.

ஆனால் அநுராதபுரம் பிரதேச செயலாளர் இதனை நியாயப்படுத்தும் வகையில், காசோலை வழங்கப்பட்டவர்களின் காணியின் உண்மையான உரிமையாளர்கள் அவர்களா? மற்றும் இன்னும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடவில்லை. அதனால் காசோலைகளை வங்கியில் இடவேண்டாம் என நாங்கள் தெரிவித்தோம் என தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலாளரின் கூற்றின் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி இருப்பது அவர்களின் காணிகளின் உரித்து தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத, ஒப்பந்தம் செய்துகொள்ளாத காசோலையாகும். அப்படியானால் ஜனாதிபதி அதிகாரபூரவமற்ற காசோலைகளையே வழங்கி இருக்கிறார். அனுபவம் இல்லாமையே இதற்கு காரணமாகும்.

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முடியுாது என நாங்கள் ஜனாதிபதி தேர்தலின்போதே தெரிவித்திருந்தோம். தற்போது அது உண்மையாகி வருகிறது. அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டு கூரை தகரம் ஒன்றுக்கு 10 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு செய்தபோது, அவரால் ஒருபோதும் முடியாது என்பதை உணர்ந்து கொண்டாேம். அதேபோல் ஜனாதிபதியின் அமைச்சர்கள் தற்போது ஊழல் மோசடியில் சம்பந்தப்பட்டு வருவதால், நாடு அராஜக நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது என்றார்.

Zameera

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது


 இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் விலையில் சிறியளவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது. எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பேருந்துகளை இயக்குவது சிரமமாகி உள்ளது. முன்னைய பேருந்து கட்டணத் தேசிய கொள்கைக்கு அமைய, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலில் 2 முதல் 3 கிலோமீற்றர் வரை பயணிக்கக்கூடியதாக இருந்தது.

எனினும், தற்போது அந்தத் தூரம் குறைவடைந்துள்ளதாகவும், இப்பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலில் 2 கிலோமீற்றருக்கும் குறைவான தூரமே பயணிக்க முடியும். இதற்கமைய, பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது.குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 5 முதல் 6 ரூபா வரை அதிகரிக்க வேண்டும்.

இங்கு பெரியதொரு சிக்கல் உள்ளது. மிக விரைவில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுக்க நேரிடும். ஏனெனில், வரும் ஜூலை மாதத்திற்கு முன்னதாகவே பேருந்து கட்டண உயர்வு அவசியம் என்ற கோரிக்கையை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது. இலங்கையில் குறுகிய தூரப் பேருந்து சேவைகளே அதிகம் இயங்குகின்றன. இலங்கையில் 13,000 முதல் 14,000 வரையிலான பேருந்துகள் உள்ளன. இதில் சாதாரணமாக 6,000 முதல் 7,000 மேலதிக பேருந்துகள் உள்ளன. இப்போது கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்து போக்குவரத்து செய்வது சாத்தியமற்றதாகிவிட்டது.

முன்பு பேருந்து கட்டணத் தேசிய கொள்கையில்,கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலில் ஓடக்கூடிய தூரம் 2.5 அல்லது 3 கி.மீ என்றே கணக்கிடப்பட்டிருந்தது. இப்போது அது மேலும் குறைந்து. 2 கி.மீ கூட ஓட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலாகும்.

அரசாங்கம் வந்து இப்போது ஒன்றரை வருடங்கள் ஆகிறது. அரசாங்கம் என்ன செய்தது? அமைச்சர் பிமல் ரத்நாயக்க பொதுப் போக்குவரத்துச் சேவைக்கு என்ன செய்தார்? அவர்களுடைய தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிக மோசமான ஊழல்வாதிகள் என்பதை நாங்கள் பொறுப்புடன் கூறுகிறோம். பொதுப் போக்குவரத்து சேவையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் சில மாதங்களில் கட்டண உயர்வைக் கோருவோம். கடந்த காலம் முழுவதும் நாங்கள் பொறுமையாக இருந்தோம்.

 ஏனென்றால் பொதுப் போக்குவரத்து சேவை முற்றாகச் சீர்குலைந்துள்ளது. தனியார் பேருந்து சேவையை ஒழுங்குபடுத்துவது நாங்கள் அல்ல என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பேருந்து கட்டணம் குறித்து மீளாய்வு செய்யுமாறு நாங்கள் கோருகிறோம். ஏனெனில் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. குறைந்தபட்சம் குறுகிய தூர சேவைகளுக்கு, ஆரம்பக் கட்டணத்தை 5 அல்லது 6 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என்றார்.

SHAHNI RAMEES

திருகோணமலை சம்பவம் - கைதான தேரர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்...


 திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை

Zameera

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்


 வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பின் போதே அவர் குறித்த பிரதேச சபையின் தவிசாளராக தெரிவாகியுள்ளார். 

வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் கிடைத்துள்ளன. 

இதன்படி, ஒரு மேலதிக வாக்கினால் வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. 

வெலிகம பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய லசந்த விக்ரமசேகர கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி பிரதேச சபையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ அறையில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து அப்பதவி வெற்றிடமாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


SHAHNI RAMEES

வெனிசுவேலாவுக்குச் சென்றார் அமெரிக்க தூதுவர்!

 


வெனிசுவேலாவில் 07  ஆம் ஆண்டுகளுக்கு பின்னர்

Zameera

ஐஸ் போதைப்பொருடன் இருவர் கைது


புத்தளம் - மெல்லன்குளம் பகுதியில் மேற்கொள்ளபட்ட சோதனை நடவடிக்கையின்போது, 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 524 கிராம் ஐஸ் போதைப்பொருடன் நேற்று (01) இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஆனைமடுவ பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடைய தம்பதியினர் இப்பாகமுவ பகுதியில் உள்ள தமது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


கிடைக்கபெற்ற இரகசிய தகவலினடிப்படையில், சுமார் ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட இரகசிய கண்காணிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, போதைப்பொருளைக் கடத்திச் சென்றபோதே குறித்த தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Zameera

துப்பாக்கி மாயமான சம்பவம் - 2 பொலிஸ் அதிகாரிகள் கைது


 மத்துகம பொலிஸ் நிலையத்தில் தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


மத்துகம பொலிஸ் நிலையத்தில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றும் 10 தோட்டாக்களும் காணாமல் போனதாக நேற்று (1) அறிவிக்கப்பட்டது. 

மத்துகம பொலிஸ் நிலையத்தின் உப சேவைப் பொறுப்பில் இருந்த கைத்துப்பாக்கியும், 10 தோட்டாக்கள் அடங்கிய மெகஸின் ஒன்றுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

ஆவணங்களைப் பரிசோதித்த போதே, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் அவை காணாமல் போயுள்ள விடயம் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

Zameera

அரச வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்!


 அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02) காலை முதல் தீவிரப்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 


இதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு சாதகமான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், இன்று முதல் பின்வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

வைத்தியசாலைகளில் இல்லாத மருந்து வகைகள் மற்றும் உபகரணங்களை வெளியில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு நோயாளர்களுக்குப் பரிந்துரைத்து துண்டுகளை வழங்குவதை நிறுத்துதல். 

வைத்தியசாலைகளில் மேற்கொள்ள முடியாத ஆய்வகப் பரிசோதனைகளை வெளியில் செய்துகொள்ளுமாறு நோயாளர்களுக்குப் பரிந்துரைப்பதைத் தடுத்தல். 

அரசியல் குழுக்களினால் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்கள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் தன்னார்வமாகப் பங்கேற்பதில் இருந்து விலகுதல். 

தேவையான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் இன்றி, வைத்தியசாலை கட்டமைப்பில் புதிதாகத் திறக்கப்படும் நோயாளர் விடுதிகள் மற்றும் அலகுகளுக்கு வைத்தியர்களை நியமிப்பதைத் தடுத்தல். 

நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைப் பேணத் தேவையான போதிய வசதிகள் மற்றும் உதவியாளர்கள் இன்றி நோயாளர்களைப் பரிசோதிப்பதில் இருந்து விலகுதல். 

நிபுணத்துவ வைத்தியர்கள் தாங்கள் நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையில் மாத்திரம் சேவையாற்றுவதுடன், நிபுணத்துவ வைத்தியர்கள் இல்லாத ஏனைய வைத்தியசாலைகளுக்குச் சென்று மேலதிக கடமைகளை ஆற்றுவதில் இருந்து விலகுதல். 

போன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி, தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 26 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 

இதன்போது, சுகாதார அமைச்சருக்கு தீர்வுகளை முன்வைக்க 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், அமைச்சின் தரப்பில் இருந்து சாதகமான பதில் எவையும் கிடைக்கவில்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து கடந்த 31 ஆம் திகதி கூடிய சங்கத்தின் நிறைவேற்று குழு கூட்டத்தில், இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை தீவிரப்படுத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Zameera

இஞ்சி விலை கடும் உயர்வு


 உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை  உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு கிலோகிராம்  இஞ்சி முன்பு ரூ.300 முதல் ரூ.500 வரை விற்கப்பட்ட விலையில்  தற்போது   ஒரு கிலோகிராம் இஞ்சி ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உயர்வடைந்துள்ளதாக  மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

டிட்வா சூறாவளியால் இஞ்சி சாகுபடிக்கு ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து சந்தையில்  இஞ்சி விநியோகத்தின் பற்றாக்குறையே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகும்.

Zameera

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போது நாடு பாரிய கலாசார சீரழிவை எதிர்நோக்கி வருகிறது


 வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போது நாடு பாரிய கலாசார சீரழிவை எதிர்நோக்கி வருவதாக அஸ்கிரி தரப்பின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் நேற்று (31) நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் கீழே வருமாறு:

“பாரிய கலாசார சீரழிவுக்கு எதிராக மகா சங்கத்தினர் மௌனம் காக்கக் கூடாது” – அஸ்கிரி அனுநாயக்கர்

தற்போதைய சூழலில் மகா சங்கத்தினர், கலாசாரம் மற்றும் வரலாறு உள்ளிட்ட பல துறைகளுக்கு வழங்கப்பட்டு வரும் கவனிப்பு மற்றும் மரியாதை குறித்து அனைவருக்கும் ஒரு பாரிய சிக்கல் எழுந்துள்ளதாக அனுநாயக்கர் சுட்டிக்காட்டினார்.

உரையின் முக்கிய அம்சங்கள்:

• பௌத்த பிக்குகளின் பொறுப்பு:

நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் கலாசார சீரழிவுகளுக்கு மத்தியில் பௌத்த பிக்குகள் மௌனமாக இருந்தால், அதற்கு எதிராகப் பேசுவதற்கு வேறு எவரும் இல்லை. எனவே, எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில் பிக்குகள் பெரும் பங்காற்ற வேண்டியுள்ளது.

• அச்சுறுத்தல்களுக்கு அஞ்சத் தேவையில்லை:

பிக்குகள் எவ்வித மிரட்டல்களுக்கும் அல்லது அச்சுறுத்தல்களுக்கும் அஞ்ச வேண்டியவர்கள் அல்ல என்பதை அவர் வலியுறுத்தினார். “தேவதத்தர்கள் இருந்த காரணத்தினாலேயே புத்தரின் பண்புகள் இவ்வளவு அழகாக வெளிப்பட்டன” என்று அவர் இதன்போது உதாரணம் காட்டினார்.

• கலாசாரம் மற்றும் வரலாற்றுக்கான இடம்:

“இந்த உன்னதமான புண்ணிய பூமி எமக்கு நேற்றும், இன்றும், என்றும் பெறுமதிமிக்கது. எமது வேர்களைத் தேடியே நாம் இங்கு வந்துள்ளோம். ஆனால் இந்த பூமிக்கும், இங்கு வாழும் மகா சங்கத்தினருக்கும், சாசனத்திற்கும், கலை மற்றும் வரலாற்றுக்கும் இன்று வழங்கப்பட்டுள்ள இடம் குறித்து நாம் எந்தளவுக்கு மகிழ்ச்சியடைய முடியும் என்ற கேள்வி எம் அனைவரிடமும் உள்ளது,” என அவர் தெரிவித்தார்.

நிகழ்வின் பின்னணி:

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் முன்னாள் விகாராதிபதி வணக்கத்திற்குரிய வலவாஹெங்குனவெவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரதனபால தேரரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நூறு பிக்குகளுக்கு வழங்கப்பட்ட ‘சங்கගත தக்ஷிணா’ நிகழ்விலும், தற்போதைய விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனவெவே தம்மரதன நாயக்க தேரர் எழுதிய நூலொன்றின் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Zameera

இன்றைய வானிலை !

 


வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (2) அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சில இடங்களில் சுமார் 50 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Sunday, February 1, 2026

Zameera

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் – இரண்டாவது நாளாகவும் களத்தில் சஜித்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) இரண்டாவது நாளாகவும் கலந்து கொண்டார்.

7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 7 நாட்களைப் பூர்த்தி செய்கிறது.

அவ்விடத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர், அக்குழுவினரின் சுகதுக்கங்களை விசாரித்ததுடன், பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினார்:

“எனதும், ஐக்கிய மக்கள் சக்தியினதும், ஐக்கிய மக்கள் கூட்டணியினதும், அதேபோன்று கட்சி பேதமின்றி அனைவரினதும் உச்சபட்ச ஆதரவை இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்காகவே நான் இன்றும் இங்கு வந்தேன்.

5 முதல் 10 வருடங்கள் பிள்ளைகளுக்குக் கற்பித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் சேவையில் இணைய உரிமையில்லையா? ஏன் அவர்களுக்கு ஆசிரியர் சேவையில் இணையத் தடை விதிக்கப்பட்டுள்ளது? மிகவும் தெளிவான தீர்வொன்று உள்ளது.

அரசாங்கத்திற்கும் இந்தத் தீர்வு தெரியும். ஆனால், தற்போதைக்கு அரசாங்கம் உறுதியளித்ததை நிறைவேற்றாமல் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது.

ஏன் இவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்கள்? அரசாங்கம் பொய் சொன்னதால்தானே… இந்த ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாம் எப்போதும் இவர்களுடன் இருப்போம்.”